செய்திகள் :

Meloni: தரையில் மண்டியிட்டு `இத்தாலி பிரதமர் மெலோனியை' வரவேற்ற அல்பேனியா பிரதமர்.. காரணம் என்ன?

post image

ஐரோப்பிய ஒன்றிய உச்சி மாநாட்டில் இத்தாலிய பிரதமர் ஜார்ஜியா மெலோனியை வரவேற்க அல்பேனியா நாட்டு பிரதமர் எடி ராமா சிகப்பு கம்பளத்தின் மீது மண்டியிட்டு வரவேற்ற காட்சிகள் இணையத்தில் வேகமாக பரவி வருகின்றன.

ஐரோப்பிய அரசியல் சமூகத்தின் கூட்டம் வெள்ளிக்கிழமை (மே 16) அன்று அல்பேனியாவின் டிரானாவில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட 40-க்கும் மேற்பட்ட உலக அரசியல் தலைவர்களை அல்பேனிய பிரதமர் எடி ராமா புன்னகையுடன் வரவேற்றார்.

இத்தாலி பிரதமர் மெலோனியை வரவேற்ற அல்பேனியா பிரதமர்
இத்தாலி பிரதமர் மெலோனியை வரவேற்ற அல்பேனியா பிரதமர்

இந்த கூட்டத்தின் வரவேற்பு நிகழ்ச்சிக்கு முன்பாக அல்பேனிய பிரதமர் எடி ராமா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில், “ஐரோப்பா முழுவதும் இன்று வந்துள்ள இடத்திலிருந்தும், உலகம் முழுவதும் பார்த்துக் கொண்டிருக்கும் இடத்திலிருந்தும், நான் உங்களுக்கு வணக்கம் சொல்கிறேன்" என்று குறிப்பிட்டு இருந்தார்.

அதன்படி இத்தாலிய பிரதமர் மெலோனி வந்ததும், எடி ராமா சிகப்பு கம்பளத்தின் மீது தரையில் மண்டியிட்டு வரவேற்றார். அவர் அடிக்கடி தனது இத்தாலிய தோழிக்காக வரவேற்பு செய்வது போலவே, இத்தாலிய பிரதமரை வரவேற்றார். சிவப்பு கம்பளத்தின் மீது ஒரு முழங்காலில் மண்டியிட்டு மரியாதைக்குரிய வணக்கத்தை வழங்கினார். பிறகு அவரை அரவணைத்து கூட்டத்திற்கு அனுப்பி வைத்தார். இந்த காட்சிகள் இணையத்தில் வெளியாகி பெரிதும் பகிரப்பட்டு வருகிறது.

2030 ஆம் ஆண்டுக்குள் அல்பேனியாவை ஐரோப்பிய ஒன்றியத்திற்குள் கொண்டு செல்வதாக உறுதிமொழி எடுத்து பிரச்சாரம் செய்து இருந்தார் எடி ராமா. அதன் அடிப்படையில் அவர் மீண்டும் நான்காவது முறையாகப் அல்பேனியா பிரதமராக பதவி ஏற்றார். தனது மகத்தான மறுதேர்தல் வெற்றியில் மகிழ்ச்சியடைந்து, தொகுதி மற்றும் அதற்கு அப்பால் உள்ள நண்பர்களை வரவேற்பதில் தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.

இந்த உயர்மட்ட உச்சிமாநாடு அல்பேனியாவை ஐரோப்பிய ஒன்றியத்திற்குள் கொண்டு செல்வதை வெளிப்படுத்த ஒரு சரியான மேடையாக அமைந்தது. இதனை அவர் பயன்படுத்திக் கொண்டு உள்ளார்.

இத்தாலி பிரதமர் மெலோனியை வரவேற்ற அல்பேனியா பிரதமர்
இத்தாலி பிரதமர் மெலோனியை வரவேற்ற அல்பேனியா பிரதமர்

இந்த கூட்டம் தொடங்குவதற்கு முன்பாக பத்திரிகையாளர்களுக்கு பேட்டி அளித்த எடி ராமா, “ நான் அவர்களில் மிக உயரமானவன் என்பது உண்மைதான், ஆனால் நான் மிகச் சிறிய நாடுகளில் ஒன்றான ஒரு நாட்டை வழி நடத்துகிறேன். மேலும் இந்த உச்சிமாநாட்டை நடத்தும் வாய்ப்பு எங்களுக்குக் கிடைத்திருப்பது எங்களுக்கு பெரிய மரியாதையை கொடுத்து இருக்கிறது" என்று கூறி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

சவுதி அரேபியா: ட்ரம்ப்பை வரவேற்று `அல்-அய்யாலா' நடனம்; வைரலாகும் காட்சிகள்.. பின்னணி என்ன?

அமெரிக்காவின் அதிபராக டொனால்ட் டிரம்ப் இரண்டாவது முறையாக ஜனவரி மாதம் பதவியேற்றுக் கொண்டார். டிரம்ப்பின் இந்த 2.0 ஆட்சி முறை இதுவரை இல்லாத அளவிற்கு வேறொரு அதிரடி கோணத்தில் இருக்கும் என்று கணித்து போன்ற... மேலும் பார்க்க

ஹாங்காங், சிங்கப்பூர், தாய்லாந்தில் `கோவிட் -19' அதிகரிப்பு - இந்தியாவுக்கு பாதிப்பு உள்ளதா?

தெற்காசிய நாடுகளில் மீண்டும் கோவிட் தொற்று பரவல் கண்டறியப்பட்டுள்ளது. குறிப்பாக ஹாங்காங் மற்றும் சிங்கப்பூரில் குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்துள்ளது. பலர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர், சில... மேலும் பார்க்க

Doctor Vikatan: கண்களில் இன்ஃபெக்ஷன், கட்டிக்கு தாய்ப்பால் விடுவது, நாமக்கட்டி போடுவது சரியா?

Doctor Vikatan:கண் தொடர்பான பிரச்னைகளுக்கு கண்களில் தாய்ப்பால் விடும் வழக்கம் பல காலமாக இருக்கிறது. இது எந்த அளவுக்கு சரியானது? தாய்ப்பாலுக்கு அப்படி ஏதேனும் மருத்துவ குணங்கள் உண்டா?, அதே போல கண்களின்... மேலும் பார்க்க

``ஆடு, மாடோடு இருக்கிறேன்; விவசாயம் பார்கிறேன்; நிம்மதியா இருக்கேன்...'' - அண்ணாமலை

திருவண்ணாமலையில் சாமி தரிசனம் செய்த பிறகு தமிழக முன்னாள் பாஜக தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார். அப்போது தேசிய அளவில் உங்களுக்கு புதிய பொறுப்பு கிடைக்க வாய்ப்புள்ளதா? என்று கேள்வி எழ... மேலும் பார்க்க

India-Pakistan: ``அமைதிப் பேச்சுவார்த்தைக்குத் தயார்.. ஆனால்'' - பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்

பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு இந்தியா பாகிஸ்தான் இடையே தொடர்ந்து பதற்றமான சூழலே நீடிக்கிறது. இதை முடிவுக்குக் கொண்டுவர பல்வேறு முயற்ச்சிகளும் முன்னெடுக்கப்படுகிறது. இந்த நிலையில், ஹோண்டுராஸ் தூதரகத்த... மேலும் பார்க்க

தஞ்சாவூர்: முன்னாள் எம்எல்ஏ வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் சோதனை!

அமமுக துணைபொதுச்செயலாளர் ரெங்கசாமி. அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ-வான இவர் தஞ்சாவூர், தளவாய்பாளையம் பகுதியில் வசித்து வருகிறார். இவருக்கு வினோ பாரத், மனோ பாரத் என இரண்டு மகன்கள் உள்ளனர். அரசு பணிகளை ஒப்பந... மேலும் பார்க்க