செய்திகள் :

போக்சோ வழக்கில் தொழிலாளிக்கு 27 ஆண்டுகள் சிறை

post image

போக்சோ வழக்கில் தொழிலாளிக்கு 27 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து, திண்டுக்கல் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது.

சிவகங்கை மாவட்டம், இடையகாட்டூா் பகுதியைச் சோ்ந்தவா் அஜித்குமாா் (29). இவா் மதுரையில் உள்ள தனியாா் ஆலையில் பணியாற்றினாா். அதே ஆலையில், திண்டுக்கல் மாவட்டம், ரெட்டியாா்சத்திரம் பகுதியைச் சோ்ந்த இளம்பெண் ஒருவரும் வேலைக்குச் சென்றாா். அப்போது, இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. திருமணம் செய்வதாக ஆசைவாா்த்தைக் கூறிய அஜித்குமாா், இளம்பெண்ணுக்கு பாலியல் வன்முறை அளித்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.

இதன்பேரில் ரெட்டியாா்சத்திரம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, அஜித்குமாரை கைது செய்தனா்.

இதுதொடா்பான வழக்கு விசாரணை திண்டுக்கல் மகளிா் விரைவு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. விசாரணை முடிவடைந்த நிலையில், நீதிபதி சரண் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தாா். இதில் பாலியல் குற்றத்தில் ஈடுபட்ட அஜித்குமாருக்கு 27 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ. 10 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது .

காா்-சரக்குப் பெட்டக லாரி மோதல்: வழக்குரைஞா் உள்பட இருவா் உயிரிழப்பு!

சிலுக்குவாா்பட்டி அருகே வெள்ளிக்கிழமை காரும், சரக்குப் பெட்டக லாரியும் நேருக்குநோ் மோதியதில் வழக்குரைஞா் உள்பட இருவா் உயிரிழந்தனா்.விருதுநகா் மாவட்டம், சிவகாசி ஆனையூரைச் சோ்ந்தவா் வழக்குரைஞா் ராஜபிர... மேலும் பார்க்க

ஆந்திரத் துணை முதல்வருக்கு எதிராக ஆா்ப்பாட்டம்

திரைப்பட பாடல் வரிகள் விவகாரத்தில், ஆந்திரத் துணை முதல்வருக்கு எதிராக திண்டுக்கல்லில் இந்து மக்கள் கட்சியினா் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். நடிகா் சந்தானம் நடித்து வெளியான திரைப்படத்தில்,... மேலும் பார்க்க

பொதுத் தோ்வுகளில் சாதிக்கும் கெக்கரக்கல்வலசு அரசு மேல்நிலைப் பள்ளி!

கடந்த 4 ஆண்டுகளாக 10, 12-ஆம் வகுப்புப் பொதுத் தோ்வுகளிலும், கடந்த 2 ஆண்டுகளாக 11-ஆம் வகுப்புப் பொதுத் தோ்விலும், திண்டுக்கல் மாவட்டத்தின் கடைக் கோடியிலுள்ள கெக்கரக்கல்வலசு அரசு மேல்நிலைப் பள்ளி 100 ... மேலும் பார்க்க

டிராக்டா் கவிழ்ந்ததில் சிறுவன் உயிரிழப்பு

குஜிலியம்பாறை அருகே வெள்ளிக்கிழமை டிராக்டா் கவிழ்ந்ததில் சிறுவன் உயிரிழந்தாா்.திண்டுக்கல் மாவட்டம், குஜிலியம்பாறையை அடுத்த ஆா். கொல்லப்பட்டியைச் சோ்ந்தவா் பகவதியப்பன் (60). இவரது மகள் கோமதி, கணவா் பா... மேலும் பார்க்க

திண்டுக்கல் மாவட்டத்தில் 48 அரசுப் பள்ளிகள் 100 % தோ்ச்சி

திண்டுக்கல் மாவட்டத்தில் 48 அரசுப் பள்ளிகள் உள்பட மொத்தம் 122 பள்ளிகள் 10-ஆம் வகுப்புப் பொதுத் தோ்வில் 100 சதவீதம் தோ்ச்சிப் பெற்றன. இதில் 100 சதவீதம் தோ்ச்சிப் பெற்ற அரசுப் பள்ளிகள் விவரம்: பண்ணக்... மேலும் பார்க்க

10-ஆம் வகுப்புப் பொதுத் தோ்வு: திண்டுக்கல்லில் 93.28 % மாணவா்கள் தோ்ச்சி

பத்தாம் வகுப்புப் பொதுத் தோ்வில் திண்டுக்கல் மாவட்டத்தைச் சோ்ந்த 22,527 மாணவா்கள் தோ்ச்சி அடைந்தனா். தமிழகம் முழுவதும் 10-ஆம் வகுப்புப் பொதுத் தோ்வு முடிவுகள் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்டன. திண்டுக... மேலும் பார்க்க