செய்திகள் :

ஏ.ஆர்.ரஹ்மானும் ஹான்ஸிம்மரும் ராமாயணம் கதைக்கு இசையமைக்கிறார்களா? - தயாரிப்பாளர் கொடுத்த அப்டேட்

post image

பாலிவுட் இயக்குநர் நிதீஷ் திவாரி இயக்கத்தில் ராமாயணம் கதை திரைப்படமாக உருவாகவிருக்கிறது. இப்படத்தை தயாரிப்பாளர் நமித் மல்ஹோத்ரா தயாரிக்கவிருக்கிறார்.

இப்படத்திற்கு 'ராமாயண்' என தலைப்பு வைத்து சமீபத்தில் அறிவிப்பையும் வெளியிட்டிருந்தார்.

Ramayana Movie
Ramayana Movie

2026-ல் முதல் பாகம், 2027-ல் இரண்டாம் பாகம் என இரண்டு பாகங்களாக வெளியிடப்போவதாகவும் அறிவிப்பு வெளியிட்டிருந்தார்கள்.

படத்தில் ராமனாக ரன்பீர் கபூரும், ராவணனாக யஷ்ஷும், சீதையாக சாய் பல்லவியும் நடிக்கவிருப்பதாக சொல்லப்படுகிறது.

தற்போது படத்திற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானும், ஹாலிவுட்டின் பிரபல இசையமைப்பாளர் ஹான்ஸ் ஜிம்மரும் இணைந்து இசையமைக்கவிருப்பதாக இப்படத்தின் தயாரிப்பாளர் நமித் மல்ஹோத்ரா அப்டேட் ஒன்றைக் கொடுத்திருக்கிறார்.

இத்திரைப்படம் தொடர்பாக, "இப்போது ராமாயணா படத்தை தயாரித்துக் கொண்டிருக்கிறேன். அது இந்தியக் கலாச்சாரத்தின் முக்கியமான கதை. அப்படத்தை எடுக்க வேண்டும் என்பது எனக்கு கனவு.

AR Rahman
AR Rahman

நான் தயாரிக்கும் இந்த 'ராமாயண்' படத்திற்கு இசையமைப்பாளர் ஹான்ஸ் ஜிம்மர் இசையமைக்கவிருக்கிறார். இவருடன் இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மானும் இணைந்து இசையமைக்கவிருக்கிறார்.

ஏ.ஆர். ரஹ்மான் பல முக்கியமான இந்திய திரைப்படங்களுக்கும், ஹாலிவுட் படங்களுக்கும் இசையமைத்திருக்கிறார். இவர்கள் இருவரும் முதல் முறையாக இணைந்து இசையமைக்கவிருக்கிறார்கள்.

ஒரு ரசிகனாக எனக்கு இது கனவு நனவான தருணம்," எனக் கூறியிருக்கிறார்.

சிதாரே ஜமீன் பர் படப் புறக்கணிப்பு விவகாரம்; தயாரிப்பு நிறுவன ப்ரொபைல் படத்தை மாற்றிய ஆமீர் கான்

பாலிவுட் நடிகர் ஆமீர் கான் சிதாரே ஜமீன் பர் படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படம் அடுத்த மாதம் திரைக்கு வர இருக்கிறது.இதற்கான வேலையில் ஆமீர் கான் தீவிரமாக ஈடுபட்டுள்ளார். மத்திய அரசு பாகிஸ்தான் ஆக்... மேலும் பார்க்க

Met Gala: ஹாலிவுட் பிரபலங்களை பின்னுக்குத் தள்ளிய பாலிவுட் நடிகர் ஷாருக்கான்..

அமெரிக்காவில் இந்த மாத தொடக்கத்தில் நடந்த `மெட் காலா' என்ற நிகழ்ச்சியில் பாலிவுட், ஹாலிவுட் நட்சத்திரங்கள் கலந்துகொண்டனர். அங்கு நடந்த பேஷன் ஷோவில் பாலிவுட் நடிகர் ஷாருக்கான் முதல் முறையாக கலந்து கொண்... மேலும் பார்க்க

`தங்கள் வாழ்க்கையைப் பணயம் வைத்து ராணுவ வீரர்கள் செயல்பட்டார்கள்' - பாராட்டி நெகிழும் ஆலியா பட்

பஹல்காம் தீவிரவாதத் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்திய ராணுவம் ‘ஆபரேஷன் சிந்தூர்’ தாக்குதலை நடத்தியது.இதன் மூலம் பாகிஸ்தானில் உள்ள பல்வேறு தீவிரவாத மையங்கள் அழிக்கப்பட்டன.இதனால் பாகிஸ்தான்... மேலும் பார்க்க

போர் பதற்றத்தைக் குறைக்கச் சொன்ன ஆலியா பட்டின் தாயார்; குடியுரிமை குறித்து நெட்டிசன்கள் கேள்வி

இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே நடந்து வந்த தாக்குதலை நிறுத்தவேண்டும் என்று சொன்னவர்கள் கடுமையான விமர்சனத்திற்கு ஆளானார்கள்.சமூக வலைத்தளத்தில் கடுமையாக விமர்சிக்கப்பட்டனர். நடிகர் சல்மான் கான் கூட போ... மேலும் பார்க்க

"தமிழ் சினிமா பாடல்களில் ஆங்கிலம்தான் அதிகம் இருக்கிறது; முன்பெல்லாம்..." - அனுராக் காஷ்யப் வேதனை

`Dev.D', `Black Friday', `Gangs of Wasseypur' படங்கள் மூலம் பாலிவுட்டில் இயக்குநராகப் பிரபலம் ஆனவர் அனுராக் காஷ்யப்.சமீபத்தில் இவர் நடித்திருந்த 'மகாராஜா', 'Rifle Club' படங்களிலும் கவனம் ஈர்த்திருந்தா... மேலும் பார்க்க

Anurag Kashyap: "பான் இந்தியா படம் என்ற பெயரில் பெரிய ஊழல் நடக்குது" - கொதிக்கும் அனுராக் காஷ்யப்

`Dev.D', `Black Friday', `Gangs of Wasseypur' படங்கள் மூலம் பாலிவுட்டில் இயக்குநராகப் பிரபலம் ஆனவர் அனுராக் காஷ்யப்.நயன்தாரா, விஜய் சேதுபதி நடித்த 'இமைக்கா நொடிகள்' படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களிடையே ... மேலும் பார்க்க