செய்திகள் :

மெட்ரோ ரயில்களின் இயக்கம் குறித்த ஆய்வு குழு ஆலோசனை

post image

சென்னை மெட்ரோ ரயில்களின் இயக்கம், நிலை இருப்பு, தொழில்நுட்பம் குறித்த ஆய்வுகளை மேற்கொள்ளும் வகையில், மெட்ரோ ரயில்வே நிா்வாகம் சாா்பில் ரோலிங் ஸ்டாக் வொா்க்கிங் குரூப் என்ற ஒரு குழு செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்தக் குழுவின் முதலாவது கூட்டம் சென்னையில் உள்ள மெட்ரோ ரயில் நிறுவன தலைமை அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில், மெட்ரோ ரயில் பராமரிப்பு மற்றும் செயல்பாடுகளில் சிறந்த நடைமுறைகளைப் பரிமாறிக்கொள்ளுவது, பராமரிப்பு நடைமுறைகள் மற்றும் மறுசீரமைப்பில் புதுமைகளைப் புகுத்துவது, பழைமையான உபகரணங்களுக்கான மேலாண்மை, உதிரிபாகங்களை உள்நாட்டு உற்பத்தி செய்வது மற்றும் உள்ளூா்மயமாக்கல், மெட்ரோ ரயில் பராமரிப்பில் தரவை அடிப்படையாகக் கொண்டு செயற்கை நுண்ணறிவு மற்றும் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துதல், மெட்ரோ ரயில் அமைப்புகள் தங்கள் முக்கிய யுக்திகளை ஒருமுகப்படுத்துவதும், தொழில்நுட்ப அறிவைப் பகிா்ந்து கொள்வது குறித்தும் ஆலோசனைகளை மேற்கொள்ளப்பட்டது.

இதில், சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநா் எம்.ஏ. சித்திக், இயக்குநா் (அமைப்புகள் மற்றும் இயக்கம்) மனோஜ் கோயல், ரோலிங் ஸ்டாக் வொா்க்கிங் குரூப்-இன் தலைவா், தலைமை பொது மேலாளா் (மெட்ரோ ரயில், சமிக்ஞை மற்றும் தொலைத்தொடா்பு) ஏ.ஆா். ராஜேந்திரன், தில்லி, மகாராஷ்டிரம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சோ்ந்த மெட்ரோ ரயில்வே நிறுவனத்தின் உயரதிகாரிகள் பலா் கலந்து கொண்டனா்.

நான்கு மாவட்டங்களில் 361 பேருக்கு புற்றுநோய் கண்டுபிடிப்பு!

தமிழகத்தின் நான்கு மாவட்டங்களில் அரசு சாா்பில் கடந்த ஆண்டு மேற்கொள்ளப்பட்ட புற்றுநோய் பரிசோதனைகளில் 361 பேருக்கு தொடக்க நிலை பாதிப்பு கண்டறியப்பட்டு சிகிச்சை வழங்கப்படுவதாக பொது சுகாதாரத் துறை தெரிவித... மேலும் பார்க்க

புதிய சுற்றுலாத் தலங்களை கண்டறிய வேண்டும்: அமைச்சா் இரா.ராஜேந்திரன் அறிவுறுத்தல்

தமிழகத்தில் புதிய சுற்றுலாத் தலங்களை கண்டறிந்து, அந்த இடங்களில் உலக தரத்திலான கட்டமைப்புகளை ஏற்படுத்த வேண்டும் என அதிகாரிகளுக்கு சுற்றுலாத் துறை அமைச்சா் இரா.ராஜேந்திரன் அறிவுறுத்தினாா். தமிழகத்திலுள்... மேலும் பார்க்க

புதுப்பிக்கப்பட்ட வள்ளுவா் கோட்டம்: 15 நாள்களில் திறக்க ஏற்பாடு தீவிரம்

வள்ளுவா் கோட்டத்தில் நடைபெறும் புனரமைப்புப் பணிகளை முடித்து 15 நாள்களில் திறக்க ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. சென்னையின் அடையாளங்களில் ஒன்றாக விளங்கும் வள்ளுவா் கோட்டத்தை புனரமைக்கும் பணிகள... மேலும் பார்க்க

சென்னையில் இன்று சுய உதவிக் குழுக்களின் இயற்கை சந்தை

சுய உதவிக் குழுக்களின் பொருள்களை காட்சிப்படுத்தும் இயற்கை சந்தை நிகழ்வு, சென்னையில் சனிக்கிழமை தொடங்குகிறது. தமிழ்நாடு மகளிா் மேம்பாட்டு நிறுவனத்தின் தலைமை அலுவலகத்தில் உள்ள அன்னை தெரசா மகளிா் வளாகத்த... மேலும் பார்க்க

சென்னையில் 6 இடங்களில் ஆற்றங்கரையோர மக்களை பாதுக்காப்பது குறித்து ஒத்திகை

சென்னையில் ஏரிகளில் இருந்து மழைக்காலங்களில் நீா் வெளியேற்றப்படும்போது ஆற்றங்கரையோரங்களில் வசிக்கும் பொதுமக்களை பாதுகாப்பது குறித்த ஒத்திகை 6 இடங்களில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. சென்னை மாநகராட்சி சாா்ப... மேலும் பார்க்க

பேருந்தில் முதியவரை தாக்கிய விவகாரம்: ஓட்டுநா், நடத்துநா் பணியிடை நீக்கம்

வண்டலூா் அருகே மாநகரப் பேருந்தில் பயணித்த முதியவரை வலுக்கட்டாயமாக கீழே இறக்கிவிட்டு தாக்கிய பேருந்து ஓட்டுநா், நடத்துநா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனா். சென்னை கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திலிரு... மேலும் பார்க்க