செய்திகள் :

ஐபிஎல் கோப்பையை வெல்லும் கேப்டனுக்கு மதிப்பு கூடுகிறது: சுரேஷ் ரெய்னா

post image

இந்தியா-பாகிஸ்தான் மோதலினால் பாதியில் நிறுத்தப்பட்ட ஐபிஎல் 2025 சீசன் மீண்டும் இன்றுமுதல் (மே.17) தொடங்குகின்றன.

போட்டிகள் தொடங்கியுள்ள நிலையில், அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்கு நுழையும் முக்கியமான கடத்தினை அடைந்துள்ளது.

ஜியோ ஹாட்ஸ்டார் நிபுணர்களான சுனில் கவாஸ்கர், சுரேஷ் ரெய்னா, ஸ்டார் ஸ்போர்ட்ஸ் பிரஸ் ரூமில் முன்னாள் சிஎஸ்கே வீரர் சுரேஷ் ரெய்னா பேசியது கவனம் ஈர்த்துள்ளது.

இன்றிரவு 7:30 மணிக்கு, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு தனது சொந்த மண்ணில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் உடன் மோதவிருக்கிறது.

இந்நிலையில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு குறித்தும் ஐபிஎல் கோப்பையின் வெற்றி குறித்தும் ரெய்னா கூறியதாவது:

இந்த வருடம் ஆர்சிபி ஒரு புதிய அணியாக விளையாடுகிறது. இந்த சீசனில் 150, 136 ரன்களை கூட கட்டுப்படுத்தியுள்ளனர்.

புதிய கேப்டன் ரஜத் படிதார் சிஎஸ்கேவை இருமுறை தோற்கடித்துள்ளார். ஆர்சிபின் ஓய்வறை உற்சாகமாக உள்ளது. இது விராட் கோலிக்கான வெற்றி ஆண்டாக இருக்கலாம்.

ஒரு கோப்பையை வென்ற பிறகு, கேப்டனாக ஒரு வீரரின் மதிப்பும், அவரது முடிவுகளுக்கும் கிடைக்கும் ஆதரவும் மாறுகிறது. அதனால்தான் ஐபிஎல் வெற்றி மிக முக்கியம் எனக் கூறினார்.

17 ஆண்டுகளாக ஆர்சிபி கோப்பை வெல்லாமல் இருக்கிறது. அதனால் இந்த சீசனை அந்த அணியின் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து இருக்கிறார்கள்.

தில்லி கேபிடல்ஸ் அணியுடன் இணைந்த டு பிளெஸ்ஸிஸ், டிரிஸ்டன் ஸ்டப்ஸ்!

ஐபிஎல் தொடரில் மீதமிருக்கும் போட்டிகளில் விளையாடுவதற்காக டு பிளெஸ்ஸிஸ் மற்றும் டிரிஸ்டன் ஸ்டப்ஸ் இருவரும் தில்லி கேபிடல்ஸ் அணியுடன் இணைந்துள்ளனர்.இந்தியா - பாகிஸ்தான் இடையிலான பதற்றம் காரணமாக தற்காலிக... மேலும் பார்க்க

ஐபிஎல் 2025-இல் அடுத்த 10 நாள்கள் மிகவும் முக்கியமானவை..! முன்னாள் வீரர் பேட்டி!

பிளே ஆஃப்ஸுக்கான போராட்டம் தீவிரமடைவது குறித்து முன்னாள் இந்திய வீரர் சுனில் கவாஸ்கர் கருத்து முக்கியத்துவம் பெற்றுள்ளது. இந்தியா-பாகிஸ்தான் மோதலினால் பாதியில் நிறுத்தப்பட்ட ஐபிஎல் 2025 சீசன் மீண்டும்... மேலும் பார்க்க

சிஎஸ்கே ரசிகையை சீண்டிய ஆர்சிபி ரசிகர்கள்: ராபின் உத்தப்பா கண்டனம்

ஆர்சிபி ரசிகர்களின் மோசமான செயல்கள் குறித்து முன்னாள் வீரர் ராபின் உத்தப்பா பேசியது சமூக ஊடகத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது. ஆர்சிபி, சிஎஸ்கே ரசிகர்களுக்கு தொடர்ச்சியாக வாக்குவாதங்கள் சண்டைகள் நிகழ்ந்த... மேலும் பார்க்க

மீதமுள்ள போட்டிகளுக்கான பயிற்சியை நாங்கள் ஒருபோதும் நிறுத்தவில்லை: கேகேஆர் வீரர்

ஐபிஎல் மீண்டும் தொடங்கும் எனத் தெரிந்ததால் நாங்கள் பயிற்சியை ஒருபோதும் நிறுத்தவில்லை என கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வீரர் மணீஷ் பாண்டே தெரிவித்துள்ளார்.இந்தியா - பாகிஸ்தான் இடையிலான பதற்றம் காரணமாக ஐபி... மேலும் பார்க்க

திருப்பதியில் ஐபிஎல் அணியின் உரிமையாளர் வழிபாடு!

இந்தியா - பாகிஸ்தான் இடையிலான பதற்றமான சூழல் முடிவுக்கு வந்ததையடுத்து, மீதமுள்ள ஐபிஎல் போட்டிகள் நாளை (மே 17) முதல் நடத்தப்பட உள்ளன.இந்த நிலையில், லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் உரிமையாளர் சஞ்ஜீவ் கோ... மேலும் பார்க்க

தில்லி கேபிடல்ஸுக்காக முஸ்தஃபிசூர் ரஹ்மான் விளையாடுவது உறுதி!

ஐபிஎல் தொடரில் தில்லி கேபிடல்ஸ் அணிக்காக வங்கதேச வேகப் பந்துவீச்சாளர் முஸ்தஃபிசூர் ரஹ்மான் விளையாடுவது உறுதி செய்யப்பட்டுள்ளது.இந்தியா - பாகிஸ்தான் இடையிலான பதற்றம் காரணமாக ஐபிஎல் போட்டிகள் ஒரு வாரத்த... மேலும் பார்க்க