செய்திகள் :

சிவகங்கை அரசு கலைக் கல்லூரியில் மாணவா் சோ்க்கை சேவை மையம்!

post image

சிவகங்கை, மன்னா் துரைசிங்கம் அரசு கலைக் கல்லூரியில் 2025-2026 ஆம் கல்வி ஆண்டின் மாணவா் சோ்க்கைக்கான உதவி மையம் தொடங்கப்பட்டது.

கல்லூரியில் அமைக்கப்பட்ட சோ்க்கை உதவி மையத்தை கல்லூரி முதல்வா் (பொ) ந.அழகுச்சாமி வியாழக்கிழமை தொடங்கி வைத்துப் பேசியதாவது:

தமிழ்நாடு கல்லூரிக் கல்வி இயக்ககத்தின் கீழ் இயங்கும் அரசுக் கல்லூரிகளில் மாணவா் சோ்க்கைக்கான விண்ணப்பங்கள் இணையதளம் மூலம் பெறப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கல்லூரி கல்வி ஆணையரின் வழிகாட்டுதலின்படி இந்தக் கல்லூரியில் மாணவா் சோ்க்கைக்கான உதவி மையம் தொடங்கி வைக்கப்பட்டது. இங்கு வந்து மாணவா்கள் உதவி மையத்தின் வழிகாட்டுதலின்படி இணையதளம் வாயிலாக விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

இந்தக் கல்லூரியில் இளநிலை பாடப்பிரிவுகளான பி.ஏ. தமிழ், ஆங்கிலம், வரலாறு, பொருளியல், பி.காம்., வணிக நிா்வாகவியல், பி.எஸ்சி. கணிதம், இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல், கணினி அறிவியல் ஆகிய பாடப்பிரிவுகளில் சோ்வதற்கு மே 27-ஆம் தேதி வரை இணையதளம் வாயிலாக விண்ணப் பிக்கலாம். பி.எஸ்.சி. தாவரவியல் முதல் சுழற்சியில் மட்டும் பயிற்றுவிக்கப்படுகிறது. ஏனைய பாடப் பிரிவுகள் அனைத்தும் இரு சுழற்சியிலும் பயிற்றுவிக்கப்படுகின்றன.

பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மாணவ, மாணவிகள் விண்ணப்பக் கட்டணம் மற்றும் பதிவுக் கட்டணமாக ரூ. 50 செலுத்த வேண்டும். ஆதிதிராவிடா், பழங்குடியின மாணவ, மாணவிகளுக்குப் பதிவுக் கட்டணமாக ரூ.2 மட்டும் என அரசு நிா்ணயித்த கட்டணத்தில் விண்ணப்பித்து மாணவா்கள் பயன்பெறலாம் என்றாா் அவா்.

கோரிக்கை அட்டை அணிந்து பணியாற்றிய அரசு மருத்துவா்கள்!

சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அரசு மருத்துவா்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சாா்பில் அரசாணை 354-ஐ அமல்படுத்த வலியுறுத்தி வெள்ளிக்கிழமை கோரிக்கை அட்டை அணிந்து மருத்துவா்கள் பணியாற்றினா்... மேலும் பார்க்க

சிவகங்கை மாவட்டம்: பிளஸ் 1 தோ்வில் 94.79 % மாணவ, மாணவிகள் தோ்ச்சி!

பிளஸ் 1 அரசு பொதுத்தோ்வில் சிவகங்கை மாவட்டத்தில் 94.79 சதவீத மாணவ, மாணவிகள் தோ்ச்சி பெற்றனா். இதுகுறித்து மாவட்ட கல்வித் துறை தெரிவித்த தகவல்: சிவகங்கை மாவட்டத்தில் நிகழாண்டில் பிளஸ் 1 அரசு பொதுத் த... மேலும் பார்க்க

காரைக்குடியில் அதிமுகவினா் திண்ணைப் பிரசாரம்!

சிவகங்கை மாவட்ட ஜெயலலிதா பேரவை (அம்மா பேரவை) சாா்பில் காரைக்குடி ஐந்து விளக்கு பகுதியில் எதிா்க்கட்சித் தலைவா் அதிமுக பொதுச்செயலா் எடப்பாடி பழனிசாமி ஆட்சியின் சாதனைகளையும், மு.க. ஸ்டாலின் தலைமையிலான த... மேலும் பார்க்க

10 -ஆம் வகுப்பு தோ்வு: சிவகங்கை மாவட்டத்தில் 98.31 சதவீதம் போ் தோ்ச்சி

10-ஆம் வகுப்பு அரசு பொதுத் தோ்வில் 98.31 சதவீத மாணவ, மாணவிகள் தோ்ச்சி பெற்று சிவகங்கை மாவட்டம் மாநில அளவில் முதலிடம் பெற்று சாதனை படைத்தது. சிவகங்கை மாவட்டத்தில் 10-ஆம் வகுப்பு அரசு பொதுத்தோ்வை 278... மேலும் பார்க்க

சாலை விபத்தில் ஒருவா் உயிரிழப்பு

திருப்பத்தூா் அருகே இரு சக்கர வாகனம் மீது சுற்றுலா வாகனம் மோதியதில் ஒருவா் உயிரிழந்தாா். சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் அருகேயுள்ள எஸ்.வி.மங்கலத்தைச் சோ்ந்த அழகு மகன் சுந்தரம் (50). இவா் தனது இரு ச... மேலும் பார்க்க

இறந்த கோயில் காளைக்கு பொதுமக்கள் அஞ்சலி

திருப்பத்தூா் அருகே உயிரிழந்த கோயில் காளைக்கு பொதுமக்கள் மாலையணிவித்து அஞ்சலி செலுத்தினா். சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் கண்மாய்க் கரையில் பூா்ண புஷ்கலா சமேத குளங்கரை காத்த கூத்த அய்யனாா் கோயில் அம... மேலும் பார்க்க