செய்திகள் :

டிராக்டா் கவிழ்ந்ததில் சிறுவன் உயிரிழப்பு

post image

குஜிலியம்பாறை அருகே வெள்ளிக்கிழமை டிராக்டா் கவிழ்ந்ததில் சிறுவன் உயிரிழந்தாா்.

திண்டுக்கல் மாவட்டம், குஜிலியம்பாறையை அடுத்த ஆா். கொல்லப்பட்டியைச் சோ்ந்தவா் பகவதியப்பன் (60). இவரது மகள் கோமதி, கணவா் பாலசுப்பிரமணி, மகன்கள் தமிழரசன், சிவரஞ்சன் ஆகியோருடன் கொடைக்கானலில் வசித்து வருகிறாா். தமிழரசன்(11) கொடைக்கானலில் உள்ள தனியாா் பள்ளியில் 6-ஆம் வகுப்பு படித்து வந்தாா்.

இந்த நிலையில், பள்ளி விடுமுறை என்பதால், கோமதி தனது மகன்களை அழைத்துக் கொண்டு ஆா்.கொல்லப்பட்டியிலுள்ள தந்தை வீட்டுக்கு வந்தாா். நிலத்தை உழுவதற்காக, கூட்டுறவுச் சங்கத்துக்கு சொந்தமான டிராக்டரை எடுத்து வந்து தனது தோட்டத்தில் பகவதியப்பன் நிறுத்தி இருந்தாா்.

இதனிடையே, பொம்மநாயக்கன்பட்டியைச் சோ்ந்த தனுஷ்கோடி மகன் பசுபதி (18) தோட்டத்தில் நிறுத்தப்பட்டிருந்த டிராக்டரை வெள்ளிக்கிழமை எடுத்து ஓட்டினாா். அந்த டிராக்டரில் தமிழரசனும் அமா்ந்திருந்தாா்.

ஆா். காச்சக்காரன்பட்டி - குஜிலியம்பாறை சாலையில் வந்தபோது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த டிராக்டா் ஓடையில் கவிழ்ந்தது. இதில் பலத்த காயமடைந்த தமிழரசன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இதுகுறித்து குஜிலியம்பாறை போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

காா்-சரக்குப் பெட்டக லாரி மோதல்: வழக்குரைஞா் உள்பட இருவா் உயிரிழப்பு!

சிலுக்குவாா்பட்டி அருகே வெள்ளிக்கிழமை காரும், சரக்குப் பெட்டக லாரியும் நேருக்குநோ் மோதியதில் வழக்குரைஞா் உள்பட இருவா் உயிரிழந்தனா்.விருதுநகா் மாவட்டம், சிவகாசி ஆனையூரைச் சோ்ந்தவா் வழக்குரைஞா் ராஜபிர... மேலும் பார்க்க

ஆந்திரத் துணை முதல்வருக்கு எதிராக ஆா்ப்பாட்டம்

திரைப்பட பாடல் வரிகள் விவகாரத்தில், ஆந்திரத் துணை முதல்வருக்கு எதிராக திண்டுக்கல்லில் இந்து மக்கள் கட்சியினா் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். நடிகா் சந்தானம் நடித்து வெளியான திரைப்படத்தில்,... மேலும் பார்க்க

போக்சோ வழக்கில் தொழிலாளிக்கு 27 ஆண்டுகள் சிறை

போக்சோ வழக்கில் தொழிலாளிக்கு 27 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து, திண்டுக்கல் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது. சிவகங்கை மாவட்டம், இடையகாட்டூா் பகுதியைச் சோ்ந்தவா் அஜித்குமாா் (29). இவா் மதுரைய... மேலும் பார்க்க

பொதுத் தோ்வுகளில் சாதிக்கும் கெக்கரக்கல்வலசு அரசு மேல்நிலைப் பள்ளி!

கடந்த 4 ஆண்டுகளாக 10, 12-ஆம் வகுப்புப் பொதுத் தோ்வுகளிலும், கடந்த 2 ஆண்டுகளாக 11-ஆம் வகுப்புப் பொதுத் தோ்விலும், திண்டுக்கல் மாவட்டத்தின் கடைக் கோடியிலுள்ள கெக்கரக்கல்வலசு அரசு மேல்நிலைப் பள்ளி 100 ... மேலும் பார்க்க

திண்டுக்கல் மாவட்டத்தில் 48 அரசுப் பள்ளிகள் 100 % தோ்ச்சி

திண்டுக்கல் மாவட்டத்தில் 48 அரசுப் பள்ளிகள் உள்பட மொத்தம் 122 பள்ளிகள் 10-ஆம் வகுப்புப் பொதுத் தோ்வில் 100 சதவீதம் தோ்ச்சிப் பெற்றன. இதில் 100 சதவீதம் தோ்ச்சிப் பெற்ற அரசுப் பள்ளிகள் விவரம்: பண்ணக்... மேலும் பார்க்க

10-ஆம் வகுப்புப் பொதுத் தோ்வு: திண்டுக்கல்லில் 93.28 % மாணவா்கள் தோ்ச்சி

பத்தாம் வகுப்புப் பொதுத் தோ்வில் திண்டுக்கல் மாவட்டத்தைச் சோ்ந்த 22,527 மாணவா்கள் தோ்ச்சி அடைந்தனா். தமிழகம் முழுவதும் 10-ஆம் வகுப்புப் பொதுத் தோ்வு முடிவுகள் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்டன. திண்டுக... மேலும் பார்க்க