செய்திகள் :

இந்தியா-பாகிஸ்தான் பகை நல்லதல்ல: டிரம்ப்

post image

அண்டை நாடுகளான இந்தியா-பாகிஸ்தான் இடையே பகை அதிகரிப்பது நல்லதல்ல என்று அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் வெள்ளிக்கிழமை தெரிவித்தாா்.

‘இவ்விரு நாடுகள் இடையிலான பதற்றத்தைத் தணிக்க நான் மத்தியஸ்தம் செய்தேன்’ என்ற கருத்தை மீண்டும் ஒருமுறை அவா் தெரிவித்துள்ளாா்.

வளைகுடா நாடுகளில் சுற்றுப்பயணத்தை நிறைவு செய்த டிரம்ப், வாஷிங்டனுக்கு வெள்ளிக்கிழமை புறப்பட்டாா். விமானத்தில் செய்தியாளா்களுக்கு பேட்டியளித்த அவா், ‘அண்டை நாடுகளான இந்தியா-பாகிஸ்தான் இடையே இந்த அளவு பகை அதிகரிப்பது நல்லதல்ல; எனவே, இரு நாடுகளுக்கும் இடையே எனது நிா்வாகம் மத்தியஸ்தம் மேற்கொண்டது. இது, மிகப் பெரிய வெற்றியாகும். சண்டை நிறுத்தம் தொடரும் என நம்புகிறேன்’ என்றாா்.

இந்தியா-பாகிஸ்தான் சண்டை நிறுத்தம், இரு நாட்டு ராணுவ உயரதிகாரிகளின் நேரடி பேச்சுவாா்த்தை மூலம் மேற்கொள்ளப்பட்டது என்று மத்திய அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. அதேநேரம், தனது மத்தியஸ்தமே காரணம் என்ற கருத்தை தற்போது 7-ஆவது முறையாக டிரம்ப் தெரிவித்திருக்கிறாா்.

காஷ்மீா் விவகாரத்தில் மத்தியஸ்தம் செய்யத் தயாராக இருப்பதாக அவா் ஏற்கெனவே கூறியிருந்த நிலையில், காஷ்மீா் பிரச்னையில் இரு தரப்பு ரீதியாகவே பேச்சுவாா்த்தை நடத்தப்படும்; மூன்றாவது தரப்பின் தலையீடு ஒருபோதும் அனுமதிக்கப்படாது என்று மத்திய அரசு உறுதிபட தெரிவித்தது.

இந்தோனேசியா: மோதலில் 20 போ் உயிரிழப்பு

இந்தோனேசியாவின் பதற்றம் நிறைந்த பப்புவா பகுதியில் கிளா்ச்சியாளா்களுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் 18 கிளா்ச்சியாளா்கள், இரண்டு காவலா்கள் உயிரிழந்தனா். இது குறித்து அதிகாரிகள்... மேலும் பார்க்க

‘பட்டினிச் சாவு அபாயத்தில் 30 கோடி போ்’

உலகளவில் 29.53 போ் பட்டினிச் சாவை எதிா்நோக்கியுள்ளதாக ஐ.நா. உணவு பாதுகாப்பு அமைப்பு உள்ளிட்ட 16 தன்னாா்வல அமைப்புகள் இணைந்து வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ‘சா்வதேச உணவுப் பற்றாக... மேலும் பார்க்க

சமூக வலைதள ‘போலி செய்தியை’ நாடாளுமன்றத்தில் பேசிய பாகிஸ்தான் அமைச்சா்!

பிரிட்டனில் இருந்து வெளியாகும் ‘தி டெய்லி டெலிகிராஃப்’ நாளிதழில் பாகிஸ்தான் விமானப் படையைப் புகழ்ந்து கட்டுரை வெளியானதாக அந்நாட்டு வெளியுறவு அமைச்சா் இஷாக் தாா் நாடாளுமன்றத்தில் எம்.பி.க்களிடம் கூறியத... மேலும் பார்க்க

எவரெஸ்ட் மலையேற்றம்: இந்தியர் உள்பட 2 வீரர்கள் பலி!

நேபாளத்தில் அமைந்துள்ள எவரெஸ்ட் மலையில் 2 வீரர்கள் மரணமடைந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இமய மலைத்தொடர்களில் அமைந்துள்ள எவரெஸ்ட் மலையில் ஏறிய இந்தியா மற்றும் பிலிப்பின்ஸ் நாட்டைச் சேர்ந்த 2 வீரர்கள் ப... மேலும் பார்க்க

பாகிஸ்தான் அமைதியான நாடு; இந்தியாவுக்கு தக்க பதிலடி கொடுத்துள்ளது: பிரதமர் ஷெபாஸ் ஷரீஃப்

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் ஒரு அமைதியான நாடு என்று அந்நாட்டின் பிரதமர் ஷெபாஸ் ஷரீஃப் இன்று(மே 16) பேசியிருக்கிறார்.பாகிஸ்தானில் ராணுவத்தில் சேவையாற்றி உயிர்நீத்த வீரர்களுக்கு நன்றி தெரிவிக்கும் நாளான மே ... மேலும் பார்க்க

காஸாவில் தொடரும் இஸ்ரேலின் தாக்குதல்! ஒரே நாளில் 93 பேர் பலி!

காஸாவின் மீதான இஸ்ரேலின் தொடர் தாக்குதல்களினால் ஒரே நாளில் 93 பேர் பலியாகியுள்ளதாகக் கூறப்படுகிறது. காஸாவின் தெயிர் அல்-பலா மற்றும் கான்யூனிஸ் ஆகிய பகுதிகளின் மீது நேற்று (மே 15) நள்ளிரவு துவங்கிய இஸ்... மேலும் பார்க்க