செய்திகள் :

வோடஃபோன் - ஐடியா முடங்கும் அபாயம்! நிதி நெருக்கடியிலிருந்து மீள உச்சநீதிமன்றத்தில் மனு

post image

வோடஃபோன் ஐடியா லிமிடட் (விஐ) தமது நிறுவன பங்குகள் மீதான மொத்த வருவாய் சுமையிலிருந்து விலக்களிக்க உச்சநீதிமன்றத்தை நாடியுள்ளது.

தங்கள் நிறுவனத்துக்கு போதிய நிதியுதவி அல்லது வருவாய் ஆதரவு கிடைக்கவில்லையெனில் 2025-26 நிதியாண்டு காலத்துக்குப் பின் எந்தவொரு சேவையையும் வழங்க முடியாத நிலைக்கு தள்ளப்படுவோம் என்றும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

வோடஃபோன் ஐடியா லிமிடட் உச்சநீதிமன்றத்தில் மே 13-ஆம் தேதி தாக்கல் செய்துள்ள மனுவில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது: மார்ச் 2026க்குள் ரூ.18,000 கோடி தொகையை அரசுக்கு செலுத்த காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. ஆனால் நிதி நெருக்கடியிலிருந்து மீள முடியாததால் தங்களால் அந்த தொகையை செலுத்த முடியவில்லை. இதனைக் காரணம்காட்டி, வங்கிகள் எங்களுக்கு புதிதாக கடன் தர மறுக்கின்றன. இந்த நிலை தொடர்ந்தால், சேவை முடங்கும் அபாய நிலைக்கு ஆளாகுவோம். இந்த நிலையில், தவணை செலுத்தும் முறையை மறு சீராய்வு செய்ய உச்சநீதிமன்றத்தை நாடியுள்ளது.

கடனில் சிக்கியுள்ள வோடஃபோன்-ஐடியா நிறுவனத்தில் 33.1 சதவீதத்துக்கும் மேல் பங்குகளுடன் தனிப்பெரும் பங்குதாரராக மத்திய அரசு உள்ளது. வோடஃபோன்-ஐடியா நிறுவனத்தின் ஸ்பெக்ட்ரம் ஏல நிலுவைகள், ஒத்திவைக்கப்பட்ட ஏல நிலுவைகள் உள்ளிட்டவற்றை பங்குகளாக மாற்றியுள்ளது மத்திய அரசு. இருப்பினும் இன்னும் நிதி நெருக்கடியில் அந்நிறுவனம் சிக்கி தவிக்கிறது.

இவ்விவகாரத்தில், வோடஃபோன்-ஐடியா நிறுவனத்துக்கு ஆதரவான நடவடிக்கைகளை எடுக்க முடியாத சூழல் உருவானால், இந்தியாவின் தொலைத்தொடர்பு சேவையில் குறிப்பிடத்தக்க இழப்பைச் சந்திக்க நேரிடும் என்று இத்துறை சார் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். ஏராளமான பயனர்கள் பாதிக்கப்படுவர் என்பதையும் சுட்டிக்காட்டும் அவர்கள், இது, தொலைத் தொடர்பு துறைக்கு ஆரோக்கியமான நகர்வாக அமையாதென்றும் தெரிவிக்கின்றனர்.

அந்நிய செலாவணி கையிருப்பு 690.61 பில்லியன் அமெரிக்க டாலர்களாக உயர்வு: ரிசர்வ் வங்கி

மும்பை: இந்தியாவில் தங்க கையிருப்பு அதிகரித்ததின் பின்னணியில், மே 9 ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில், அந்நியச் செலாவணி கையிருப்பு 4.553 பில்லியன் டாலர்கள் அதிகரித்து 690.617 பில்லியன் டாலர்களாக உயர்... மேலும் பார்க்க

டாலருக்கு நிகரான ரூபாய் 1 காசு உயர்ந்து ரூ.85.53 ஆக முடிவு!

மும்பை: வலுவான அந்நிய வரவுகள் மற்றும் டாலர் குறியீட்டில் ஏற்பட்ட ஓரளவு சரிவு ஆகியவற்றின் பின்னணியில் இன்றைய வர்த்தகத்தில் இந்திய ரூபாய் 1 காசு உயர்ந்து 85.53 ஆக நிறைவடைந்தது.கச்சா எண்ணெய் விலை உயர்வு,... மேலும் பார்க்க

சரிவுடன் நிறைவடைந்தது பங்குச் சந்தை: சென்செக்ஸ் 200.15 புள்ளிகள் இழப்பு!

மும்பை: இந்திய பங்குச் சந்தை குறியீடுகளில் இன்று நிஃப்டி 42.30 புள்ளிகள் சரிந்து 25,019.80 புள்ளிகளாகவும், சென்செக்ஸ் 200.15 புள்ளிகள் குறைந்து 82,330.59 புள்ளிகளாக நிறைவடைந்தது.முடிவில் சென்செக்ஸ் 0.... மேலும் பார்க்க

ரயில் விகாஸ் நிகாம் பங்குகள் 11% உயர்வு!

ரயில் விகாஸ் நிகாம் நிறுவனமானது மின்சார இழுவை அமைப்பு ஒப்பந்தத்தை பெற்றதையடுத்து அதன் பங்கு 11 சதவிகிதம் உயர்ந்தது வர்த்தகமானது.இன்றைய காலை நேர வர்த்தகத்தில், ரயில் விகாஸ் நிகாம் 10.56 சதவிகிதம் அதிகர... மேலும் பார்க்க

சரிவுடன் தொடங்கிய பங்குச் சந்தை!

மும்பை: நேற்றைய வர்த்தகத்தில் சென்செக்ஸ் வெகுவாக உயர்ந்த நிலையில், இன்றைய ஆரம்ப வர்த்தகத்தில் பெஞ்ச்மார்க் குறியீடுகளான சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி சரிந்து தொடங்கியது.மூதலீட்டாளர்கள் ஐடி பங்குகளை தொட... மேலும் பார்க்க

சரிவுடன் வர்த்தகமாகும் பங்குச் சந்தை! சென்செக்ஸ் 300 புள்ளிகள் குறைந்தது!

பங்குச்சந்தைகள் நேற்று ஏற்றத்துடன் முடிவடைந்த நிலையில் இன்று(வெள்ளிக்கிழமை) சரிவுடன் வர்த்தகமாகி வருகின்றன. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் இன்று காலை 82,392.63 என்ற புள்ளிகளில் தொடங்கிய... மேலும் பார்க்க