செய்திகள் :

சரிவுடன் நிறைவடைந்தது பங்குச் சந்தை: சென்செக்ஸ் 200.15 புள்ளிகள் இழப்பு!

post image

மும்பை: இந்திய பங்குச் சந்தை குறியீடுகளில் இன்று நிஃப்டி 42.30 புள்ளிகள் சரிந்து 25,019.80 புள்ளிகளாகவும், சென்செக்ஸ் 200.15 புள்ளிகள் குறைந்து 82,330.59 புள்ளிகளாக நிறைவடைந்தது.

முடிவில் சென்செக்ஸ் 0.24 சதவிகிதம் சரிந்து 82,330.59 ஆகவும், நிஃப்டி 0.17 சதவிகிதம் சரிந்து 25,019.80 ஆகவும் இருந்தன. இன்று சுமார் 2525 பங்குகள் உயர்ந்தும் 1312 பங்குகள் சரிந்தும், 134 பங்குகள் மாற்றமில்லாமல் வர்த்தகமானது.

பிஎஸ்இ மிட்கேப் குறியீடு 0.8 சதவிகிதமும், ஸ்மால்கேப் குறியீடு 1 சதவிகிதம் உயர்ந்து முடிந்தன.

துறை வாரியாக மீடியா, மின்சாரம், பொதுத்துறை நிறுவனம், ரியால்டி, மூலதன பொருட்கள் குறியீடுகள் 1 முதல் 1.7 சதவிகிதம் உயர்ந்தன. அதே நேரத்தில் ஐடி குறியீடு கிட்டத்தட்ட 1 சதவிகிதம் சரிந்தது.

நிஃப்டி-யில் பாரத் எலக்ட்ரானிக்ஸ், பஜாஜ் ஆட்டோ, அதானி எண்டர்பிரைசஸ், டாடா கன்ஸ்யூமர், எடர்னல் உள்ளிட்ட பங்குகள் உயர்ந்த நிலையில் பாரதி ஏர்டெல், ஜேஎஸ்டபிள்யூ ஸ்டீல், இன்ஃபோசிஸ், எஸ்பிஐ, எச்.சி.எல் டெக்னாலஜிஸ் ஆகிய பங்குகள் சரிந்து முடிந்தன.

சென்செக்ஸ் பட்டியலில் எச்.சி.எல் டெக், ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா, இன்ஃபோசிஸ், டெக் மஹிந்திரா, டாடா கன்சல்டன்சி சர்வீசஸ், பஜாஜ் ஃபின்சர்வ், லார்சன் & டூப்ரோ, மஹிந்திரா & மஹிந்திரா மற்றும் டைட்டன் ஆகியவை சரிந்தும் எடர்னல், ஹிந்துஸ்தான் யூனிலீவர், ஏசியன் பெயிண்ட்ஸ், ஐடிசி, டாடா மோட்டார்ஸ் மற்றும் என்டிபிசி ஆகியவை உயர்ந்து முடிந்தன.

ஆசிய சந்தைகளில் ஜப்பானின் நிக்கி 225 குறியீடு, ஷாங்காயின் எஸ்எஸ்இ காம்போசிட் குறியீடு மற்றும் ஹாங்காங்கின் ஹாங் செங் ஆகியவை சரிந்த நிலையில், தென் கொரியாவின் கோஸ்பி சற்று உயர்ந்தது.

அமெரிக்க சந்தைகள் நேற்று (வியாழக்கிழமை) பெரும்பாலும் உயர்ந்து முடிந்தன.

உலகளாவிய பிரெண்ட் கச்சா எண்ணெய் 0.09 சதவிகிதம் உயர்ந்து ஒரு பீப்பாய்க்கு 64.59 அமெரிக்க டாலர்களாக வர்த்தகம் செய்யப்பட்டது.

அந்நிய நிறுவன முதலீட்டாளர்கள் நேற்று (வியாழக்கிழமை) ரூ.5,392.94 கோடி மதிப்புள்ள பங்குகளை வாங்கியுள்ளனர்.

இதையும் படிக்க: ரயில் விகாஸ் நிகாம் பங்குகள் 11% உயர்வு!

வோடஃபோன் - ஐடியா முடங்கும் அபாயம்! நிதி நெருக்கடியிலிருந்து மீள உச்சநீதிமன்றத்தில் மனு

வோடஃபோன் ஐடியா லிமிடட் (விஐ) தமது நிறுவன பங்குகள் மீதான மொத்த வருவாய் சுமையிலிருந்து விலக்களிக்க உச்சநீதிமன்றத்தை நாடியுள்ளது.தங்கள் நிறுவனத்துக்கு போதிய நிதியுதவி அல்லது வருவாய் ஆதரவு கிடைக்கவில்லையெ... மேலும் பார்க்க

அந்நிய செலாவணி கையிருப்பு 690.61 பில்லியன் அமெரிக்க டாலர்களாக உயர்வு: ரிசர்வ் வங்கி

மும்பை: இந்தியாவில் தங்க கையிருப்பு அதிகரித்ததின் பின்னணியில், மே 9 ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில், அந்நியச் செலாவணி கையிருப்பு 4.553 பில்லியன் டாலர்கள் அதிகரித்து 690.617 பில்லியன் டாலர்களாக உயர்... மேலும் பார்க்க

டாலருக்கு நிகரான ரூபாய் 1 காசு உயர்ந்து ரூ.85.53 ஆக முடிவு!

மும்பை: வலுவான அந்நிய வரவுகள் மற்றும் டாலர் குறியீட்டில் ஏற்பட்ட ஓரளவு சரிவு ஆகியவற்றின் பின்னணியில் இன்றைய வர்த்தகத்தில் இந்திய ரூபாய் 1 காசு உயர்ந்து 85.53 ஆக நிறைவடைந்தது.கச்சா எண்ணெய் விலை உயர்வு,... மேலும் பார்க்க

ரயில் விகாஸ் நிகாம் பங்குகள் 11% உயர்வு!

ரயில் விகாஸ் நிகாம் நிறுவனமானது மின்சார இழுவை அமைப்பு ஒப்பந்தத்தை பெற்றதையடுத்து அதன் பங்கு 11 சதவிகிதம் உயர்ந்தது வர்த்தகமானது.இன்றைய காலை நேர வர்த்தகத்தில், ரயில் விகாஸ் நிகாம் 10.56 சதவிகிதம் அதிகர... மேலும் பார்க்க

சரிவுடன் தொடங்கிய பங்குச் சந்தை!

மும்பை: நேற்றைய வர்த்தகத்தில் சென்செக்ஸ் வெகுவாக உயர்ந்த நிலையில், இன்றைய ஆரம்ப வர்த்தகத்தில் பெஞ்ச்மார்க் குறியீடுகளான சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி சரிந்து தொடங்கியது.மூதலீட்டாளர்கள் ஐடி பங்குகளை தொட... மேலும் பார்க்க

சரிவுடன் வர்த்தகமாகும் பங்குச் சந்தை! சென்செக்ஸ் 300 புள்ளிகள் குறைந்தது!

பங்குச்சந்தைகள் நேற்று ஏற்றத்துடன் முடிவடைந்த நிலையில் இன்று(வெள்ளிக்கிழமை) சரிவுடன் வர்த்தகமாகி வருகின்றன. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் இன்று காலை 82,392.63 என்ற புள்ளிகளில் தொடங்கிய... மேலும் பார்க்க