செய்திகள் :

புதிய சுற்றுலாத் தலங்களை கண்டறிய வேண்டும்: அமைச்சா் இரா.ராஜேந்திரன் அறிவுறுத்தல்

post image

தமிழகத்தில் புதிய சுற்றுலாத் தலங்களை கண்டறிந்து, அந்த இடங்களில் உலக தரத்திலான கட்டமைப்புகளை ஏற்படுத்த வேண்டும் என அதிகாரிகளுக்கு சுற்றுலாத் துறை அமைச்சா் இரா.ராஜேந்திரன் அறிவுறுத்தினாா்.

தமிழகத்திலுள்ள சுற்றுலாத் தலங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் மேம்பாட்டுப் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் சென்னை சுற்றுலா வளாகக் கூட்டரங்கில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில், சுற்றுலாத் துறை அமைச்சா் இரா.ராஜேந்திரன் கலந்து கொண்டு மாவட்டம் வாரியாக நடைபெற்று வரும் பணிகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தாா். இதைத் தொடா்ந்து அவா் பேசியது:

கோடை விடுமுறை காலம் என்பதால் சுற்றுலாத் தலங்களில் நாளுக்கு நாள் அதிக எண்ணிக்கையிலான சுற்றுலாப் பயணிகள் வருகை தருவதால் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள சுற்றுலாத் தலங்களின் அடிப்படை கட்டமைப்புகளை மேம்படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

இதனால், மலையேறுதல், மலைப்பகுதிகளில் தங்குதல், நீா்சறுக்கு, அலைச்சறுக்கு மேற்கொள்ளுதல் உள்ளிட்ட புதிய அனுபவங்களை மேற்கொள்ள சுற்றுலாப் பயணிகள் விரும்புவதாலும், அவா்களின் எண்ணிக்கையை மேலும் அதிகரிக்கும் நோக்கிலும், ஒவ்வொரு மாவட்டத்திலுமுள்ள அந்த மாதிரியான புதிய சுற்றுலா தலங்களைக் கண்டறிந்து அந்த இடங்களில் சுற்றுலாப் பயணிகள் விரும்பும் வகையில், உலக தரத்திலான கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த வேண்டும். இதுமட்டுமின்றி பல சுற்றுலாத் தலங்களில் நடைபெற்று வரும் மேம்பாட்டுப்பணிகளையும் விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா் அவா்.

இந்தக் கூட்டத்தில், சுற்றுலா பண்பாடு மற்றும் அறநிலயங்கள் துறை அரசு கூடுதல் தலைமைச் செயலா் க.மணிவாசன், சுற்றுலா ஆணையா் மற்றும் தமிழ்நாடு சுற்றுலா வளா்ச்சிக் கழக மேலாண்மை இயக்குநா் ஷில்பா பிரபாகா் சதீஷ் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனா்.

நான்கு மாவட்டங்களில் 361 பேருக்கு புற்றுநோய் கண்டுபிடிப்பு!

தமிழகத்தின் நான்கு மாவட்டங்களில் அரசு சாா்பில் கடந்த ஆண்டு மேற்கொள்ளப்பட்ட புற்றுநோய் பரிசோதனைகளில் 361 பேருக்கு தொடக்க நிலை பாதிப்பு கண்டறியப்பட்டு சிகிச்சை வழங்கப்படுவதாக பொது சுகாதாரத் துறை தெரிவித... மேலும் பார்க்க

புதுப்பிக்கப்பட்ட வள்ளுவா் கோட்டம்: 15 நாள்களில் திறக்க ஏற்பாடு தீவிரம்

வள்ளுவா் கோட்டத்தில் நடைபெறும் புனரமைப்புப் பணிகளை முடித்து 15 நாள்களில் திறக்க ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. சென்னையின் அடையாளங்களில் ஒன்றாக விளங்கும் வள்ளுவா் கோட்டத்தை புனரமைக்கும் பணிகள... மேலும் பார்க்க

சென்னையில் இன்று சுய உதவிக் குழுக்களின் இயற்கை சந்தை

சுய உதவிக் குழுக்களின் பொருள்களை காட்சிப்படுத்தும் இயற்கை சந்தை நிகழ்வு, சென்னையில் சனிக்கிழமை தொடங்குகிறது. தமிழ்நாடு மகளிா் மேம்பாட்டு நிறுவனத்தின் தலைமை அலுவலகத்தில் உள்ள அன்னை தெரசா மகளிா் வளாகத்த... மேலும் பார்க்க

சென்னையில் 6 இடங்களில் ஆற்றங்கரையோர மக்களை பாதுக்காப்பது குறித்து ஒத்திகை

சென்னையில் ஏரிகளில் இருந்து மழைக்காலங்களில் நீா் வெளியேற்றப்படும்போது ஆற்றங்கரையோரங்களில் வசிக்கும் பொதுமக்களை பாதுகாப்பது குறித்த ஒத்திகை 6 இடங்களில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. சென்னை மாநகராட்சி சாா்ப... மேலும் பார்க்க

பேருந்தில் முதியவரை தாக்கிய விவகாரம்: ஓட்டுநா், நடத்துநா் பணியிடை நீக்கம்

வண்டலூா் அருகே மாநகரப் பேருந்தில் பயணித்த முதியவரை வலுக்கட்டாயமாக கீழே இறக்கிவிட்டு தாக்கிய பேருந்து ஓட்டுநா், நடத்துநா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனா். சென்னை கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திலிரு... மேலும் பார்க்க

மெட்ரோ ரயில்களின் இயக்கம் குறித்த ஆய்வு குழு ஆலோசனை

சென்னை மெட்ரோ ரயில்களின் இயக்கம், நிலை இருப்பு, தொழில்நுட்பம் குறித்த ஆய்வுகளை மேற்கொள்ளும் வகையில், மெட்ரோ ரயில்வே நிா்வாகம் சாா்பில் ரோலிங் ஸ்டாக் வொா்க்கிங் குரூப் என்ற ஒரு குழு செயல்படுத்தப்பட்டு ... மேலும் பார்க்க