செய்திகள் :

பிளஸ் 1 பொதுத்தேர்வு: திருவள்ளூர் 25,547 பேர் தேர்ச்சி!

post image

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டத்தில் பிளஸ்1 பொதுத்தேர்வில் மாணவ, மாணவிகள் 25,547 பேர் தேர்ச்சி பெற்றுள்ளதோடு, 3687 பேர் தோல்வி அடைந்த நிலையில், மாநில அளவில் 36 இடம் பிடித்துள்ளதாக மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மோகனா தெரிவித்தார்.

மாநில அளவில் கடந்த மார்ச், ஏப்ரல் மாதங்களில் பிளஸ்1 பொதுத்தேர்வு நடைபெற்றது. இத்தேர்வுக்கான முடிவுகள் வெள்ளிக்கிழமை காலையில் வெளியானது. இதில் திருவள்ளூர் மாவட்டத்தில் மொத்தம் 248 உள்ளடக்கிய 109 தேர்வு மையங்களில் மாணவர்கள் 13,903, மாணவிகள் 15,331 என மொத்தம் 29,234 தேர்வு எழுதினார்கள். இதில் மாணவர்கள் 11,479, மாணவிகள் 14,068 என 25,547 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாவட்ட அளவில் மாணவர்கள் 82.56 சதவீதமும், மாணவிகள் 91.76 சதவீதம் என மொத்தம் 87.39 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் மாநில அளவில் 36 ஆவது இடம் பிடித்துள்ளது. இதுவே கடந்தாண்டில் 85.54 சதவீதம் தேர்ச்சி ஆகும். நிகழாண்டில் 1.85 சதவீதம் அதிகமாகும்.

அதேபோல் நிகழாண்டில் 102 அரசு மேல்நிலைப்பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் 6464, மாணவிகள் 7673 என மொத்தம் 14137 பேர் தேர்வு எழுதினார்கள். இதில் மாணவர்கள் 4541, மாணவிகள் 6646 என மொத்தம் 11167 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதில் மாணவர்கள் 70.25 சதவீதமும், மாணவிகள் 86.62 சதவீதமும் என மொத்தம் 79.13 சதவீதம் ஆகும். இதுவே கடந்தாண்டில் 75.50 சதவீதமாகும்.

மாவட்ட அளவில் 12 அரசு பள்ளிகள் விட 57 பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

மே 29, 30-ல் அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்!

சென்னையில் மே 29, 30-ல் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கட்சியின் வளர்ச்சிப் பணிகள் தொடர்பாக ஆலோசனை நடைபெறவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இ... மேலும் பார்க்க

மதுரையில் மழை! தமிழகத்தில் எங்கெல்லாம் மழை பெய்கிறது?

கோடை வெய்யில் கொளுத்திவந்த நிலையில், இன்று பிற்பகலில் மதுரையில் பரவலாக மழை பெய்துள்ளது. மேலும் பார்க்க

ஊட்டத்தூர் கோயிலில் முதலாம் பராந்தக சோழனின் கல்வெட்டு கண்டெடுப்பு!

ஊட்டத்தூர் சுத்தரத்தனேசுவர் கோயிலில் முதலாம் பராந்தக சோழனின் கல்வெட்டு கண்டெடுக்கப்பட்டுள்ளது. திருச்சி மாவட்டம் ஊட்டத்தூர் சுத்தரத்தனேசுவர் கோயிலில் நடைபெற்று வரும் திருப்பணிகளை சுற்றுலா, பண்பாடு மற்... மேலும் பார்க்க

தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்துக்கு மழை!

தமிழ்நாட்டில் பெரும்பாலான மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்துக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. திருச்சிராப்பள்ளி, அரியலூர், பெரம்பலூர், மயிலாடுதுறை, தஞ்சாவூ... மேலும் பார்க்க

10ஆம் வகுப்பில் ஒரே மதிப்பெண் எடுத்த இரட்டைச் சகோதரிகள்!

கோவை : கூலித் தொழிலாளியின் இரட்டை மகள்கள் ஒரே மதிப்பெண் பெற்று சாதனை படைத்துள்ளனர். அருமையான வெற்றி என கொண்டாடி மகிழ்கிறார்கள் பெற்றோரும் உறவினர்களும்.கோவை மாவட்டம், ராமநாதபுரத்தைச் சேர்ந்த கூலி வேலை ... மேலும் பார்க்க

வடகாடு மோதல் சம்பவம்: தேசிய ஆதிதிராவிடர் ஆணையக்குழு ஆய்வு!

ஆலங்குடி: புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகேயுள்ள வடகாடு மோதல் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பட்டியலின மக்களை சந்தித்து தேசிய ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் ஆணையக்குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர்.ஆலங்கு... மேலும் பார்க்க