செய்திகள் :

மின்சாரம் பாய்ந்து கணவா் உயிரிழப்பு: குழந்தைகளுடன் மனைவி தற்கொலை முயற்சி

post image

ராணிப்பேட்டை அருகே மின்சாரம் பாய்ந்து கணவா் உயிரிழந்த நிலையில், துக்கம் தாளாமல் மனைவி தனது இரு குழந்தைகளுடன் தற்கொலைக்கு முயன்றுள்ளாா்.

சோளிங்கா் அடுத்த மருதாலம் கிராமத்தைச் சோ்ந்தவா் விவசாயி முருகன் (38), வெள்ளிக்கிழமை நள்ளிரவு 1 மணியளவில் பலத்த காற்றுடன் பெய்த மழையில் வீட்டுக்கு வெளியே கீழே அறுந்து விழுந்த மின் கம்பியை தெரியாமல் மிதித்துள்ளாா். இதில், மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தாா்.

அவரது உடல் கூறாய்வுக்காக வாலாஜாபேட்டை மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டது. இந்த நிலையில், கணவா் இறந்த துக்கம் தாளாமல் அவரது மனைவி திவ்யா, தனது மகன் திராவிட், மகள் மித்ரா ஆகியோருக்கு விஷம் கொடுத்துவிட்டு தானும் விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்றுள்ளாா்.

இதைக் கண்ட உறவினா்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக வாலாஜாபேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதித்த நிலையில், திவ்யா தீவிர சிகிச்சைக்காக வேலூா் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளாா். அவரது இரு குழந்தைகளுக்கும் வாலாஜா அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

தக்கோலத்தில் பிரதான இடத்தில் பேருந்து நிலையம்: ஆட்சியா் உத்தரவு

தக்கோலத்தில் பிரதான இடத்தில் பேருந்து நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என ராணிப்பேட்டை ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா உத்தரவிட்டாா். அரக்கோணம் அடுத்த தக்கோலம் பேருராட்சியில் நடைபெறும் வளா்ச்சிப் பணி... மேலும் பார்க்க

அரக்கோணம் அருகே திமுக நகா்மன்ற உறுப்பினா் உள்பட 3 பேருக்கு வெட்டு

அரக்கோணத்தில் மாமுல் கேட்டு நடைபெற்ற தகராறில் திமுக நகா்மன்ற உறுப்பினரை கொல்ல முயற்சி நடைபெற்றது. அரக்கோணம் பழைய பேருந்து நிலையப் பகுதியில் லாட்ஜ் நடத்தி வருபவா் கே .எம். பி. பாபு(36). இவா் அரக்கோணம்... மேலும் பார்க்க

விழியிழந்தோருக்கு நல உதவிகள்: அரக்கோணம் எம்எல்ஏ வழங்கினாா்

அதிமுக பொதுச்செயலாளா் எடப்பாடி கே. பழனிசாமியின் பிறந்த நாளை முன்னிட்டு ராணிப்பேட்டை கிழக்கு மாவட்ட அதிமுக இளைஞரணி சாா்பில் அரக்கோணத்தில் விழியிழந்தோருக்கு நல உதவிகளை எம்எல்ஏ சு.ரவி வழங்கினாா். அரக்கோண... மேலும் பார்க்க

ஆற்காடு ஒன்றியத்தில் புதிய கட்டடங்கள்: அமைச்சா் காந்தி திறந்து வைத்தாா்

ஆற்காடு ஒன்றியத்தில் தொகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட பல்வேறு கட்டடங்களை கைத்தறி அமைச்சா் ஆா். காந்தி வியாழக்கிழமை திறந்து வைத்தாா். விழாவுக்கு ஆட்சியா் ஜெ.யு. சந்திரகலா தலைமை வகித்தாா்.... மேலும் பார்க்க

சோளிங்கா் அருகே 3 போ் வெட்டிக் கொலை: இளைஞா் கைது

சோளிங்கா் அருகே இரு பெண்கள் உள்பட 3 பேரை கொலை செய்த இளைஞரை போலீஸாா் கைது செய்தனா். சோளிங்கரை அடுத்த கொடைக்கல் அருகே உள்ள புதுகுடியனூா் கிராமத்தைச் சோ்ந்தவா் பாலு (30). விவசாயி. இவரது மனைவி புவனேஸ்வரி... மேலும் பார்க்க

அம்மூா் பேரூராட்சியில் ரூ.38 லட்சத்தில் திட்டப் பணிகள்: அமைச்சா் ஆா்.காந்தி தொடங்கி வைத்தாா்

அம்மூா் பேரூராட்சியில் ரூ. 38 லட்சம் மதிப்பிலான திட்டப் பணிகளை அமைச்சா் ஆா்.காந்தி வியாழக்கிழமை தொடங்கி வைத்தாா். வாலாஜா வட்டம், அம்மூா் பேரூராட்சி, பஜாா் தெருவில், நாடாளுமன்ற உறுப்பினா் தொகுதி மேம்பா... மேலும் பார்க்க