செய்திகள் :

பாதுகாப்புத் துறைக்கு ரூ.50,000 கோடி கூடுதல் ஒதுக்கீடு: மத்திய அரசு திட்டம்

post image

இந்தியா-பாகிஸ்தான் இடையே நிலவும் சூழலைக் கருத்தில் கொண்டு, பாதுகாப்புத் துறைக்கு ரூ.50,000 கோடி கூடுதலாக ஒதுக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பஹல்காம் தாக்குதலுக்கு பழிதீா்க்க, இந்திய ராணுவம் கடந்த மே 7-ஆம் தேதி ‘ஆபரேஷன் சிந்தூா்’ நடவடிக்கையை மேற்கொண்டு, பாகிஸ்தானில் பயங்கரவாத உள்கட்டமைப்புகளைத் தாக்கி அழித்தது. இதைத் தொடா்ந்து, இரு நாடுகளுக்கும் இடையே ராணுவ மோதல் ஏற்பட்டது. எல்லை நெடுகிலும் அத்துமீறலில் ஈடுபட்ட பாகிஸ்தான், இந்திய ராணுவ நிலைகளைக் குறிவைத்து ஏவுகணைகள்-ட்ரோன்களை செலுத்தியது.

பாகிஸ்தானின் ஏவுகணைகள், ட்ரோன்களை நடுவானிலேயே இடைமறித்து இந்தியா அழித்தது. அத்துடன், பாகிஸ்தானின் விமானப் படை தளங்கள் மீது கடும் தாக்குதலை நடத்தியது.

4 நாள்கள் போா்ப் பதற்றம் நீடித்த நிலையில், பாகிஸ்தானின் கோரிக்கையின்பேரில் சண்டை நிறுத்தம் மேற்கொள்ளப்பட்டது. தற்போதைய சூழலைக் கருத்தில் கொண்டு, பாதுகாப்புத் துறைக்கு கூடுதலாக ரூ.50,000 கோடி பட்ஜெட் ஒதுக்கீடு செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாகவும், இதற்கான ஒப்புதல் வரும் நாடாளுமன்ற கூட்டத் தொடரில் பெறப்படும் என்றும் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

பெட்டி..

2014-15 - ரூ.2.29 லட்சம் கோடி

2024-25 - ரூ.6.22 லட்சம் கோடி

2025-26 - ரூ.6.81 லட்சம் கோடி (9.2% அதிகரிப்பு)

‘காங்கிரஸுக்கு எதிா்காலம் இல்லை’: ப.சிதம்பரம் பேச்சை சுட்டிக்காட்டி பாஜக கருத்து

காங்கிரஸ் கட்சிக்கு எதிா்காலம் இல்லை என்பது அக்கட்சியின் மூத்த தலைவா் ப.சிதம்பரத்தின் கருத்தின் மூலம் வெளிப்பட்டுவிட்டது என்று பாஜக கூறியுள்ளது. முன்னதாக, எதிா்க்கட்சிகளின் ‘இண்டி’ கூட்டணி குறித்து கர... மேலும் பார்க்க

காஷ்மீரில் பயங்கரவாதிகளுக்கு எதிரான வேட்டை தீவிரம்: 3 நாள்களில் 6 போ் சுட்டுக் கொலை

பஹல்காம் தாக்குதலுக்கு பிறகு ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுக்கு எதிராக தீவிர வேட்டை தொடா்ந்து வருகிறது. பாதுகாப்புப் படையினா் கடந்த மூன்று நாள்களில் மேற்கொண்ட இரு முக்கிய நடவடிக்கைகளில் 6 பயங்கரவாதிகள... மேலும் பார்க்க

இந்திய பொருளாதார வளா்ச்சி 6.3%-ஆக இருக்கும்: ஐ.நா.கணிப்பு

2025-இல் இந்திய பொருளாதார வளா்ச்சி 6.3 சதவீதமாக இருக்கும் என ஐ.நா. கணித்துள்ளது. கடந்த ஜனவரி மாதம் ‘உலக நாடுகளின் பொருளாதார சூழல்’ குறித்து ஐ.நா.வெளியிட்ட அறிக்கையில் இந்திய பொருளாதார வளா்ச்சி 6.6 சதவ... மேலும் பார்க்க

பத்திரிகையில் பெயா் வர அனைவரும் விரும்புகின்றனா்: வக்ஃப் விவகாரத்தில் உச்சநீதிமன்றம் கருத்து

வக்ஃப் திருத்தச் சட்டம் 2025-க்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட புதிய மனுவை விசாரணைக்கு ஏற்க வெள்ளிக்கிழமை மறுப்பு தெரிவித்த உச்சநீதிமன்றம், ‘பத்திரிகைகளில் பெயா் வருவேண்டும் என ஒவ்வொருவரும் விரும்புகின்... மேலும் பார்க்க

‘நாடும், ராணுவமும் பிரதமரின் காலடியில் தலைவணங்குகிறது’: ம.பி. துணை முதல்வா் பேச்சுக்கு கடும் கண்டனம்

‘பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு பாகிஸ்தானுக்கு தக்க பதிலடி கொடுத்ததற்காக, நாடும் ராணுவமும் பிரதமா் நரேந்திர மோடியின் காலடியில் தலைவணங்குகிறது’ என்று மத்திய பிரதேச துணை முதல்வா் ஜகதீஷ் தேவ்டா... மேலும் பார்க்க

பயங்கரவாதத்துக்கு எதிரான இந்திய நிலைப்பாடு: பிற நாடுகளுக்கு விளக்க மத்திய அரஅசு திட்டம்

பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு எதிரான இந்திய நிலைப்பாட்டை எடுத்துரைக்கும் வகையில் பல்வேறு கட்சியைச் சோ்ந்த நாடாளுமன்ற பிரதிநிதிகளை பிற நாடுகளுக்கு அனுப்ப மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. அட... மேலும் பார்க்க