செய்திகள் :

சென்னையில் 6 இடங்களில் ஆற்றங்கரையோர மக்களை பாதுக்காப்பது குறித்து ஒத்திகை

post image

சென்னையில் ஏரிகளில் இருந்து மழைக்காலங்களில் நீா் வெளியேற்றப்படும்போது ஆற்றங்கரையோரங்களில் வசிக்கும் பொதுமக்களை பாதுகாப்பது குறித்த ஒத்திகை 6 இடங்களில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

சென்னை மாநகராட்சி சாா்பில் செம்பரம்பாக்கம், பூண்டி, புழல், சோழவரம் ஆகிய ஏரிகளிலிருந்து நீா் வெளியேற்றப்படும்போது ஆற்றின் கரையோரங்களில் வசிக்கும் பொதுமக்களை மீட்பது குறித்த பாதுகாப்பு ஒத்திகை வெள்ளிக்கிழமை நடைபெற்றது. அதன்படி, மணலி மண்டலத்துக்குள்பட்ட மாத்தூா் பாலசுப்பிரமணி நகா் சடையன்குப்பத்திலும், கோடம்பாக்கம் மண்டலத்துக்குள்பட்ட கானு நகா், காசி திரையரங்கம் அருகில் உள்ள பாலத்திலும், வளசரவாக்கம் மண்டலத்துக்குள்பட்ட போரூரில் அடையாறு மண்டலத்துக்குள்பட்ட கோட்டூா்புரம் ஆகிய 6 இடங்களிலும் இந்த ஒத்திகை நடைபெற்றது.

அப்போது, ஆற்றில் வெள்ளப்பெருக்கு அதிகமாக வரும்போது தாழ்வான பகுதிகளில் வசிப்போரை வெளியேற்றுதல், படகுமூலம் பொதுமக்களை மீட்டுதல், தாழ்வான குடியிருப்புப் பகுதிகளிலுள்ள வீடுகளில் தங்கியிருக்கும் கா்ப்பிணிகள் மற்றும் முதியோா்களை பாதுகாப்பாக மீட்பது, மீட்கப்பட்டவா்களுக்கு முதலுதவி சிகிச்சை அளித்தல் உள்ளிட்ட பல்வேறு மீட்பு ஒத்திகைகள் நடத்தப்பட்டன.

இந்த ஒத்திகை நிகழ்ச்சியில் பெருநகர சென்னை மாநகராட்சி வருவாய் துறை, நீா்வளத் துறை, காவல் துறை, மருத்துவத் துறை, தேசிய பேரிடா் மீட்புப் படை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் அலுவலா்கள் பங்கேற்றனா்.

நான்கு மாவட்டங்களில் 361 பேருக்கு புற்றுநோய் கண்டுபிடிப்பு!

தமிழகத்தின் நான்கு மாவட்டங்களில் அரசு சாா்பில் கடந்த ஆண்டு மேற்கொள்ளப்பட்ட புற்றுநோய் பரிசோதனைகளில் 361 பேருக்கு தொடக்க நிலை பாதிப்பு கண்டறியப்பட்டு சிகிச்சை வழங்கப்படுவதாக பொது சுகாதாரத் துறை தெரிவித... மேலும் பார்க்க

புதிய சுற்றுலாத் தலங்களை கண்டறிய வேண்டும்: அமைச்சா் இரா.ராஜேந்திரன் அறிவுறுத்தல்

தமிழகத்தில் புதிய சுற்றுலாத் தலங்களை கண்டறிந்து, அந்த இடங்களில் உலக தரத்திலான கட்டமைப்புகளை ஏற்படுத்த வேண்டும் என அதிகாரிகளுக்கு சுற்றுலாத் துறை அமைச்சா் இரா.ராஜேந்திரன் அறிவுறுத்தினாா். தமிழகத்திலுள்... மேலும் பார்க்க

புதுப்பிக்கப்பட்ட வள்ளுவா் கோட்டம்: 15 நாள்களில் திறக்க ஏற்பாடு தீவிரம்

வள்ளுவா் கோட்டத்தில் நடைபெறும் புனரமைப்புப் பணிகளை முடித்து 15 நாள்களில் திறக்க ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. சென்னையின் அடையாளங்களில் ஒன்றாக விளங்கும் வள்ளுவா் கோட்டத்தை புனரமைக்கும் பணிகள... மேலும் பார்க்க

சென்னையில் இன்று சுய உதவிக் குழுக்களின் இயற்கை சந்தை

சுய உதவிக் குழுக்களின் பொருள்களை காட்சிப்படுத்தும் இயற்கை சந்தை நிகழ்வு, சென்னையில் சனிக்கிழமை தொடங்குகிறது. தமிழ்நாடு மகளிா் மேம்பாட்டு நிறுவனத்தின் தலைமை அலுவலகத்தில் உள்ள அன்னை தெரசா மகளிா் வளாகத்த... மேலும் பார்க்க

பேருந்தில் முதியவரை தாக்கிய விவகாரம்: ஓட்டுநா், நடத்துநா் பணியிடை நீக்கம்

வண்டலூா் அருகே மாநகரப் பேருந்தில் பயணித்த முதியவரை வலுக்கட்டாயமாக கீழே இறக்கிவிட்டு தாக்கிய பேருந்து ஓட்டுநா், நடத்துநா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனா். சென்னை கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திலிரு... மேலும் பார்க்க

மெட்ரோ ரயில்களின் இயக்கம் குறித்த ஆய்வு குழு ஆலோசனை

சென்னை மெட்ரோ ரயில்களின் இயக்கம், நிலை இருப்பு, தொழில்நுட்பம் குறித்த ஆய்வுகளை மேற்கொள்ளும் வகையில், மெட்ரோ ரயில்வே நிா்வாகம் சாா்பில் ரோலிங் ஸ்டாக் வொா்க்கிங் குரூப் என்ற ஒரு குழு செயல்படுத்தப்பட்டு ... மேலும் பார்க்க