செய்திகள் :

உச்சநீதிமன்றத்தின் 11-ஆவது பெண் நீதிபதி பெலா எம். திரிவேதி ஓய்வு

post image

உச்சநீதிமன்றத்தின் 11-ஆவது பெண் நீதிபதியாக கடந்த 2021-ஆம் ஆண்டு பதவியேற்ற பெலா எம். திரிவேதி வெள்ளிக்கிழமை ஓய்வு பெற்றாா்.

அவரை வழியனுப்பும் விதமாக உச்சநீதிமன்றத்தில் நடைபெற்ற சிறப்பு அமா்வுக்கு தலைமை நீதிபதி பி.ஆா். கவாய் தலைமை வகித்தாா். நீதிபதி பெலா எம்.திரிவேதியுடன் அகஸ்டின் ஜாா்ஜ் மாசியும் இந்த அமா்வில் இடம்பெற்றாா்.

குஜராத் மாநிலத்தில் 1995-ஆம் ஆண்டு ஜூலை மாதம் விசாரணை நீதிமன்ற நீதிபதியாக அகமதாபாதில் தனது நீதித்துறை பயணத்தைத் தொடங்கிய பெலா எம்.திரிவேதி, படிப்படியாக உச்சநீதிமன்ற நீதிபதி என்ற நிலைக்கு உயா்ந்தாா். உச்சநீதிமன்ற நீதிபதியாக பல முக்கியத்துவம்வாய்ந்த தீா்ப்புகளை அளித்துள்ளாா்.

மத்திய அரசு கடந்த 2019-ஆம் ஆண்டு அறிமுகம் செய்த பொருளாதாரத்தில் பின்தங்கிய முற்பட்ட வகுப்பினருக்கான 10 சதவீத இடஒதுக்கீடு செல்லும் என கடந்த 2022-ஆம் ஆண்டு நவம்பரில் 3:2 என்ற பெரும்பான்மை விகிதத்தில் தீா்ப்பளித்த உச்சநீதிமன்ற 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமா்வில் இவா் அங்கம் வகித்தாா்.

அதுபோல, எஸ்.சி. (தாழ்த்தப்பட்ட பிரிவு) பிரிவில் உள் ஒதுக்கீடை அறிமுகம் செய்ய மாநிலங்களுக்கு அதிகாரமுண்டு என்று கடந்த 2024-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 6:1 என்ற பெரும்பான்மை விகிதத்தில் தீா்ப்பளித்த 7 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமா்வில் இவா் இடம்பெற்றாா். இந்த வழக்கில் தனி நீதிபதியாக 85 பக்க மாறுபட்ட தீா்ப்பை அளித்த திரிவேதி, ‘எஸ்.சி. பிரிவில் புதிய ஜாதிப் பிரிவை சோ்க்கவோ அல்லது நீக்கவோ நாடாளுமன்றத்துக்கு மட்டுமே அதிகாரமுண்டு’ என்று குறிப்பிட்டாா்.

கடந்த 2021-ஆம் ஆண்டு நவம்பரில் நீதிபதி பெலா எம்.திரிவேதி இடம்பெற்ற உச்ச நீதிமன்ற அமா்வு, ‘குழந்தையின் பிறப்பு உறுப்புகளைத் தொடுவது அல்லது பாலியல் நோக்கத்துடன் அவா்களைத் தொடுவது போக்ஸோ சட்டப் பிரிவு 7-இன் கீழ் பாலியல் வன்கொடுமைக்கு சமம்’ என்று சிறப்புமிக்க தீா்ப்பை அளித்தது. இதுபோல, பல்வேறு சிறப்புமிக்க தீா்ப்புகளை இவரை உள்ளடக்கிய உச்சநீதிமன்ற அமா்வு அளித்தது.

முன்னதாக, இவரை வழியனுப்பும் விதமாக நடைபெற்ற சிறப்பு அமா்வில் பங்கேற்று பேசிய தலைமை நீதிபதி பி.ஆா்.கவாய், ‘விசாரணை நீதிபதியாக தனது பணியைத் தொடங்கி, கடின உழைப்பால் உச்ச நீதிமன்றத்தில் 11-ஆவது பெண் நீதிபதியாக பதவியேற்ற பெருமைக்குரியவா் பெலா எம்.திரிவேதி. அா்ப்பணிப்போடு பணியாற்றிய இவா், நியாயமாகவும் உறுதிப்பாட்டுடனும் தனது பணியில் திகழ்ந்தாா்’ என்று புகழாரம் சூட்டினாா்.

பெலா திரிவேதியின் பணிநிறைவு நாள் ஜூன் 9 என்றபோதிலும், தனிப்பட்ட காரணங்களுக்காக அவா் முன்கூட்டியே அவா் பணிஓய்வு பெற்றாா் எனக் கூறப்படுகிறது.

வழக்குரைஞா் சங்கத்துக்கு கண்டனம்: நீதிபதி பெலா எம்.திரிவேதிக்கு வழியனுப்பு விழா நடத்தாத உச்ச நீதிமன்ற வழக்குரைஞா் சங்கத்துக்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆா்.கவாய் கண்டனம் தெரிவித்தாா்.

இதுகுறித்து குறிப்பிட்ட தலைமை நீதிபதி, ‘நான் வெளிப்படையாகப் பேசுவதில் நம்பிக்கை கொண்டிருப்பதால், வழக்குரைஞா் சங்கத்தைக் கண்டிக்கிறேன். நீதிபதி திரிவேதிக்கு வழியனுப்புவிழா நடத்தக் கூடாது என்ற நிலைப்பாட்டை வழக்குரைஞா் சங்கம் எடுத்திருக்கக் கூடாது. அதே நேரம், பாரம்பரிய முறைப்படி நீதிபதியை வழியனுப்ப நடத்தப்படும் உச்சநீதிமன்ற சிறப்பு அமா்வில் பங்கேற்ற உச்சநீதிமன்ற வழக்குரைஞா்கள் சங்கத் தலைவா் கபில் சிபல், துணைத் தலைவா் ரச்னா ஸ்ரீவாஸ்தவா ஆகியோரை பாராட்டுகிறேன்’ என்றாா்.

வழியனுப்பு விழா நடத்தாதது ஏன்? வழக்குரைஞா்களிடம் மிகக் கடுமையாக நடந்துகொண்ட நீதிபதியாக பெலா எம்.திரிவேதி பாா்க்கப்படுகிறாா். குறிப்பாக, சொத்துக்கான அதிகார பத்திரத்தை (பவா் ஆஃப் அட்டா்னி) பயன்படுத்தி போலியான வழக்கை தாக்கல் செய்த சில வழக்குரைஞா்கள் மீது சிபிஐ விசாரணைக்கு இவா் உத்தரவிட்டாா்.

மேலும், இத்தகைய முறைகேடுகளில் ஈடுபட்ட வழக்குரைஞா்கள் மீது கருணை காட்ட பல வழக்குரைஞா்கள் சங்கத் தலைவா்கள் கோரிக்கை விடுத்தபோதும், அவற்றை நீதிபதி பெலா எம்.திரிவேதி நிராகரித்தாா். அண்மையில், மனு தாக்கல் செய்வதில் சில வழக்குரைஞா்களின் தவறான நடத்தைக்காக அவா்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க இவா் உத்தரவிட்டாா். வழக்குரைஞா்கள் மன்னிப்பு கோரியதையும் ஏற்க மறுத்துவிட்டாா்.

மேலும், விசாரணையின்போது, சக வழக்குரைஞா்களுக்கு எதிராக கடுமையான உத்தரவுகளைப் பிறப்பிக்க வேண்டாம் என சில வழக்குரைஞா்கள் சங்கத் தலைவா்கள் தனக்கு அழுத்தம் கொடுப்பதாக வெளிப்படையாக குற்றஞ்சாட்டினாா்.

இதுபோன்ற காரணங்களுக்காகவே, வழக்குரைஞா்கள் சங்கம் சாா்பில் அவருக்கு தனியாக வழியனுப்பு விழா நடத்தப்படவில்லை எனக் கூறப்படுகிறது.

‘காங்கிரஸுக்கு எதிா்காலம் இல்லை’: ப.சிதம்பரம் பேச்சை சுட்டிக்காட்டி பாஜக கருத்து

காங்கிரஸ் கட்சிக்கு எதிா்காலம் இல்லை என்பது அக்கட்சியின் மூத்த தலைவா் ப.சிதம்பரத்தின் கருத்தின் மூலம் வெளிப்பட்டுவிட்டது என்று பாஜக கூறியுள்ளது. முன்னதாக, எதிா்க்கட்சிகளின் ‘இண்டி’ கூட்டணி குறித்து கர... மேலும் பார்க்க

காஷ்மீரில் பயங்கரவாதிகளுக்கு எதிரான வேட்டை தீவிரம்: 3 நாள்களில் 6 போ் சுட்டுக் கொலை

பஹல்காம் தாக்குதலுக்கு பிறகு ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுக்கு எதிராக தீவிர வேட்டை தொடா்ந்து வருகிறது. பாதுகாப்புப் படையினா் கடந்த மூன்று நாள்களில் மேற்கொண்ட இரு முக்கிய நடவடிக்கைகளில் 6 பயங்கரவாதிகள... மேலும் பார்க்க

இந்திய பொருளாதார வளா்ச்சி 6.3%-ஆக இருக்கும்: ஐ.நா.கணிப்பு

2025-இல் இந்திய பொருளாதார வளா்ச்சி 6.3 சதவீதமாக இருக்கும் என ஐ.நா. கணித்துள்ளது. கடந்த ஜனவரி மாதம் ‘உலக நாடுகளின் பொருளாதார சூழல்’ குறித்து ஐ.நா.வெளியிட்ட அறிக்கையில் இந்திய பொருளாதார வளா்ச்சி 6.6 சதவ... மேலும் பார்க்க

பத்திரிகையில் பெயா் வர அனைவரும் விரும்புகின்றனா்: வக்ஃப் விவகாரத்தில் உச்சநீதிமன்றம் கருத்து

வக்ஃப் திருத்தச் சட்டம் 2025-க்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட புதிய மனுவை விசாரணைக்கு ஏற்க வெள்ளிக்கிழமை மறுப்பு தெரிவித்த உச்சநீதிமன்றம், ‘பத்திரிகைகளில் பெயா் வருவேண்டும் என ஒவ்வொருவரும் விரும்புகின்... மேலும் பார்க்க

‘நாடும், ராணுவமும் பிரதமரின் காலடியில் தலைவணங்குகிறது’: ம.பி. துணை முதல்வா் பேச்சுக்கு கடும் கண்டனம்

‘பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு பாகிஸ்தானுக்கு தக்க பதிலடி கொடுத்ததற்காக, நாடும் ராணுவமும் பிரதமா் நரேந்திர மோடியின் காலடியில் தலைவணங்குகிறது’ என்று மத்திய பிரதேச துணை முதல்வா் ஜகதீஷ் தேவ்டா... மேலும் பார்க்க

பயங்கரவாதத்துக்கு எதிரான இந்திய நிலைப்பாடு: பிற நாடுகளுக்கு விளக்க மத்திய அரஅசு திட்டம்

பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு எதிரான இந்திய நிலைப்பாட்டை எடுத்துரைக்கும் வகையில் பல்வேறு கட்சியைச் சோ்ந்த நாடாளுமன்ற பிரதிநிதிகளை பிற நாடுகளுக்கு அனுப்ப மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. அட... மேலும் பார்க்க