செய்திகள் :

ரோஹித் சர்மா, விராட் கோலி ஓய்வு பெற்றதால் அச்சமடையத் தேவையில்லை: முன்னாள் இந்திய வீரர்

post image

டெஸ்ட் போட்டிகளிலிருந்து ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி ஓய்வு பெற்றதால் ரசிகர்கள் பெரிய அளவில் அச்சமடையத் தேவையில்லை என இந்திய அணியின் முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்ச்ரேக்கர் தெரிவித்துள்ளார்.

இந்திய அணியின் மூத்த வீரர்களான ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி இருவரும் அண்மையில் டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தனர். இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ள நிலையில், இருவரும் ஓய்வு பெற்றுள்ளது இந்திய அணிக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

இதையும் படிக்க: இங்கிலாந்து அணியின் ஆலோசகராக டிம் சௌதி நியமனம்

அச்சமடையத் தேவையில்லை

டெஸ்ட் போட்டிகளிலிருந்து ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி ஓய்வு பெற்றுள்ளதால், ரசிகர்கள் அச்சமடையத் தேவையில்லை என இந்திய அணியின் முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்ச்ரேக்கர் தெரிவித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.

இது தொடர்பாக அவர் பேசியதாவது: ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி இருவரும் டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வை அறிவித்துள்ளதால், இந்திய அணியின் எதிர்காலம் குறித்து சில ரசிகர்கள் கவலையாக இருப்பார்கள் எனத் தெரியும். இந்திய அணியின் சிறந்த வீரர்களான சச்சின் டெண்டுல்கர், ராகுல் டிராவிட், விவிஎஸ் லக்‌ஷ்மன் மற்றும் சௌரவ் கங்குலி ஒரே நேரத்தில் ஓய்வு பெற்றதால், ரசிகர்கள் கவலையடைந்தனர். ஆனால், சில ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய அணி டெஸ்ட் போட்டிகளுக்கான தரவரிசையில் முதலிடம் பிடித்தது.

உலகின் சிறந்த அணியாகவும் இந்திய அணி மாறியது. அதனால், இந்தியாவில் விளையாட்டு மிகவும் பிரபலமாக இருப்பதால், இந்திய அணிக்காக விளையாட போதுமான இளம் வீரர்கள் தொடர்ந்து இருந்துகொண்டிருப்பதாக நான் உறுதியாக நம்புகிறேன். வெளிநாட்டு ஆடுகளங்களில் விளையாடும்போது, உங்களுக்கு சிறிது நேரம் தேவைப்படும். ஏனெனில், வெளிநாட்டு ஆடுகளங்களில் பேட்டிங் செய்வது கடினம்.

இதையும் படிக்க: 10 நொடிகள் அசையாமல் நின்ற இங்கிலாந்து வீரர்..! வைரலாகும் விடியோ!

ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி இருவரும் அணியில் இருந்தபோதும், நாம் நியூசிலாந்துக்கு எதிராகவும், ஆஸ்திரேலியாவுக்கு எதிராகவும் தொடர்களை இழந்தோம். அதனால், தற்போதுள்ள இந்திய அணி இழப்பதற்கு ஒன்றுமில்லை. புதிய இந்திய அணிக்கு எனது வாழ்த்துகள் என்றார்.

இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள், டி20 தொடர்களுக்கான இந்திய அணி அறிவிப்பு!

இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள், டி20 தொடர்களுக்கான இந்திய மகளிரணி இன்று (மே 15) அறிவிக்கப்பட்டுள்ளது.இந்திய மகளிரணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர... மேலும் பார்க்க

இங்கிலாந்து அணியின் ஆலோசகராக டிம் சௌதி நியமனம்!

இங்கிலாந்து அணியின் ஆலோசகராக நியூசிலாந்து அணியின் முன்னாள் வேகப் பந்துவீச்சாளர் டிம் சௌதி நியமிக்கப்பட்டுள்ளார்.இந்திய அணி இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விள... மேலும் பார்க்க

10 நொடிகள் அசையாமல் நின்ற இங்கிலாந்து வீரர்..! வைரலாகும் விடியோ!

இங்கிலாந்து வீரர் ஜானி பெயர்ஸ்டோ 10 நொடிகள் அசையாமல் நின்ற விடியோ வைரலாகி வருகிறது. 35 வயதாகும் ஜானி பெயர்ஸ்டோ தற்போது கவுண்டி சாம்பியன்ஷிப் டிவிஷன் 1-இல் விளையாடி வருகிறார். இந்தத் தொடரில் யார்க்‌ஷ்ர... மேலும் பார்க்க

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு ரூ.49 கோடி பரிசுத்தொகை: கடந்த சீசனைவிட 2 மடங்கு அதிகம்!

ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் அணிகளுக்கான பரிசுத் தொகை அறிவிக்கப்பட்டுள்ளது.லண்டனில் நடைபெறவிருக்கும் இதன் இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவும் தென்னாப்பிரிக்காவும் வரும் ஜூன் மாதம் 11-15ஆம் தேதிகளில் ... மேலும் பார்க்க

விராட் கோலியின் வீழ்ச்சிக்குக் காரணமான ஈகோவும் ‌ஆளுமைச் சிதைவும்!

சச்சின் டெண்டுல்கர் (40), ராகுல் திராவிட் (39), விவிஎஸ் லக்ஷ்மணனை (38) விட குறைவான வயதில் விராட் கோலி (36) ஓய்வுபெற அவரது ஈகோவும் நார்சிஸ்டிக் ஆளுமைக் குறைபாடும்தான் காரணங்கள் என்றால் வியப்பதற்கில்லை.... மேலும் பார்க்க

டெஸ்ட் வரலாற்றில் சாதனை படைத்த ஜடேஜா..! சிஎஸ்கே வாழ்த்து!

இந்திய அணியின் ஆல் ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் புதிய சாதனையை நிகழ்த்தியுள்ளார். ஐசிசி டெஸ்ட் ஆல்ரவுண்டர் தரவரிசையில் ஜடேஜா அதிக நாள்கள் (1,151 நாள்கள்) முதலிடத்தில் இருந்து சா... மேலும் பார்க்க