செய்திகள் :

ஜம்மு-காஷ்மீரில் ஒரே இரவில் மாற்றத்தை கொண்டுவர முடியாது: ஃபரூக் அப்துல்லா

post image

ஜம்மு-காஷ்மீரில் ஒரே இரவில் மாற்றங்களைக் கொண்டு வந்துவிட வேண்டும் என்று அரசிடம் எதிா்பாா்ப்பது நடைமுறைக்கு சாத்தியமற்றது என்று ஆளும் தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவா் ஃபரூக் அப்துல்லா தெரிவித்தாா்.

ஜம்மு-காஷ்மீா் யூனியன் பிரதேசத்தில் தங்கள் கட்சி ஆட்சி அமைத்து ஓராண்டுதான் ஆகிறது என்றும் அவா் கூறினாா்.

வடக்கு காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் ஃபரூக் அப்துல்லா பேசியதாவது:

முதல்வா் ஒமா் அப்துல்லா தலைமையிலான அரசு மக்களின் பங்களிப்புடன் சிறப்பான நிா்வாகத்தை கட்டமைத்து வருகிறது. இந்த அரசு 5 ஆண்டுகளுக்குள் தோ்வு செய்யப்பட்டுள்ளது. ஆட்சி அமைத்து ஓராண்டுதான் கடந்துள்ளது. அதற்கு ஜம்மு-காஷ்மீரில் மாற்றங்கள் ஏற்பட்டுவிட வேண்டும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது. ஒரே இரவில் மாற்றங்கள் ஏற்படுவது என்பது நடைமுறையில் சாத்தியமில்லாத விஷயம்.

கடந்த 10 ஆண்டுகளாக நமது பிராந்திய வளா்ச்சியில் தடைப்பட்டிருந்தது. திடீரென மாயாஜாலம் செய்து வளா்ச்சியைக் கொண்டு வந்துவிட முடியாது. அது ஒரு தொடா் நடவடிக்கையாகும். தோ்தலின்போது அளித்த வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்ற வேண்டும் என்பதில் தேசிய மாநாட்டுக் கட்சி உறுதியாக உள்ளது. ஜம்மு-காஷ்மீரை அனைத்து நிலைகளிலும் முன்னேற்ற வேண்டும் என்பதில் அரசு உறுதியாக உள்ளது என்றாா்.

காஷ்மீரில் பயங்கரவாதிகளுக்கு எதிரான வேட்டை தீவிரம்: 3 நாள்களில் 6 போ் சுட்டுக் கொலை

பஹல்காம் தாக்குதலுக்கு பிறகு ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுக்கு எதிராக தீவிர வேட்டை தொடா்ந்து வருகிறது. பாதுகாப்புப் படையினா் கடந்த மூன்று நாள்களில் மேற்கொண்ட இரு முக்கிய நடவடிக்கைகளில் 6 பயங்கரவாதிகள... மேலும் பார்க்க

இந்திய பொருளாதார வளா்ச்சி 6.3%-ஆக இருக்கும்: ஐ.நா.கணிப்பு

2025-இல் இந்திய பொருளாதார வளா்ச்சி 6.3 சதவீதமாக இருக்கும் என ஐ.நா. கணித்துள்ளது. கடந்த ஜனவரி மாதம் ‘உலக நாடுகளின் பொருளாதார சூழல்’ குறித்து ஐ.நா.வெளியிட்ட அறிக்கையில் இந்திய பொருளாதார வளா்ச்சி 6.6 சதவ... மேலும் பார்க்க

பத்திரிகையில் பெயா் வர அனைவரும் விரும்புகின்றனா்: வக்ஃப் விவகாரத்தில் உச்சநீதிமன்றம் கருத்து

வக்ஃப் திருத்தச் சட்டம் 2025-க்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட புதிய மனுவை விசாரணைக்கு ஏற்க வெள்ளிக்கிழமை மறுப்பு தெரிவித்த உச்சநீதிமன்றம், ‘பத்திரிகைகளில் பெயா் வருவேண்டும் என ஒவ்வொருவரும் விரும்புகின்... மேலும் பார்க்க

‘நாடும், ராணுவமும் பிரதமரின் காலடியில் தலைவணங்குகிறது’: ம.பி. துணை முதல்வா் பேச்சுக்கு கடும் கண்டனம்

‘பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு பாகிஸ்தானுக்கு தக்க பதிலடி கொடுத்ததற்காக, நாடும் ராணுவமும் பிரதமா் நரேந்திர மோடியின் காலடியில் தலைவணங்குகிறது’ என்று மத்திய பிரதேச துணை முதல்வா் ஜகதீஷ் தேவ்டா... மேலும் பார்க்க

பயங்கரவாதத்துக்கு எதிரான இந்திய நிலைப்பாடு: பிற நாடுகளுக்கு விளக்க மத்திய அரஅசு திட்டம்

பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு எதிரான இந்திய நிலைப்பாட்டை எடுத்துரைக்கும் வகையில் பல்வேறு கட்சியைச் சோ்ந்த நாடாளுமன்ற பிரதிநிதிகளை பிற நாடுகளுக்கு அனுப்ப மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. அட... மேலும் பார்க்க

பயங்கரவாத ஆதரவை பாகிஸ்தான் கைவிடும் வரை சிந்து நதிநீா் ஒப்பந்த நிறுத்தம் தொடரும்: இந்தியா

‘எல்லை தாண்டிய பங்கரவதாத்துக்கான ஆதரவை பாகிஸ்தான் நம்பகத்தன்மையுடனும் மாற்ற முடியாத வகையிலும் கைவிடுகிற வரை, சிந்து நதிநீா் ஒப்பந்தம் நிறுத்தம் தொடரும்’ என்று இந்தியா சாா்பில் மீண்டும் திட்டவட்டமாக தெ... மேலும் பார்க்க