செய்திகள் :

காட்பாடி சாலையில் செயல்படாத சிக்னல்கள்; மக்கள் பாதுகாப்பை உறுதிப்படுத்துவார்களா அதிகாரிகள்?!

post image

வேலூர் மாவட்டத்தில் இருந்து ஆந்திர மாநில பகுதியை இணைக்கும் பிரதான சாலையாக காட்பாடி செல்லும் சாலை இருக்கிறது. இந்நிலையில் வேலூரில் இருந்து காட்பாடி ரயில் நிலையம் செல்வதற்காக மக்கள் அதிகம் பயன்படுத்தும் இந்த சாலையில் சிக்னல் கோளாறால், சிக்னல் வேலை செய்யாமல் இருப்பது வாகன ஓட்டிகளிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. காட்பாடி ரயில் நிலையத்தை இணைக்கும் பிரதான சாலை என்பதால் இந்த சாலையில் போக்குவரத்து நெரிசல் அதிகம். வேலூரில் இருந்து ஆந்திர மாநில பகுதியான சித்தூர், திருப்பதி உள்ளிட்ட பகுதிகளை இணைக்கும் சாலையாக இருப்பதால் இந்த சாலையை கனரக வாகனங்கள் அதிகம் பயன்படுத்துகின்றன. காலை மற்றும் மாலை நேரங்களில் இந்த சாலையை கடக்க முடியாதபடி அதிகப்படியான போக்குவரத்து நெரிசல் ஏற்படும். இந்நிலையில் வேலூர் மாநகர பகுதியில் இருக்கும்  சில்க்  மில், காந்தி நகர், ஓடை பிள்ளையார் கோயில், பாரதி நகர் உள்ளிட்ட பகுதிகளில்  உள்ள சிக்னல்கள் கடந்த சில மாதங்களாக வேலை செய்யவில்லை என்று வாகன ஓட்டிகள் குற்றம்சாட்டுகின்றனர். சிக்னல் வேலை செய்யாத பகுதியான காந்தி நகர் பகுதியில் மட்டும் போக்குவரத்தை சீர் செய்வதற்காக போக்குவரத்து காவலர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். ஆனால்  சில்க் மில், ஓடை பிள்ளையார் கோயில், பாரதி நகர் உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் சிக்னலும் வேலை செய்யவில்லை, போக்குவரத்து காவலர்களும் போக்குவரத்து சீர் செய்ய வரவில்லை என வாகன ஓட்டிகள் குற்றம் சாட்டுகின்றனர். 

இது குறித்து பேசிய வாகன ஓட்டி ஒருவர், “காட்பாடி ரயில்வே ஸ்டேஷன் செல்வதற்கான முக்கிய சாலையாக காட்பாடி சாலை உள்ளது. இந்த சாலையானது காலை முதல் மாலை வரை மிகவும் பரபரப்பாகத்தான் இருக்கும். இந்த சாலையில் இருக்கும் முக்கிய ஜங்ஷன் பகுதிகளில் சிக்னல்கள் கடந்த சில மாதங்களாக வேலை செய்யவில்லை. இதனால் போக்குவரத்து நெரிசல் அதிகம் உள்ள நேரங்களில் இந்த சாலையை கடக்கவே முடியவில்லை. சிக்னல் வேலை செய்யாததால் ஜங்ஷன் பகுதிகளில் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்துடனே பயணிக்க வேண்டியதாக உள்ளது. ஒரு சில நேரத்தில் விபத்து ஏற்பட்டு விடுமோ என்ற அச்சத்துடனே பாதசாரிகளும், வாகன ஓட்டிகளும் சாலையை கடக்கின்றனர். எனவே செயல்படாமல் இருக்கும் இந்த சிக்னல்களை சரி செய்ய வேண்டும்” என்று கூறினார். 

சில்க் மில், காந்தி நகர், ஓடை பிள்ளையார் கோயில், பாரதி நகர் உள்ளிட்ட முக்கிய பகுதிகளில்  உள்ள செயல்படாமல் இருக்கும் சிக்னல்களை சரி செய்து சாலையில் பயணிப்போரின் பாதுகாப்பினை உறுதிப்படுத்துவார்களா அதிகாரிகள்? 

திருப்பத்தூர்: அடிப்படை வசதிகளின்றி அல்லாடும் ஐயங்கொல்லை மக்கள்; கோரிக்கைக்கு செவி சாய்க்குமா அரசு?

திருப்பத்தூர் அருகே உள்ள ஆண்டியப்பனூர் பஞ்சாயத்தில் 29 கிராமங்களில் ஒன்றான ஐயங்கொல்லையில் 16 குடும்பங்களைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். காப்புக்காட்டில் அமைந்த இந்த கிராமத்திற்கு ... மேலும் பார்க்க

ஊட்டி: ``உதயசூரியனுக்கு ஓட்டு போடுங்க'' - மலர் அரியணையில் அமர்ந்து வாக்கு சேகரித்த முதல்வர் ஸ்டாலின்

நீலகிரி கோடை விழாவின் மிக முக்கிய நிகழ்வான ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் 127 - வது மலர் கண்காட்சி இன்று காலை (15- 05 - 2025 ) தொடங்கி மே மாதம் 25 - ம் தேதி வரை நடைபெற இருக்கிறது. ஊட்டியில் முதல்வர் ... மேலும் பார்க்க

`ஜனாதிபதி, ஆளுநருக்கு காலக்கெடு விதிக்க முடியுமா' - உச்ச நீதிமன்றத்திடம் திரௌபதி முர்மு 14 கேள்விகள்

தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காதது தொடர்பாக, ஆளுநருக்கெதிராக தமிழக அரசு தொடுத்த வழக்கில், 2 நீதிபதிகள் கொண்ட உச்ச நீதிமன்ற அமர்வு, அரசியலமைப்புச் சட்டத்... மேலும் பார்க்க

பொள்ளாச்சி: `நீதிக்காக துணிச்சலுடன் போராடிய பெண்கள்..' - கூடுதலாக ரூ.25 லட்சம் அறிவித்த முதல்வர்

கோவை மாவட்டம், பொள்ளாச்சியில் கடந்த 2019-ம் பாலியல் வன்கொடுமை சம்பவம் தொடர்பாக வெளியான வீடியோ நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.பின்னர், இத்தகைய கொடூர சம்பவத்தில் ஈடுபட்ட திருநாவுக்கரசு, ... மேலும் பார்க்க

சென்னை: தயார் நிலையில் 35 மின்சாரப் பேருந்துகள்; 20 இடங்களில் சார்ஜிங் மையங்கள் | Photo Album

BR Gavai: 40 ஆண்டுகால சட்டப் பணி.. உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாகப் பதவியேற்ற முதல் பௌத்தர்!Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxsவணக்கம்,B... மேலும் பார்க்க

யானைகளுக்கு கரும்பு, பாகன்களுக்கு குடியிருப்பு! - முதல்வர் ஸ்டாலின் முதுமலை ட்ரிப் அப்டேட்ஸ்..

நீலகிரி கோடை விழாவின் மிக முக்கிய நிகழ்வான 127 - ம் ஆண்டு ஊட்டி மலர் கண்காட்சியை நாளை ( 15-05-2025) காலை தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின். ஊட்டியில் உள்ள அரசு விருந்தினர் மாளிகையில் தங்கியிருக்... மேலும் பார்க்க