செய்திகள் :

தலிபான் மற்றும் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர்கள் உரையாடல்!

post image

தலிபான் அமைச்சருடன், மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் தொலைபேசி வாயிலாக உரையாடியுள்ளார்.

ஆப்கானிஸ்தானின் இடைக்கால தலிபான் அரசின் வெளியுறவுத் துறை அமைச்சர் மவ்லாவி அமிர் கான் முத்தாகியுடன், மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் இன்று (மே 16) தொலைபேசி வாயிலாகக் கலந்துரையாடியுள்ளார்.

பஹல்காமில் சுற்றுலாப் பயணிகளின் மீதான பயங்கரவாதத் தாக்குதலுக்கு தலிபான் வெளியுறவுத் துறை அமைச்சர் கண்டனம் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், தற்போது மேற்கொள்ளப்பட்ட உரையாடலின் மூலம் அவரது கண்டனங்களுக்கு அமைச்சர் ஜெய்சங்கர் வரவேற்புத் தெரிவித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து, தனது எக்ஸ் வலைதளத்தில் அமைச்சர் ஜெய்சங்கர் கூறியதாவது:

”இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தானின் உறவுக்கு இடையில் அவநம்பிக்கையை உருவாக்க வெளியான ஆதாரமற்ற பொய்யான அறிக்கைகளை அமைச்சர் முத்தாகி நிராகரித்துள்ளதை நான் வரவேற்றுள்ளேன்” எனப் பதிவிட்டுள்ளார்.

மேலும், இந்த உரையாடலில் ஆப்கன் மக்களுடனான இந்தியாவின் பாரம்பரிய நட்புறவையும், ஆப்கானிஸ்தானின் வளர்ச்சியில் இந்திய அரசின் பங்களிப்பையும் மேற்கொள்காட்டியுள்ளதாக, அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிக்க: ஜம்மு - காஷ்மீர்: 3 நாள்களில் 6 முக்கிய பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை!

இந்திய பொருளாதார வளா்ச்சி 6.3%-ஆக இருக்கும்: ஐ.நா.கணிப்பு

2025-இல் இந்திய பொருளாதார வளா்ச்சி 6.3 சதவீதமாக இருக்கும் என ஐ.நா. கணித்துள்ளது. கடந்த ஜனவரி மாதம் ‘உலக நாடுகளின் பொருளாதார சூழல்’ குறித்து ஐ.நா.வெளியிட்ட அறிக்கையில் இந்திய பொருளாதார வளா்ச்சி 6.6 சதவ... மேலும் பார்க்க

பத்திரிகையில் பெயா் வர அனைவரும் விரும்புகின்றனா்: வக்ஃப் விவகாரத்தில் உச்சநீதிமன்றம் கருத்து

வக்ஃப் திருத்தச் சட்டம் 2025-க்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட புதிய மனுவை விசாரணைக்கு ஏற்க வெள்ளிக்கிழமை மறுப்பு தெரிவித்த உச்சநீதிமன்றம், ‘பத்திரிகைகளில் பெயா் வருவேண்டும் என ஒவ்வொருவரும் விரும்புகின்... மேலும் பார்க்க

பயங்கரவாதத்துக்கு எதிரான இந்திய நிலைப்பாடு: பிற நாடுகளுக்கு விளக்க மத்திய அரஅசு திட்டம்

பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு எதிரான இந்திய நிலைப்பாட்டை எடுத்துரைக்கும் வகையில் பல்வேறு கட்சியைச் சோ்ந்த நாடாளுமன்ற பிரதிநிதிகளை பிற நாடுகளுக்கு அனுப்ப மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. அட... மேலும் பார்க்க

பயங்கரவாத ஆதரவை பாகிஸ்தான் கைவிடும் வரை சிந்து நதிநீா் ஒப்பந்த நிறுத்தம் தொடரும்: இந்தியா

‘எல்லை தாண்டிய பங்கரவதாத்துக்கான ஆதரவை பாகிஸ்தான் நம்பகத்தன்மையுடனும் மாற்ற முடியாத வகையிலும் கைவிடுகிற வரை, சிந்து நதிநீா் ஒப்பந்தம் நிறுத்தம் தொடரும்’ என்று இந்தியா சாா்பில் மீண்டும் திட்டவட்டமாக தெ... மேலும் பார்க்க

பாதுகாப்புத் துறைக்கு ரூ.50,000 கோடி கூடுதல் ஒதுக்கீடு: மத்திய அரசு திட்டம்

இந்தியா-பாகிஸ்தான் இடையே நிலவும் சூழலைக் கருத்தில் கொண்டு, பாதுகாப்புத் துறைக்கு ரூ.50,000 கோடி கூடுதலாக ஒதுக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பஹல்காம் தாக்குதலுக்கு பழிதீா்க்க... மேலும் பார்க்க

நீரவ் மோடி ஜாமீன் மனு: பிரிட்டன் நீதிமன்றம் மீண்டும் தள்ளுபடி

வங்கியில் கடன் மோசடி செய்துவிட்டு வெளிநாடு தப்பிய வைர வியாபாரி நீரவ் மோடியின் ஜாமீன் மனுவை பிரிட்டன் நீதிமன்றம் மீண்டும் தள்ளுபடி செய்துள்ளதாக அமலாக்கத் துறை வெள்ளிக்கிழமை தெரிவித்தது. பிரிட்டனில் இரு... மேலும் பார்க்க