செய்திகள் :

எவரெஸ்ட் மலையேற்றம்: இந்தியர் உள்பட 2 வீரர்கள் பலி!

post image

நேபாளத்தில் அமைந்துள்ள எவரெஸ்ட் மலையில் 2 வீரர்கள் மரணமடைந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இமய மலைத்தொடர்களில் அமைந்துள்ள எவரெஸ்ட் மலையில் ஏறிய இந்தியா மற்றும் பிலிப்பின்ஸ் நாட்டைச் சேர்ந்த 2 வீரர்கள் பலியாகியுள்ளதாக அவர்களது மலையேற்ற ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இதில், இந்தியாவைச் சேர்ந்த சுபத்தரா கோஷ் என்ற நபர் எவரெஸ்ட் மலையின் உச்சியை அடைந்து திரும்பி வரும்போது 8,849 மீட்டர் (29,032 அடி) உயரத்தில் நேற்று (மே 15) மரணமடைந்துள்ளார்.

இதேபோல், பிலிப்பின்ஸ் நாட்டைச் சேர்ந்த பிலிப் சாண்டியாகோ (வயது 45) என்ற நபர் அம்மலையின் மிக உயரமான இடத்தில் அமைந்துள்ள முகாம் 4-ஐ அடைந்துள்ளார். பின்னர், அங்கிருந்து எவரெஸ்ட்டின் உச்சியை அடைய மீண்டும் தனது பயணத்தைத் தொடர்ந்தபோது கடந்த மே 14 ஆம் தேதியன்று பலியானதாகக் கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில், அவர்களுக்கு மலையேறத் தேவையான அத்தியாவசிய உதவிகளைச் செய்த, நேபாளத்தைச் சேர்ந்த மலையேற்ற ஒருங்கிணைப்பாளர்கள் கூறுகையில், பலியான இருவரது உடல்களும் எவரெஸ்ட் மலையிலேயே உள்ளதாகவும், சடலங்களைக் கீழே கொண்டு வருவது பற்றி இதுவரை திட்டமிடப்படவில்லை எனத் தெரிவித்துள்ளனர்.

எவரெஸ்ட் மலையில் மரணமடையும் மனிதர்களின் உடல்கள் மீட்பது மிகவும் கடினமானது மற்றும் விலை உயர்ந்தப் பணி எனக் கூறப்படுகிறது. மேலும், அம்மலையில் ஏறுவதற்கு மார்ச் மற்றும் மே மாதம் வரையில் மட்டுமே அனுமதிக்கப்படுவதினால் பலரும் இமய மலையின் உச்சியை அடைய முயற்சித்து வருகின்றனர்.

முன்னதாக, கடந்த 1953-ம் ஆண்டு நியூசிலாந்து நாட்டைச் சேர்ந்த எட்மண்ட் ஹிலாரி மற்றும் அவரது நேபாள உதவியாளரான டென்சிங் நோர்கே ஆகியோர் முதல்முறையாக எவரெஸ்ட் மலையில் ஏறி அதன் உச்சியை அடைந்தனர். அதன் பின்னர், அங்கு மலையேற்றத்தில் ஈடுபட்டவர்களில் சுமார் 300-க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: காஸாவில் தொடரும் இஸ்ரேலின் தாக்குதல்! ஒரே நாளில் 93 பேர் பலி!

இந்தோனேசியா: மோதலில் 20 போ் உயிரிழப்பு

இந்தோனேசியாவின் பதற்றம் நிறைந்த பப்புவா பகுதியில் கிளா்ச்சியாளா்களுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் 18 கிளா்ச்சியாளா்கள், இரண்டு காவலா்கள் உயிரிழந்தனா். இது குறித்து அதிகாரிகள்... மேலும் பார்க்க

‘பட்டினிச் சாவு அபாயத்தில் 30 கோடி போ்’

உலகளவில் 29.53 போ் பட்டினிச் சாவை எதிா்நோக்கியுள்ளதாக ஐ.நா. உணவு பாதுகாப்பு அமைப்பு உள்ளிட்ட 16 தன்னாா்வல அமைப்புகள் இணைந்து வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ‘சா்வதேச உணவுப் பற்றாக... மேலும் பார்க்க

இந்தியா-பாகிஸ்தான் பகை நல்லதல்ல: டிரம்ப்

அண்டை நாடுகளான இந்தியா-பாகிஸ்தான் இடையே பகை அதிகரிப்பது நல்லதல்ல என்று அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் வெள்ளிக்கிழமை தெரிவித்தாா். ‘இவ்விரு நாடுகள் இடையிலான பதற்றத்தைத் தணிக்க நான் மத்தியஸ்தம் செய்தே... மேலும் பார்க்க

சமூக வலைதள ‘போலி செய்தியை’ நாடாளுமன்றத்தில் பேசிய பாகிஸ்தான் அமைச்சா்!

பிரிட்டனில் இருந்து வெளியாகும் ‘தி டெய்லி டெலிகிராஃப்’ நாளிதழில் பாகிஸ்தான் விமானப் படையைப் புகழ்ந்து கட்டுரை வெளியானதாக அந்நாட்டு வெளியுறவு அமைச்சா் இஷாக் தாா் நாடாளுமன்றத்தில் எம்.பி.க்களிடம் கூறியத... மேலும் பார்க்க

பாகிஸ்தான் அமைதியான நாடு; இந்தியாவுக்கு தக்க பதிலடி கொடுத்துள்ளது: பிரதமர் ஷெபாஸ் ஷரீஃப்

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் ஒரு அமைதியான நாடு என்று அந்நாட்டின் பிரதமர் ஷெபாஸ் ஷரீஃப் இன்று(மே 16) பேசியிருக்கிறார்.பாகிஸ்தானில் ராணுவத்தில் சேவையாற்றி உயிர்நீத்த வீரர்களுக்கு நன்றி தெரிவிக்கும் நாளான மே ... மேலும் பார்க்க

காஸாவில் தொடரும் இஸ்ரேலின் தாக்குதல்! ஒரே நாளில் 93 பேர் பலி!

காஸாவின் மீதான இஸ்ரேலின் தொடர் தாக்குதல்களினால் ஒரே நாளில் 93 பேர் பலியாகியுள்ளதாகக் கூறப்படுகிறது. காஸாவின் தெயிர் அல்-பலா மற்றும் கான்யூனிஸ் ஆகிய பகுதிகளின் மீது நேற்று (மே 15) நள்ளிரவு துவங்கிய இஸ்... மேலும் பார்க்க