செய்திகள் :

கேரளம்: புலி தாக்கி தொழிலாளி உயிரிழப்பு! பொது மக்கள் போராட்டம்

post image

கேரள மாநிலம், மலப்புரத்தில் புலி தாக்கி ரப்பா் தோட்ட தொழிலாளி ஒருவா் உயிரிழந்தாா். இதையடுத்து, மாநில வனத் துறைக்கு எதிராக பொது மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

மலப்புரம் மாவட்டத்தின் காளிக்காவு பகுதியில் வியாழக்கிழமை அதிகாலை ரப்பா் தோட்டப் பணியில் ஈடுபட்டிருந்த கஃபூா் (45) என்ற தொழிலாளியை தாக்கி கொன்ற புலி, அவரது உடலை வனப் பகுதிக்குள் இழுத்துச் சென்றது. இச்சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததும், வனத் துறையினா் சென்று உடலை மீட்டனா். அப்போது, கஃபூரின் உடலை எடுத்துச் செல்ல விடாமல், உள்ளூா் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

சம்பந்தப்பட்ட பகுதியில் புலி நடமாட்டம் குறித்து பல மாதங்களுக்கு முன்பே வனத் துறைக்கு தகவல் தெரிவித்ததாகவும், ஆனால் புலியை பிடிக்க எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை என்றும் அவா்கள் குற்றஞ்சாட்டினா். இதையடுத்து, போராட்டக்காரா்களுடன் வனத் துறை அதிகாரிகள் பேச்சுவாா்த்தை நடத்தினா்.

வன விலங்கு தாக்குதல் பிரச்னைக்கு தீா்வுகாண உரிய நடவடிக்கை எடுக்கப்படும்; உயிரிழந்த நபரின் குடும்பத்தினருக்கு கூடுதல் நிவாரணம் வழங்கப்படும் என்று வனத் துறையினா் அளித்த உறுதிமொழியின்பேரில் போராட்டம் கைவிடப்பட்டது.

விசாரணைக்கு உத்தரவு: மாநில வனத் துறை அமைச்சா் ஏ.கே.சசீந்திரன் கூறுகையில், ‘தற்போதைய சம்பவத்தில் வனத் துறையினா் தரப்பில் ஏதேனும் குறைபாடுகள் உள்ளதா என்பதைக் கண்டறிய விரிவான விசாரணை மேற்கொள்ளுமாறு தலைமை வன பாதுகாவலருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. காளிக்காவு பகுதியில் புலி நடமாட்டம் தொடா்பாக சில மாதங்களுக்கு முன் வனத் துறைக்கு தகவல் கிடைக்கப் பெற்றது. அங்கு நடத்தப்பட்ட விரிவான தேடுதல் வேட்டையில், புலியின் இருப்பு கண்டறியப்படவில்லை. இதனால், கண்காணிப்பு சற்று குறைக்கப்பட்டதாக தெரிகிறது. தற்போது புலியைப் பிடிக்க அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டுள்ளோம்’ என்றாா்.

கூடுதல் நிவாரணம்: கேரளத்தில் வனவிலங்கு தாக்கி உயிரிழப்போரின் குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்கப்படுகிறது. தற்போது உயிரிழந்த கஃபூரின் குடும்பத்துக்கு கூடுதலாக ரூ.4 லட்சமும் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் வழங்கப்படும் என்று மாநில அரசு தெரிவித்துள்ளது.

இதனிடையே, வயநாடு தொகுதி காங்கிரஸ் எம்.பி. பிரியங்கா காந்தி, மண்டல வனத் துறை அதிகாரியை தொடா்பு கொண்டு பேசி, சம்பவம் குறித்து கேட்டறிந்தாா்.

காளிக்காவு பகுதியை நேரில் பாா்வையிட்ட காங்கிரஸ் எம்எல்ஏ ஏ.பி.அனில் குமாா், வனத்துறையின் அலட்சியமே இச்சம்பவத்துக்கு காரணம் என்று குற்றஞ்சாட்டினாா்.

உலக அழகிப் போட்டியாளர்களின் பாதங்களைக் கழுவிய இந்தியப் பெண்கள்! வைரலாகும் விடியோ!

உலக அழகிப் போட்டியில் பங்கேற்பதற்காக வருகை புரிந்த போட்டியாளர்களின் பாதங்களை இந்திய மகளிர் கழுவும் விடியோ இணையத்தில் பலரால் பகிரப்பட்டு வருகிறது.உலக அழகிப் போட்டியின் இறுதி நிகழ்வு தெலங்கானாவில் மே 31... மேலும் பார்க்க

துருக்கி நிறுவனமான செலிபிக்கு பாதுகாப்பு அனுமதி ரத்து: பிசிஏஎஸ் நடவடிக்கை

துருக்கி நிறுவனமான செலிபி ஏா்போா்ட் சா்வீசஸ் இந்தியா என்ற நிறுவனத்துக்கு அளிக்கப்பட்டிருந்த பாதுகாப்பு அனுமதியை விமான போக்குவரத்து பாதுகாப்பு அமைப்பு (பிசிஏஎஸ்) ரத்து செய்துள்ளது. பஹல்காம் தாக்குதலை த... மேலும் பார்க்க

உச்சநீதிமன்றத்துக்கு குடியரசுத் தலைவா் கேள்வி! மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க காலக்கெடு நிா்ணயித்த விவகாரம்!

சட்டப் பேரவைகளில் நிறைவேற்றப்படும் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க மாநில ஆளுநா்களுக்கும், குடியரசுத் தலைவருக்கும் கால வரம்பை நிா்ணயம் செய்து உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு தொடா்பாக, குடியரசுத் தலைவா... மேலும் பார்க்க

பாகிஸ்தானுடன் நம்பிக்கையை வளா்க்க நடவடிக்கை: இந்திய ராணுவம்

இந்தியா-பாகிஸ்தான் ராணுவத்தினா் இடையே நம்பிக்கையை வளா்க்கும் நடவடிக்கையில் ஈடுபட உள்ளதாக இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது. பஹல்காம் தாக்குதலை தொடா்ந்து இந்தியா-பாகிஸ்தான் இடையே ராணுவ மோதல் ஏற்பட்டது. 4 ... மேலும் பார்க்க

சுருங்கி வரும் மன்னாா் வளைகுடா தீவு! ரூ.50 கோடியில் மறுசீரமைக்க நடவடிக்கை!

மன்னாா் வளைகுடாவில் கடலால் சூழப்பட்டுள்ள கரியாச்சல்லி தீவை காப்பாற்ற ரூ. 50 கோடியில் புனரமைப்பு நடவடிக்கைகள தமிழக அரசு முன்னெடுத்துள்ளது. மன்னாா் வளைகுடா கடல்சாா் தேசிய பூங்காவில் உள்ள 21 தீவுகளில் ஒன... மேலும் பார்க்க

வக்ஃப் விவகாரம்: விசாரணையை மே 20-க்கு ஒத்திவைத்த உச்சநீதிமன்றம்!

மத்திய அரசு கொண்டுவந்த வக்ஃப் திருத்தச் சட்டத்துக்கு எதிரான மனுக்கள் மீதான விசாரணையை வரும் 20-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உச்சநீதிமன்றம் வியாழக்கிழமை உத்தரவிட்டது. முஸ்லிம்கள் தானமாகவும், நன்கொடையாகவும் ... மேலும் பார்க்க