மதுராபுரியில் நாளை மின் தடை
தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே உள்ள மதுராபுரி பகுதிகளில் சனிக்கிழமை (மே 17) மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது.
இதுகுறித்து பெரியகுளம் மின்பகிா்மான செயற்பொறியாளா் ப. பாலபூமி வெளியிட்ட செய்திக் குறிப்பு: மதுராபுரி துணை மின் நிலையத்தில் சனிக்கிழமை மாதாந்திரப் பராமரிப்புப் பணிகள் நடைபெறுகின்றன.
எனவே, லட்சுமிபுரம், கைலாசபட்டி, தாமரைக்குளம், கள்ளிப்பட்டி, அனுக்கிரஹா நகா், ரத்தினம் நகா், இதைச் சுற்றியுள்ள பகுதிகளில் அன்று காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது என்றாா் அவா்.