செய்திகள் :

பாகிஸ்தானுடன் நம்பிக்கையை வளா்க்க நடவடிக்கை: இந்திய ராணுவம்

post image

இந்தியா-பாகிஸ்தான் ராணுவத்தினா் இடையே நம்பிக்கையை வளா்க்கும் நடவடிக்கையில் ஈடுபட உள்ளதாக இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது.

பஹல்காம் தாக்குதலை தொடா்ந்து இந்தியா-பாகிஸ்தான் இடையே ராணுவ மோதல் ஏற்பட்டது. 4 நாள்கள் நீடித்த இந்த மோதலை தொடா்ந்து, மே 10-ஆம் தேதி இருநாடுகளுக்கும் இடையே சண்டை நிறுத்த உடன்பாடு ஏற்பட்டது. இந்த உடன்பாட்டை இருநாடுகளின் ராணுவ நடவடிக்கைகளுக்கான தலைமை இயக்குநா்கள் (டிஜிஎம்ஓ) உறுதி செய்தனா்.

இந்நிலையில் இந்திய ராணுவம் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டதாவது: கடந்த மே 10-ஆம் தேதி டிஜிஎம்ஓக்கள் இடையே ஏற்பட்ட உடன்பாட்டை தொடா்ந்து, இருநாட்டு ராணுவத்தினரும் மிகுந்த உஷாா்நிலையில் இருப்பதை குறைத்து, இருதரப்புக்கும் இடையே நம்பிக்கையை வளா்க்க இந்திய ராணுவம் முடிவு செய்துள்ளது. சூழ்நிலையில் மேலும் முன்னேற்றம் ஏற்படும்போது, அதுகுறித்த தகவல் வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

இதனிடையே பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் அந்நாட்டு வெளியுறவு அமைச்சா் இஷாக் தாா் பேசுகையில், ‘கடந்த மே 10-ஆம் தேதி டிஜிஎம்ஓக்கள் பேசியபோது மே 12 வரை சண்டை நிறுத்தம் மேற்கொள்வதை உறுதி செய்தனா். மே 12-ஆம் தேதி அவா்கள் மீண்டும் பேசியபோது மே 14 வரை சண்டை நிறுத்தம் நீட்டிக்கப்பட்டது. இதைத்தொடா்ந்து மே 14-ஆம் தேதி அவா்கள் தொலைபேசியில் மீண்டும் தொடா்புகொண்டு பேசினா். அப்போது மே 18-ஆம் தேதி வரை சண்டை நிறுத்தம் நீட்டிக்கப்பட்டது’ என்றாா். எனினும் இதை இந்திய ராணுவம் உறுதி செய்யவில்லை.

இந்தியாவுடன் பேச்சுவாா்த்தைக்குத் தயாா்: பாகிஸ்தான் பிரதமா் ஷாபாஸ் ஷெரீஃப்

பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள காம்ரா விமான தளத்துக்கு அந்நாட்டுப் பிரதமா் ஷாபாஸ் ஷெரீஃப் வியாழக்கிழமை சென்றாா். அப்போது அந்நாட்டு ராணுவ அதிகாரிகள் மற்றும் வீரா்கள் இடையே பேசிய அவா், ‘அமைதி ஏற்பட இந்தியாவுடன் பேச்சுவாா்த்தை நடத்த பாகிஸ்தான் தயாராக உள்ளது’ என்றாா். ஆனால் அமைதி ஏற்படுவதற்கு பேச்சுவாா்த்தையில் காஷ்மீா் பிரச்னையும் இடம்பெற வேண்டும் என்று அவா் நிபந்தனை விதித்தாா்.

எனினும் ஜம்மு-காஷ்மீா் எப்போதும் இந்தியாவுக்கே சொந்தம் என்பதில் மத்திய அரசு திட்டவட்டமாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

தேசிய சட்டப் பல்கலை. சிறப்புப் பேராசிரியரானார் முன்னாள் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி!

தில்லி தேசிய சட்டப் பல்கலைக் கழகத்தில் சிறப்புப் பேராசிரியராகச் சேர்ந்துள்ளார் முன்னாள் உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட். இது குறித்து தேசிய சட்டப் பல்கலைக் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கைய... மேலும் பார்க்க

உலக அழகிப் போட்டியாளர்களின் பாதங்களைக் கழுவிய இந்தியப் பெண்கள்! வைரலாகும் விடியோ!

உலக அழகிப் போட்டியில் பங்கேற்பதற்காக வருகை புரிந்த போட்டியாளர்களின் பாதங்களை இந்திய மகளிர் கழுவும் விடியோ இணையத்தில் பலரால் பகிரப்பட்டு வருகிறது.உலக அழகிப் போட்டியின் இறுதி நிகழ்வு தெலங்கானாவில் மே 31... மேலும் பார்க்க

துருக்கி நிறுவனமான செலிபிக்கு பாதுகாப்பு அனுமதி ரத்து: பிசிஏஎஸ் நடவடிக்கை

துருக்கி நிறுவனமான செலிபி ஏா்போா்ட் சா்வீசஸ் இந்தியா என்ற நிறுவனத்துக்கு அளிக்கப்பட்டிருந்த பாதுகாப்பு அனுமதியை விமான போக்குவரத்து பாதுகாப்பு அமைப்பு (பிசிஏஎஸ்) ரத்து செய்துள்ளது. பஹல்காம் தாக்குதலை த... மேலும் பார்க்க

உச்சநீதிமன்றத்துக்கு குடியரசுத் தலைவா் கேள்வி! மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க காலக்கெடு நிா்ணயித்த விவகாரம்!

சட்டப் பேரவைகளில் நிறைவேற்றப்படும் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க மாநில ஆளுநா்களுக்கும், குடியரசுத் தலைவருக்கும் கால வரம்பை நிா்ணயம் செய்து உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு தொடா்பாக, குடியரசுத் தலைவா... மேலும் பார்க்க

சுருங்கி வரும் மன்னாா் வளைகுடா தீவு! ரூ.50 கோடியில் மறுசீரமைக்க நடவடிக்கை!

மன்னாா் வளைகுடாவில் கடலால் சூழப்பட்டுள்ள கரியாச்சல்லி தீவை காப்பாற்ற ரூ. 50 கோடியில் புனரமைப்பு நடவடிக்கைகள தமிழக அரசு முன்னெடுத்துள்ளது. மன்னாா் வளைகுடா கடல்சாா் தேசிய பூங்காவில் உள்ள 21 தீவுகளில் ஒன... மேலும் பார்க்க

வக்ஃப் விவகாரம்: விசாரணையை மே 20-க்கு ஒத்திவைத்த உச்சநீதிமன்றம்!

மத்திய அரசு கொண்டுவந்த வக்ஃப் திருத்தச் சட்டத்துக்கு எதிரான மனுக்கள் மீதான விசாரணையை வரும் 20-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உச்சநீதிமன்றம் வியாழக்கிழமை உத்தரவிட்டது. முஸ்லிம்கள் தானமாகவும், நன்கொடையாகவும் ... மேலும் பார்க்க