செய்திகள் :

`ஜம்மு & காஷ்மீர் மக்களுக்கு என்னுடைய சல்யூட்; பாகிஸ்தானால் இதை மறக்க முடியாது!' - ராஜ்நாத் சிங்

post image

மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று ஶ்ரீநகரில் ராணுவ வீரர்கள் முன்னிலையில் உரையாற்றினார்.

அப்போது அவர் பேசியதாவது...

"உங்களை (ராணுவ வீரர்கள்) காண்பதில் நான் பெருமை கொள்கிறேன். பிரதமர் நரேந்திர மோடியின் தலைமை மற்றும் வழிகாட்டுதலின் கீழ், ஆபரேஷன் சிந்தூரில் நீங்கள் செய்த அனைத்தின் குறித்தும் ஒட்டுமொத்த நாடுமே பெருமை கொள்கிறது.

நான் பாதுகாப்புத் துறை அமைச்சர் ஆவதற்கு முன்பு நான் ஒரு இந்தியக் குடிமகன். பாதுகாப்புத் துறை அமைச்சராக இருந்தாலும், ஓர் இந்தியக் குடிமகனாக உங்களுக்கு நன்றி தெரிவிக்க இங்கு வந்துள்ளேன்.

இந்திய ராணுவ வீரர்களுடன் ராஜ்நாத் சிங்
இந்திய ராணுவ வீரர்களுடன் ராஜ்நாத் சிங்

பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு, ஜம்மு & காஷ்மீர் மக்கள் பாகிஸ்தான் மற்றும் தீவிரவாதிகளிடம் கோபம் காட்டிய விதத்திற்காக ஜம்மு & காஷ்மீர் மக்களுக்கு என்னுடைய சல்யூட்.

நான் இங்கு எதிரிகளை அழித்த எனர்ஜியை உணர வந்துள்ளேன். நீங்கள் (ராணுவ வீரர்கள்) பாகிஸ்தானைச் சேர்ந்த தீவிரவாதிகளுக்கு கொடுத்த பதிலடியை அவர்களால் எப்போதுமே மறக்க முடியாது.

தீவிரவாதம் என்னும் நோய்க்கும், ஆபரேஷன் சிந்தூர் போன்ற மருத்துவம் நிச்சயம் அவசியம்" என்று கூறினார்.

சர்வதேச நாணய நிதியம் பாகிஸ்தானுக்கு கடன் கொடுத்தது தொடர்பாக பேசுகையில்...

"நமது நாடு சர்வதேச நாணய நிதியத்திற்கே கடன் வழங்கும் பட்டியலில் இருக்கிறது. அப்போது தான், சர்வதேச நாணய நிதியம் ஏழை நாடுகளுக்கு கடன் வழங்க முடியும். ஆனால், பாகிஸ்தான் இன்னும் கடன் வாங்கி கொண்டிருக்கிறது" என்று கூறினார்.

இதை குறிக்கையில் பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் படம் ஒன்றின் வசனமான, "பாகிஸ்தான் எங்கு நிற்கிறதோ, அங்கே இருந்து யாசகர்களின் வரிசை தொடங்குகிறது" என்பதை மேற்கோள்காட்டினார்.

Supreme Court -க்கு Droupadi Murmu -ன் 14 கேள்விகள்- Stalin கண்டனம் | BJP |Imperfect Show 15.5.2025

இன்றைய இம்பர்ஃபெக்ட் ஷோ ஃவில்,* AIR FORCE விமானத்தில் பறந்தபடி மீண்டும் ட்ரம்ப் பேச்சு!* பகல்காம் தாக்குதல்: ஐ.நாவிடம் ஆதாரத்தைக் கொடுத்து இந்தியா!* The Resistance Front - ஐ.நா-வில் இந்தியா முறையீடு?*... மேலும் பார்க்க

Turkey: 'நோ பர்மிஷன்' - பாகிஸ்தானுக்கு உதவிய துருக்கி; இந்தியாவின் நடவடிக்கை!

கடந்த மே 7 டு மே 10-ம் தேதி இந்தியா - பாகிஸ்தானுக்கு இடையே இருந்த பதற்ற நிலையில், பாகிஸ்தானுக்கு மிகுந்த ஆதரவை வழங்கியிருந்தது துருக்கி. இதற்கு பதிலடி தருவது போல, இந்தியாவில் உள்ள துருக்கி நிறுவனத்தின... மேலும் பார்க்க

`பிரதமர் மோடியின் போர் ராஜ தந்திரத்தை உலக நாடுகள் பாராட்டுகின்றன!’ – புகழும் புதுச்சேரி அதிமுக

புதுச்சேரி அ.தி.மு.க-வின் மாநில செயலாளர் அன்பழகன் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், ``புதுச்சேரி கவர்னர் கைலாஷ்நாதன் பதவியேற்றதில் இருந்து, அரசு அனுப்பும் அனைத்து மக்கள் நலத்திட்டங... மேலும் பார்க்க

Trump: "இந்தியா - பாக். பிரச்னையை நான்தான் சரிசெய்தேன் என்று கூறவில்லை, ஆனால்..." - ட்ரம்ப்

பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியான இந்தியாவின் 'ஆபரேஷன் சிந்தூருக்கு' பின், பாகிஸ்தான் இந்தியா மீது தாக்குதல் நடத்தியது. பதிலுக்கு, இந்தியாவும் தாக்குதல் நடத்த... இந்தியா - பாகிஸ்தான் எல்லையில் மிகுந்த ... மேலும் பார்க்க

தூத்துக்குடி: அரசு மருத்துவமனையில் மது போதையில் நோயாளிகளுக்கு சிகிச்சை; வெளியேற்றப்பட்ட மருத்துவர்!

தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நாள்தோறும் நூற்றுக்கணக்கான நோயாளிகள், உள் மற்றும் புற நோயாளிகளாக சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் இன்று புற நோயாளிகள் பிரிவில் சிகிச்சை பெற... மேலும் பார்க்க

Sofiya Qureshi: `என்ன மாதிரியான கருத்து இது.. மன்னிப்பு கேளுங்கள்'- பாஜக அமைச்சரைக் கண்டித்த நீதிபதி

பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடியாக, பாகிஸ்தானில் இருக்கும் தீவிரவாதிகள் முகாம்கள் மீது ‘ஆபரேஷன் சிந்தூா்’ நடவடிக்கையை இந்தியா மேற்கொண்டது. அதைத் தொடா்ந்து, பாகிஸ்தான் தாக்குதல்களையும் இந்தியா சாதூர்யம... மேலும் பார்க்க