செய்திகள் :

இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியின் கேப்டன் யார்? வாசிம் ஜாஃபர் கூறுவதென்ன?

post image

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியின் கேப்டனாக யார் நியமிக்கப்படலாம் என்பது குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரர் வாசிம் ஜாஃபர் பேசியுள்ளார்.

இந்திய அணியின் மூத்த வீரர்களான ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி அடுத்தடுத்து குறுகிய இடைவெளியில் டெஸ்ட் போட்டிகளிலில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தனர். இங்கிலாந்துக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் அடுத்த மாதம் தொடங்கவுள்ள நிலையில், இவர்களது ஓய்வு முடிவு அணிக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய அணியின் கேப்டனாக ரோஹித் சர்மா செயல்பட்டு வந்த நிலையில், இங்கிலாந்துக்கு எதிரான முக்கியமான தொடரில் இந்திய அணியைக் கேப்டனாக யார் வழிநடத்தப் போகிறார்கள் என்ற கேள்வி மற்றும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

இதையும் படிக்க: நான் பயிற்சியாளராக இருந்திருந்தால், ரோஹித் சிட்னி டெஸ்ட்டில் விளையாடியிருப்பார்: ரவி சாஸ்திரி

டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய அணியின் கேப்டனாக நியமிக்கப்படுவதற்கான போட்டியில் ஜஸ்பிரித் பும்ரா மற்றும் ஷுப்மன் கில் இருவரும் பிரதான தெரிவுகளாக உள்ளனர். மேலும், கே.எல்.ராகுல் மற்றும் ரிஷப் பந்த் ஆகியோரும் இந்த போட்டியில் இருக்கின்றனர்.

வாசிம் ஜாஃபர் கூறுவதென்ன?

இந்திய அணியின் அடுத்த கேப்டன் யார் என்பது தொடர்பான விவாதம் சென்று கொண்டிருக்கும் நிலையில், டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணியை வழிநடத்த ஜஸ்பிரித் பும்ரா முதல் தெரிவாக இருப்பார் எனவும், அவருக்கு ஓய்வு தேவைப்படும்போது ஷுப்மன் கில் அணியை வழிநடத்த வேண்டும் எனவும் இந்திய அணியின் முன்னாள் வீரர் வாசிம் ஜாஃபர் தெரிவித்துள்ளார்.

வாசிம் ஜாஃபர் (கோப்புப் படம்)

இது தொடர்பாக வாசிம் ஜாஃபர் எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருப்பதாவது: இந்திய அணியின் கேப்டன் பொறுப்பு தனக்கு வேண்டாம் என மறுக்காத பட்சத்தில், அணியின் கேப்டனாக நியமிக்கப்பட ஜஸ்பிரித் பும்ராவே முதல் தெரிவாக இருப்பார். அவர் கேப்டனாகவும், ஷுப்மன் கில் துணைக் கேப்டனாகவும் செயல்பட வேண்டும்.

பும்ராவுக்கு ஓய்வு தேவைப்படும்போது, ஷுப்மன் கில் அணியைக் கேப்டனாக வழிநடத்த வேண்டும். இப்படி செய்வதால், முழுநேரக் கேப்டன் பொறுப்பின் அழுத்தம் ஷுப்மன் கில்லுக்கு இருக்காது. மிகப் பெரிய அழுத்தமின்றி ஷுப்மன் கில் அணியில் கேப்டனாக வளர அது உதவும் எனப் பதிவிட்டுள்ளார்.

இதையும் படிக்க: ரோஹித் சர்மா, விராட் கோலி ஓய்வு பெற்றதால் அச்சமடையத் தேவையில்லை: முன்னாள் இந்திய வீரர்

இந்திய அணியின் பிரதான வேகப் பந்துவீச்சாளரான ஜஸ்பிரித் பும்ரா, இந்திய அணியை 3 டெஸ்ட் போட்டிகளில் கேப்டனாக வழிநடத்தியுள்ளார். பார்டர் - கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் பெர்த்தில் நடைபெற்ற முதல் போட்டியில் பும்ரா தலைமையிலான இந்திய அணி சிறப்பான வெற்றியைப் பதிவு செய்தது.

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பும்ரா கேப்டனாக செயல்படுவதற்கு அவரது உடல் தகுதி மட்டுமே கவலையளிக்கும் விஷயமாக உள்ளது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பார்டர் - கவாஸ்கர் டெஸ்ட் தொடரின்போது, முதுகுப் பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக சிட்னியில் நடைபெற்ற கடைசி டெஸ்ட் போட்டியில் இரண்டாவது இன்னிங்ஸில் அவர் பந்துவீசவில்லை. இந்த காயம் காரணமாகவே சாம்பியன்ஸ் டிராபி தொடரில் பும்ரா விளையாட முடியாமல் போனது.

3 டெஸ்ட் போட்டிகளில் கே.எல்.ராகுல் இந்திய அணியை கேப்டனாக வழிநடத்தியுள்ளார். அதில், கடந்த 2022 ஆம் ஆண்டு வங்கதேசத்தில் நடைபெற்ற டெஸ்ட் தொடரை இந்திய அணி 2-0 என்ற கணக்கில் அவரது தலைமையில் கைப்பற்றியது. இந்திய அணியின் கேப்டன் பொறுப்புக்கான போட்டியாளராக அவரும் வரிசையில் இருக்கிறார்.

இதையும் படிக்க: மீதமுள்ள ஐபிஎல் போட்டிகளில் வெளிநாட்டு வீரர்கள் விளையாடாதீர்கள்: முன்னாள் ஆஸி. வீரர்

ராகுல் டிராவிட் தலைமையிலான இந்திய அணி இதற்கு முன்பாக கடந்த 2007 ஆம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் டெஸ்ட் தொடரைக் கைப்பற்றியுள்ளது. அதன் பின், இந்திய அணி இங்கிலாந்தில் டெஸ்ட் தொடரை வென்றது கிடையாது. அதனால், இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடர் இந்திய அணிக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

இங்கிலாந்து லயன்ஸ் அணிக்கு எதிரான இந்தியா ஏ அணி அறிவிப்பு!

இங்கிலாந்துக்கு லயன்ஸ் அணிக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட தொடருக்கான இந்தியா ஏ அணியை பிசிசிஐ இன்று (மே 16) அறிவித்துள்ளது.இந்திய அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் ... மேலும் பார்க்க

நான் பயிற்சியாளராக இருந்திருந்தால், ரோஹித் சிட்னி டெஸ்ட்டில் விளையாடியிருப்பார்: ரவி சாஸ்திரி

தான் பயிற்சியாளராக இருந்திருந்தால், சிட்னி டெஸ்ட் போட்டியில் உங்களை விளையாட வைத்திருப்பேன் என ரோஹித் சர்மாவிடம் கூறியதாக இந்திய அணியின் முன்னாள் தலைமைப் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார்.இந்த... மேலும் பார்க்க

இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள், டி20 தொடர்களுக்கான இந்திய அணி அறிவிப்பு!

இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள், டி20 தொடர்களுக்கான இந்திய மகளிரணி இன்று (மே 15) அறிவிக்கப்பட்டுள்ளது.இந்திய மகளிரணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர... மேலும் பார்க்க

ரோஹித் சர்மா, விராட் கோலி ஓய்வு பெற்றதால் அச்சமடையத் தேவையில்லை: முன்னாள் இந்திய வீரர்

டெஸ்ட் போட்டிகளிலிருந்து ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி ஓய்வு பெற்றதால் ரசிகர்கள் பெரிய அளவில் அச்சமடையத் தேவையில்லை என இந்திய அணியின் முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்ச்ரேக்கர் தெரிவித்துள்ளார்.இந்திய அணிய... மேலும் பார்க்க

இங்கிலாந்து அணியின் ஆலோசகராக டிம் சௌதி நியமனம்!

இங்கிலாந்து அணியின் ஆலோசகராக நியூசிலாந்து அணியின் முன்னாள் வேகப் பந்துவீச்சாளர் டிம் சௌதி நியமிக்கப்பட்டுள்ளார்.இந்திய அணி இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விள... மேலும் பார்க்க

10 நொடிகள் அசையாமல் நின்ற இங்கிலாந்து வீரர்..! வைரலாகும் விடியோ!

இங்கிலாந்து வீரர் ஜானி பெயர்ஸ்டோ 10 நொடிகள் அசையாமல் நின்ற விடியோ வைரலாகி வருகிறது. 35 வயதாகும் ஜானி பெயர்ஸ்டோ தற்போது கவுண்டி சாம்பியன்ஷிப் டிவிஷன் 1-இல் விளையாடி வருகிறார். இந்தத் தொடரில் யார்க்‌ஷ்ர... மேலும் பார்க்க