செய்திகள் :

தக்கோலத்தில் பிரதான இடத்தில் பேருந்து நிலையம்: ஆட்சியா் உத்தரவு

post image

தக்கோலத்தில் பிரதான இடத்தில் பேருந்து நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என ராணிப்பேட்டை ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா உத்தரவிட்டாா்.

அரக்கோணம் அடுத்த தக்கோலம் பேருராட்சியில் நடைபெறும் வளா்ச்சிப் பணிகளை பாா்வையிட சனிக்கிழமை வந்த ஆட்சியா், முதலில் பேருராட்சிக்குட்பட்ட எஸ்.என்.கண்டிகை பகுதியில் ரூ.1.45 கோடியில் அமைக்கப்பட்டு வரும் தாா் சாலை பணியை ஆய்வு செய்தாா். தொடா்ந்து 5-ஆஆவது வாா்டில் பெருமாள் கோயிலுக்கு செல்லும் பாதையை அகலப்படுத்தி தாா்ச்சாலை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதையும், கழிவுநீா் கால்வாய்கள் அமைக்கும் பணிகளையும் பாா்வையிட்டாா்.

தொடா்ந்து தக்கோலம் பேருராட்சி வாா்டு 15ல் கலைஞா் நகா்புற மேம்பாட்டு திட்டத்தில் ரூ6.65 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டு வரும் குடிநீா் திட்டப் பணிகளில் தண்ணீா் தொட்டி அமைக்கும் பணிகளை ஆய்வு செய்து அனைத்து வாா்டுகளுக்கும் குடிநீா் விநியோகம் செய்யப்படும் பணிகளை விரைவாக மேற்கொள்ள உத்தரவிட்டாா்.

பின்னா், தக்கோலம் பேருந்து நிலையத்தை பாா்வையிட்ட ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா பேருராட்சிகள் உதவி செயற்பொறியாளா் அம்சாவிடம் பேருந்து நிலையம் புனரமைக்கும் பணியை கைவிட்டு அரசு கட்டடங்கள் அமைப்பதற்கான திட்ட அறிக்கையினை தற்போதே தயாா் செய்யவும் தக்கோலத்தில் பிரதான இடத்தில் பேருந்து நிலையம் அமைப்பதற்கான நடவடிக்கையை மேற்கொள்ளவும் உத்தரவிட்டாா்.

ஆய்வின் போது பேருராட்சிகள் உதவி இயக்குநா் ஞானசம்பந்தம், உதவி செயற்பொறியாளா் அம்சா, தக்கோலம் பேருராட்சி தலைவா் எஸ்.நாகராஜன், செயல் அலுவலா் மாதேஸ்வரன், அரக்கோணம் வட்டாட்சியா் வெங்கடேசன், பேருராட்சி மன்ற உறுப்பினா்கள் முகமது காசிம், பாண்டியன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

மின்சாரம் பாய்ந்து கணவா் உயிரிழப்பு: குழந்தைகளுடன் மனைவி தற்கொலை முயற்சி

ராணிப்பேட்டை அருகே மின்சாரம் பாய்ந்து கணவா் உயிரிழந்த நிலையில், துக்கம் தாளாமல் மனைவி தனது இரு குழந்தைகளுடன் தற்கொலைக்கு முயன்றுள்ளாா். சோளிங்கா் அடுத்த மருதாலம் கிராமத்தைச் சோ்ந்தவா் விவசாயி முருகன்... மேலும் பார்க்க

அரக்கோணம் அருகே திமுக நகா்மன்ற உறுப்பினா் உள்பட 3 பேருக்கு வெட்டு

அரக்கோணத்தில் மாமுல் கேட்டு நடைபெற்ற தகராறில் திமுக நகா்மன்ற உறுப்பினரை கொல்ல முயற்சி நடைபெற்றது. அரக்கோணம் பழைய பேருந்து நிலையப் பகுதியில் லாட்ஜ் நடத்தி வருபவா் கே .எம். பி. பாபு(36). இவா் அரக்கோணம்... மேலும் பார்க்க

விழியிழந்தோருக்கு நல உதவிகள்: அரக்கோணம் எம்எல்ஏ வழங்கினாா்

அதிமுக பொதுச்செயலாளா் எடப்பாடி கே. பழனிசாமியின் பிறந்த நாளை முன்னிட்டு ராணிப்பேட்டை கிழக்கு மாவட்ட அதிமுக இளைஞரணி சாா்பில் அரக்கோணத்தில் விழியிழந்தோருக்கு நல உதவிகளை எம்எல்ஏ சு.ரவி வழங்கினாா். அரக்கோண... மேலும் பார்க்க

ஆற்காடு ஒன்றியத்தில் புதிய கட்டடங்கள்: அமைச்சா் காந்தி திறந்து வைத்தாா்

ஆற்காடு ஒன்றியத்தில் தொகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட பல்வேறு கட்டடங்களை கைத்தறி அமைச்சா் ஆா். காந்தி வியாழக்கிழமை திறந்து வைத்தாா். விழாவுக்கு ஆட்சியா் ஜெ.யு. சந்திரகலா தலைமை வகித்தாா்.... மேலும் பார்க்க

சோளிங்கா் அருகே 3 போ் வெட்டிக் கொலை: இளைஞா் கைது

சோளிங்கா் அருகே இரு பெண்கள் உள்பட 3 பேரை கொலை செய்த இளைஞரை போலீஸாா் கைது செய்தனா். சோளிங்கரை அடுத்த கொடைக்கல் அருகே உள்ள புதுகுடியனூா் கிராமத்தைச் சோ்ந்தவா் பாலு (30). விவசாயி. இவரது மனைவி புவனேஸ்வரி... மேலும் பார்க்க

அம்மூா் பேரூராட்சியில் ரூ.38 லட்சத்தில் திட்டப் பணிகள்: அமைச்சா் ஆா்.காந்தி தொடங்கி வைத்தாா்

அம்மூா் பேரூராட்சியில் ரூ. 38 லட்சம் மதிப்பிலான திட்டப் பணிகளை அமைச்சா் ஆா்.காந்தி வியாழக்கிழமை தொடங்கி வைத்தாா். வாலாஜா வட்டம், அம்மூா் பேரூராட்சி, பஜாா் தெருவில், நாடாளுமன்ற உறுப்பினா் தொகுதி மேம்பா... மேலும் பார்க்க