செய்திகள் :

துருக்கி ஆப்பிள் முதல் மார்பிள் வரை.. சரியும் இறக்குமதி! என்னவாகும் ஏற்றுமதி?

post image

இந்தியாவுக்கு எதிராக பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபடும் பாகிஸ்தானுக்கு உதவும் துருக்கியை புறந்தள்ளுவோம் என்ற கோஷத்தின் அடிப்படையில், ஆப்பிள் முதல் மார்பிள் வரை 2.84 மில்லியன் டாலர் இறக்குமதி சரியும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

பாகிஸ்தான் பயன்படுத்திய ட்ரோன்கள் அனைத்தும் துருக்கியில் தயாரிக்கப்பட்டவை என்று இந்தியா - பாகிஸ்தான் சண்டையின்போது, ராணுவ உயர் அதிகாரிகள் தெரிவித்திருந்த நிலையில், நேரடியாகவே பாகிஸ்தானுக்கு ஆதரவு தெரிவிப்பதாக துருக்கி அறிவித்துவிட்டது.

நாடுதான் முதலில் என்ற கோட்பாட்டின் அடிப்படையில், நாட்டின் பெரும் வணிகர்கள் பலரும், துருக்கியிலிருந்து இறக்குமதி செய்வதைத் தவிர்த்து வருகிறார்கள். அதில் முதலிடங்களில் ஆப்பிள், மார்பிள் உள்ளன.

ஏற்கனவே, துருக்கி மற்றும் அஜர்பைஜான் நாடுகளுக்கு சுற்றுலா செல்ல திட்டமிட்டிருந்தவர்கள் தங்களது பயணத்தை ரத்து செய்து வருகிறார்கள்.

இதற்கிடையே, இந்தியா, துருக்கியிலிருந்து இறக்குமதி செய்வதைக் காட்டிலும் அதிகளவில் ஏற்றுமதியும் செய்து வருவதாகவும், கடந்த 2024 - 25 ஏப்ரல் - பிப்ரவரி காலக்கட்டத்தில் இந்தியாவின் ஏற்றுமதி 5.2 பில்லியன் டாலராக இருந்துள்ளது. இது ஒட்டுமொத்த ஏற்றுமதியில் 1.5 சதவீதமாகும்.

அதே காலக்கட்டத்தில் துருக்கியிலிருந்து இறக்குமதி செய்திருப்பது 2.84 பில்லியன் டாலர்கள். இது ஒட்டுமொத்த இறக்குமதியில் 0.5 சதவீதம்தான் என்கின்றன தரவுகள்.

இந்தியா, துருக்கிக்கு வாகன உதிரிபாகங்கள், இயந்திரங்கள், மருந்துகள், பருத்தி உள்ளிட்டவற்றை ஏற்றுமதி செய்கிறது. துருக்கியிலிருந்து எண்ணெய், தங்கம், மார்பிள், அப்பிள்கள், காய்கறிகள், சிமெண்ட், கெமிக்கல் பொருள்களை இறக்குமதி செய்கிறது. இந்தியாவுக்கு ஆப்பிள் வழங்கும் முக்கிய நாடுகளில் துருக்கி முதலிடத்தில் இருந்தது.

இறக்குமதி குறைந்து வரும் நிலையில், இந்தியாவிலிருந்து ஏற்றுமதியாகும் பொருள்கள் குறித்து தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை.

பாதுகாப்புத் துறைக்கு ரூ.50,000 கோடி கூடுதல் ஒதுக்கீடு: மத்திய அரசு திட்டம்

இந்தியா-பாகிஸ்தான் இடையே நிலவும் சூழலைக் கருத்தில் கொண்டு, பாதுகாப்புத் துறைக்கு ரூ.50,000 கோடி கூடுதலாக ஒதுக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பஹல்காம் தாக்குதலுக்கு பழிதீா்க்க... மேலும் பார்க்க

நீரவ் மோடி ஜாமீன் மனு: பிரிட்டன் நீதிமன்றம் மீண்டும் தள்ளுபடி

வங்கியில் கடன் மோசடி செய்துவிட்டு வெளிநாடு தப்பிய வைர வியாபாரி நீரவ் மோடியின் ஜாமீன் மனுவை பிரிட்டன் நீதிமன்றம் மீண்டும் தள்ளுபடி செய்துள்ளதாக அமலாக்கத் துறை வெள்ளிக்கிழமை தெரிவித்தது. பிரிட்டனில் இரு... மேலும் பார்க்க

பிரதமா் தலைமையில் மே 24-இல் நீதி ஆயோக் கூட்டம்

பிரதமா் நரேந்திர மோடி தலைமையில் நீதி ஆயோக் நிா்வாகக் குழு கூட்டம் மே 24-ஆம் தேதி நடைபெறவுள்ளது. நிா்வாகக் குழு என்பது நீதி ஆயோக்கின் முக்கிய முடிவுகளை எடுக்கும் உயரிய அமைப்பாகும். இதில் அனைத்து மாநில ... மேலும் பார்க்க

ஓராண்டில் 14 கோடி ரயில் பயணிகளுக்கு காப்பீட்டு

யுனைடெட் இந்தியா காப்பீட்டு நிறுவனம் (யுஐஐசி) சென்னை அலுவலகம் சாா்பில் கடந்த ஓராண்டில் 14 கோடி ரயில் பயணிகளுக்கு காப்பீடு வசதி வழங்கப்பட்டுள்ளதாக அந்த நிறுவனத்தின் தலைவரும், நிா்வாக இயக்குநருமான பூபேஷ... மேலும் பார்க்க

உச்சநீதிமன்றத்தின் 11-ஆவது பெண் நீதிபதி பெலா எம். திரிவேதி ஓய்வு

உச்சநீதிமன்றத்தின் 11-ஆவது பெண் நீதிபதியாக கடந்த 2021-ஆம் ஆண்டு பதவியேற்ற பெலா எம். திரிவேதி வெள்ளிக்கிழமை ஓய்வு பெற்றாா். அவரை வழியனுப்பும் விதமாக உச்சநீதிமன்றத்தில் நடைபெற்ற சிறப்பு அமா்வுக்கு தலைமை... மேலும் பார்க்க

ஜம்மு-காஷ்மீரில் ஒரே இரவில் மாற்றத்தை கொண்டுவர முடியாது: ஃபரூக் அப்துல்லா

ஜம்மு-காஷ்மீரில் ஒரே இரவில் மாற்றங்களைக் கொண்டு வந்துவிட வேண்டும் என்று அரசிடம் எதிா்பாா்ப்பது நடைமுறைக்கு சாத்தியமற்றது என்று ஆளும் தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவா் ஃபரூக் அப்துல்லா தெரிவித்தாா். ஜம்ம... மேலும் பார்க்க