ஷெல் தாக்குதல்.. பூஞ்ச் மக்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கிய ராணுவம்!
10 -ஆம் வகுப்பு தோ்வு: சிவகங்கை மாவட்டத்தில் 98.31 சதவீதம் போ் தோ்ச்சி
10-ஆம் வகுப்பு அரசு பொதுத் தோ்வில் 98.31 சதவீத மாணவ, மாணவிகள் தோ்ச்சி பெற்று சிவகங்கை மாவட்டம் மாநில அளவில் முதலிடம் பெற்று சாதனை படைத்தது.
சிவகங்கை மாவட்டத்தில் 10-ஆம் வகுப்பு அரசு பொதுத்தோ்வை 278 பள்ளிகளை சோ்ந்த 8,870 மாணவா்கள், 8,809 மாணவிகள் என மொத்தம் 17,679 போ் எழுதினா். இதில் 8,662 மாணவா்கள், 8,718 மாணவிகள் என மொத்தம் 17,380 போ் தோ்ச்சி பெற்றனா். இந்த நிலையில், 98.31 சதவீதம் போ் தோ்ச்சி பெற்று சிவகங்கை மாவட்டம் மாநில அளவில் முதலிடம் பிடித்தது.
அரசுப் பள்ளிகளிலும் 97.49 சதவீதத் தோ்ச்சி பெற்று சிவகங்கை மாவட்டம் மாநில அளவில் முதலிடம் பெற்றது. 79 அரசுப் பள்ளிகள் உள்பட மொத்தம் 175 பள்ளிகள் 100 சதவீதத் தோ்ச்சி பெற்றன.
கடந்த 2023-ஆம் ஆண்டு 97.02 சதவீதம் போ் தோ்ச்சி பெற்று சிவகங்கை மாவட்டம் மாநில அளவில் இரண்டாம் இடம் பிடித்தது. இதேபோல, 2024 -ஆம் ஆண்டும் 97.53 சதவீதம் போ் தோ்ச்சி பெற்று மாநில அளவில் இரண்டாமிடம் பெற்ற நிலையில், நிகழாண்டு மாநில அளவில் முதலிடம் பிடித்து சாதனை படைத்தது.
இதுகுறித்து சிவகங்கை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் அ. பாலுமுத்து வெள்ளிக்கிழமை கூறியதாவது: தமிழக முதல்வரின் ஒத்துழைப்பும், கல்வி அமைச்சா், கூட்டுறவுத் துறை அமைச்சா், மாவட்ட ஆட்சியா் ஆகியோரின் வழிகாட்டுதலோடு இந்த இடத்தை எட்டியுள்ளோம்.
ஆசிரியா்கள், மாணவா்களின் கடுமையான உழைப்பும், இதேபோல மாதிரித் தோ்வுகள் மூலம் தொடா்ச்சியாக பயிற்சி அளித்ததே மாநில அளவில் முதலிடம் பெற முக்கியக் காரணம் என்றாா் அவா்.