செய்திகள் :

India-Pakistan: ``அமைதிப் பேச்சுவார்த்தைக்குத் தயார்.. ஆனால்'' - பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்

post image

பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு இந்தியா பாகிஸ்தான் இடையே தொடர்ந்து பதற்றமான சூழலே நீடிக்கிறது. இதை முடிவுக்குக் கொண்டுவர பல்வேறு முயற்ச்சிகளும் முன்னெடுக்கப்படுகிறது.

இந்த நிலையில், ஹோண்டுராஸ் தூதரகத்தின் திறப்பு விழாவில் நேற்று பங்கேற்று உரையாற்றிய இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர், ``பாகிஸ்தான் சட்டவிரோதமாக ஆக்கிரமித்துள்ள பகுதியை திரும்பப் பெறுவது மட்டுமே காஷ்மீர் குறித்து விவாதிக்கப்பட வேண்டிய ஒரே பிரச்னை.

ஜம்மு காஷ்மீர்
ஜம்மு காஷ்மீர்

அதே நேரத்தில் பாகிஸ்தான் எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை ஊக்குவிப்பதை நிரந்தரமாக நிறுத்தும் வரை சிந்து நீர் ஒப்பந்தம் நிறுத்தி வைக்கப்படும். எனவே எங்கள் நிலைப்பாடு மிக மிகத் தெளிவாக உள்ளது" எனக் குறிப்பிட்டிருந்தார்.

அதைத் தொடர்ந்து இந்திய இராணுவம் தாக்குதல் நடத்திய இடங்களுக்குச் சென்று பார்வையிட்டு வரும் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப், நேற்று பஞ்சாப் மாகாணத்தில் உள்ள கம்ரா விமானப்படை தளத்திற்குச் சென்றார்.

ஷெபாஸ் ஷெரீப்

அங்கு ​​இந்தியாவுடனான சமீபத்திய இராணுவ மோதலில் ஈடுபட்ட அதிகாரிகள் மற்றும் வீரர்களுடன் கலந்துரையாடினார். அப்போது, ``நாங்கள் இந்தியா உடன் அமைதிக்காகப் பேசத் தயாராக இருக்கிறோம். அமைதிக்கான பேச்சு வார்த்தை நிபந்தனைகளில் காஷ்மீர் பிரச்னையும் அடங்கும். ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசமும் லடாக் யூனியன் பிரதேசமும் எப்போதும் அதன் ஒருங்கிணைந்த மற்றும் பிரிக்க முடியாத பகுதிகளாகவே இருக்கும்" எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

``ஆடு, மாடோடு இருக்கிறேன்; விவசாயம் பார்கிறேன்; நிம்மதியா இருக்கேன்...'' - அண்ணாமலை

திருவண்ணாமலையில் சாமி தரிசனம் செய்த பிறகு தமிழக முன்னாள் பாஜக தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார். அப்போது தேசிய அளவில் உங்களுக்கு புதிய பொறுப்பு கிடைக்க வாய்ப்புள்ளதா? என்று கேள்வி எழ... மேலும் பார்க்க

தஞ்சாவூர்: முன்னாள் எம்எல்ஏ வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் சோதனை!

அமமுக துணைபொதுச்செயலாளர் ரெங்கசாமி. அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ-வான இவர் தஞ்சாவூர், தளவாய்பாளையம் பகுதியில் வசித்து வருகிறார். இவருக்கு வினோ பாரத், மனோ பாரத் என இரண்டு மகன்கள் உள்ளனர். அரசு பணிகளை ஒப்பந... மேலும் பார்க்க

``என்னுடைய நிழலைக் கூட பார்க்க முடியவில்லை'' - அமெரிக்க சிறை அனுபவம் குறித்து பகிரும் இந்தியர்

அமெரிக்க அதிபராக ட்ரம்ப் பதவியேற்றதில் இருந்து ஆவணம் செய்யப்படாத வெளிநாட்டு மக்கள் வெளியேற்றம், ஹமாஸ் ஆதரவு போன்றவற்றிக்கு குரல் எழுப்புவர்களுக்கு கடுமையான தண்டனை என அவரது அதிரடிகள் நீண்டு கொண்டு போகி... மேலும் பார்க்க

மோடியை புகழ்ந்த கங்கனா: பதிவை நீக்கச் சொன்ன ஜேபி நாட்டா; `வருந்துகிறேன்' - கங்கனா ரனாவத் பதிவு!

ஆப்பிள் நிறுவனம் சீனாவில் இருக்கும் தொழிற்சாலைகளின் எண்ணிக்கையை மெதுவாக குறைத்து வருகிறது. அந்தத் தொழிற்சாலைகள் இந்தியாவில் தொடங்கப்படும் என்று பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கான வேலைகளும் தொடங்... மேலும் பார்க்க

Doctor Vikatan: `வாழ்க்கைத்துணை இறப்பு' அதிர்ச்சியில் கணவன், மனைவி உயிரிழப்பது ஏன்?

Doctor Vikatan: திருவண்ணாமலையில் மகன் விபத்தில் சிக்கி உயிரிழந்த செய்தியைக் கேள்விப்பட்டதும் அவரின் அம்மா மயங்கி விழுந்து இறந்த செய்தியைஊடகங்களில் பார்த்தேன். கணவன் இறந்த அதிர்ச்சியில் மனைவி இறப்பது, ... மேலும் பார்க்க