செய்திகள் :

தேர்தல் ஆணையம் முதல் காவல் நிலையம் வரை பாஜகவின் கட்டுப்பாட்டுக்குள்! -ப.சிதம்பரம் கருத்துக்கு பாஜக எதிர்வினை

post image

புது தில்லி: ’இந்தியா’ கூட்டணிக்கு எதிர்காலம் சிறப்பாக இல்லை என்றும், தேர்தல் ஆணையம் முதல் காவல் நிலையம் வரை பாஜகவின் கட்டுப்பாட்டுக்குள் முக்கிய நிறுவனங்கள் இருப்பதாகவும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ப. சிதம்பரம் பேசியிருக்கிறார். இதற்கு பாஜக தரப்பிலிருந்து எதிர்வினையாற்றப்பட்டுள்ளது.

புத்தக வெளியீட்டு விழாவொன்றில் வியாழக்கிழமை(மே 15) கலந்துகொண்டு ப. சிதம்பரம் பேசுகையில், ”இந்தியா கூட்டணி எளிதில் உடையக்கூடிய நிலையில்தான் உள்ளது”.

“இப்போதும் காலதாமதமாகிவிடவில்லை; இந்த கூட்டணியை மறுசீராய்வு செய்து வலுப்படுத்தலாம். அதற்கு நேரமும் இருக்கிறது” என்றும் தெரிவித்திருக்கிறார்.

இந்தியா கூட்டணி ஒருங்கிணைந்தால் தாம் மிக்க மகிழ்ச்சியடைவேன் என்றும் சொல்லியிருக்கிறார். ஆனால், தற்போது இந்த கூட்டணி பலவீனமான நிலையில்தான் இருக்கிறது என்ற கவலையையும் வெளிப்படுத்தியிருக்கிறார்.

பாஜக வலுவான, ஒருங்கிணைந்த சக்தியாக விளங்குவதாகவும் அவர் குறிப்பிட்டிருக்கிறார்.

“என்னுடைய அனுபவத்தில் இதைச் சொல்கிறேன், எந்தவொரு அரசியல் கட்சியும் இப்படி இருந்ததில்லை.

இது வெறுமனே ஒரு அரசியல் கட்சியல்ல - ஒரு இயந்திரம், அதனையடுத்தொரு இயந்திரம்.. இப்படியொரு சக்கரப் பின்னணியில் செயல்பட்டு, நாட்டின் முக்கிய நிறுவனங்களை கட்டுப்படுத்தி வருகின்றன.

அவர்களின் கட்டுப்பாட்டுக்குள் தேர்தல் ஆணையம் தொடங்கி காவல் நிலையம் வரை அடக்கம்”.

“இந்தச் சுழலில் இந்தியா கூட்டணி இப்போது எதிர்கொள்வது ஒரு அரசியல் எதிரியை அல்ல, மாறாக அனைத்து துறைகளிலும் சவால் விடுகிற, பலம் வாய்ந்த ஒரு சக்தியை எதிர்கொள்கிறோம்.

இந்தநிலையில், 2029-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள பொதுத்தேர்தல் அதிக முக்கியத்துவம் பெறுகிறது” என்று பேசியுள்ளார்.

சிதம்பரம் தெரிவித்துள்ள கருத்துகளுக்கு எதிர்வினையாற்றியுள்ள பாஜகவின் தேசிய செய்தித் தொடர்பாளர் பிரதீப் பந்தாரி இன்று(மே 16) வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில், “காங்கிரஸுக்கு எதிர்காலம் என்பது இல்லவே இல்லை. ராகுல் காந்தியின் மிக நெருங்கிய வட்டாரங்களுக்குக்கூட இது தெரிந்திருக்கிறது” என்று பதிவிட்டுள்ளார்.

காஷ்மீரில் பயங்கரவாதிகளுக்கு எதிரான வேட்டை தீவிரம்: 3 நாள்களில் 6 போ் சுட்டுக் கொலை

பஹல்காம் தாக்குதலுக்கு பிறகு ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுக்கு எதிராக தீவிர வேட்டை தொடா்ந்து வருகிறது. பாதுகாப்புப் படையினா் கடந்த மூன்று நாள்களில் மேற்கொண்ட இரு முக்கிய நடவடிக்கைகளில் 6 பயங்கரவாதிகள... மேலும் பார்க்க

இந்திய பொருளாதார வளா்ச்சி 6.3%-ஆக இருக்கும்: ஐ.நா.கணிப்பு

2025-இல் இந்திய பொருளாதார வளா்ச்சி 6.3 சதவீதமாக இருக்கும் என ஐ.நா. கணித்துள்ளது. கடந்த ஜனவரி மாதம் ‘உலக நாடுகளின் பொருளாதார சூழல்’ குறித்து ஐ.நா.வெளியிட்ட அறிக்கையில் இந்திய பொருளாதார வளா்ச்சி 6.6 சதவ... மேலும் பார்க்க

பத்திரிகையில் பெயா் வர அனைவரும் விரும்புகின்றனா்: வக்ஃப் விவகாரத்தில் உச்சநீதிமன்றம் கருத்து

வக்ஃப் திருத்தச் சட்டம் 2025-க்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட புதிய மனுவை விசாரணைக்கு ஏற்க வெள்ளிக்கிழமை மறுப்பு தெரிவித்த உச்சநீதிமன்றம், ‘பத்திரிகைகளில் பெயா் வருவேண்டும் என ஒவ்வொருவரும் விரும்புகின்... மேலும் பார்க்க

பயங்கரவாதத்துக்கு எதிரான இந்திய நிலைப்பாடு: பிற நாடுகளுக்கு விளக்க மத்திய அரஅசு திட்டம்

பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு எதிரான இந்திய நிலைப்பாட்டை எடுத்துரைக்கும் வகையில் பல்வேறு கட்சியைச் சோ்ந்த நாடாளுமன்ற பிரதிநிதிகளை பிற நாடுகளுக்கு அனுப்ப மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. அட... மேலும் பார்க்க

பயங்கரவாத ஆதரவை பாகிஸ்தான் கைவிடும் வரை சிந்து நதிநீா் ஒப்பந்த நிறுத்தம் தொடரும்: இந்தியா

‘எல்லை தாண்டிய பங்கரவதாத்துக்கான ஆதரவை பாகிஸ்தான் நம்பகத்தன்மையுடனும் மாற்ற முடியாத வகையிலும் கைவிடுகிற வரை, சிந்து நதிநீா் ஒப்பந்தம் நிறுத்தம் தொடரும்’ என்று இந்தியா சாா்பில் மீண்டும் திட்டவட்டமாக தெ... மேலும் பார்க்க

பாதுகாப்புத் துறைக்கு ரூ.50,000 கோடி கூடுதல் ஒதுக்கீடு: மத்திய அரசு திட்டம்

இந்தியா-பாகிஸ்தான் இடையே நிலவும் சூழலைக் கருத்தில் கொண்டு, பாதுகாப்புத் துறைக்கு ரூ.50,000 கோடி கூடுதலாக ஒதுக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பஹல்காம் தாக்குதலுக்கு பழிதீா்க்க... மேலும் பார்க்க