செய்திகள் :

அந்நிய செலாவணி கையிருப்பு 690.61 பில்லியன் அமெரிக்க டாலர்களாக உயர்வு: ரிசர்வ் வங்கி

post image

மும்பை: இந்தியாவில் தங்க கையிருப்பு அதிகரித்ததின் பின்னணியில், மே 9 ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில், அந்நியச் செலாவணி கையிருப்பு 4.553 பில்லியன் டாலர்கள் அதிகரித்து 690.617 பில்லியன் டாலர்களாக உயர்ந்துள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

முந்தைய வாரத்தில், ஒட்டுமொத்த கையிருப்பு 2.065 பில்லியன் அமெரிக்க டாலர்களாக குறைந்து 686.064 பில்லியன் அமெரிக்க டாலர்களாக இருந்தது. 2024 செப்டம்பர் மாத இறுதியில் அந்நிய செலாவணி கையிருப்பு 704.885 பில்லியன் அமெரிக்க டாலர்களாக உயர்ந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

மே 9 ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில், அந்நியச் செலாவணி சொத்து மதிப்பு 196 மில்லியன் அமெரிக்க டாலர்கள் அதிகரித்து 581.373 பில்லியன் அமெரிக்க டாலர்களாக உயர்ந்துள்ளதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

கையிருப்பில் முக்கிய அங்கமான அந்நியச் செலாவணி சொத்து 196 மில்லியன் அமெரிக்க டாலர்கள் அதிகரித்து 581.373 பில்லியன் அமெரிக்க டாலர்களாக உயர்ந்துள்ளதாக தரவுகள் சுட்டிக் காட்டியுள்ளது.

இந்த வாரத்தில் தங்க இருப்பு 4.518 பில்லியன் டாலர் உயர்ந்து 86.337 பில்லியன் டாலர்களாக இருப்பதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

சர்வதேச நாணய நிதியத்திடம் இந்தியாவின் இருப்பு நிலை 134 மில்லியன் டாலர் குறைந்து 4.374 பில்லியன் டாலர்களாக உள்ளதாக தரவுகள் தெரிவிக்கின்றன.

இதையும் படிக்க: டாலருக்கு நிகரான ரூபாய் 1 காசு உயர்ந்து ரூ.85.53 ஆக முடிவு!

வோடஃபோன் - ஐடியா முடங்கும் அபாயம்! நிதி நெருக்கடியிலிருந்து மீள உச்சநீதிமன்றத்தில் மனு

வோடஃபோன் ஐடியா லிமிடட் (விஐ) தமது நிறுவன பங்குகள் மீதான மொத்த வருவாய் சுமையிலிருந்து விலக்களிக்க உச்சநீதிமன்றத்தை நாடியுள்ளது.தங்கள் நிறுவனத்துக்கு போதிய நிதியுதவி அல்லது வருவாய் ஆதரவு கிடைக்கவில்லையெ... மேலும் பார்க்க

டாலருக்கு நிகரான ரூபாய் 1 காசு உயர்ந்து ரூ.85.53 ஆக முடிவு!

மும்பை: வலுவான அந்நிய வரவுகள் மற்றும் டாலர் குறியீட்டில் ஏற்பட்ட ஓரளவு சரிவு ஆகியவற்றின் பின்னணியில் இன்றைய வர்த்தகத்தில் இந்திய ரூபாய் 1 காசு உயர்ந்து 85.53 ஆக நிறைவடைந்தது.கச்சா எண்ணெய் விலை உயர்வு,... மேலும் பார்க்க

சரிவுடன் நிறைவடைந்தது பங்குச் சந்தை: சென்செக்ஸ் 200.15 புள்ளிகள் இழப்பு!

மும்பை: இந்திய பங்குச் சந்தை குறியீடுகளில் இன்று நிஃப்டி 42.30 புள்ளிகள் சரிந்து 25,019.80 புள்ளிகளாகவும், சென்செக்ஸ் 200.15 புள்ளிகள் குறைந்து 82,330.59 புள்ளிகளாக நிறைவடைந்தது.முடிவில் சென்செக்ஸ் 0.... மேலும் பார்க்க

ரயில் விகாஸ் நிகாம் பங்குகள் 11% உயர்வு!

ரயில் விகாஸ் நிகாம் நிறுவனமானது மின்சார இழுவை அமைப்பு ஒப்பந்தத்தை பெற்றதையடுத்து அதன் பங்கு 11 சதவிகிதம் உயர்ந்தது வர்த்தகமானது.இன்றைய காலை நேர வர்த்தகத்தில், ரயில் விகாஸ் நிகாம் 10.56 சதவிகிதம் அதிகர... மேலும் பார்க்க

சரிவுடன் தொடங்கிய பங்குச் சந்தை!

மும்பை: நேற்றைய வர்த்தகத்தில் சென்செக்ஸ் வெகுவாக உயர்ந்த நிலையில், இன்றைய ஆரம்ப வர்த்தகத்தில் பெஞ்ச்மார்க் குறியீடுகளான சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி சரிந்து தொடங்கியது.மூதலீட்டாளர்கள் ஐடி பங்குகளை தொட... மேலும் பார்க்க

சரிவுடன் வர்த்தகமாகும் பங்குச் சந்தை! சென்செக்ஸ் 300 புள்ளிகள் குறைந்தது!

பங்குச்சந்தைகள் நேற்று ஏற்றத்துடன் முடிவடைந்த நிலையில் இன்று(வெள்ளிக்கிழமை) சரிவுடன் வர்த்தகமாகி வருகின்றன. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் இன்று காலை 82,392.63 என்ற புள்ளிகளில் தொடங்கிய... மேலும் பார்க்க