செய்திகள் :

தில்லி கேபிடல்ஸுக்காக முஸ்தஃபிசூர் ரஹ்மான் விளையாடுவது உறுதி!

post image

ஐபிஎல் தொடரில் தில்லி கேபிடல்ஸ் அணிக்காக வங்கதேச வேகப் பந்துவீச்சாளர் முஸ்தஃபிசூர் ரஹ்மான் விளையாடுவது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்தியா - பாகிஸ்தான் இடையிலான பதற்றம் காரணமாக ஐபிஎல் போட்டிகள் ஒரு வாரத்துக்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இரு நாடுகளுக்கும் இடையேயான பதற்றமான சூழல் முடிவுக்கு வந்ததையடுத்து, மீதமுள்ள ஐபிஎல் போட்டிகள் நாளை (மே 17) முதல் நடத்தப்பட உள்ளன.

இதையும் படிக்க: மீதமுள்ள ஐபிஎல் போட்டிகளில் வெளிநாட்டு வீரர்கள் விளையாடாதீர்கள்: முன்னாள் ஆஸி. வீரர்

தில்லி கேபிடல்ஸ் வீரர் ஜேக் பிரேசர் மெக்கர்க்குக்குப் பதிலாக வங்கதேச வேகப் பந்துவீச்சாளர் முஸ்தஃபிசூர் ரஹ்மான் இறுதிக்கட்ட போட்டிகளுக்காக தில்லி அணியால் ஒப்பந்தம் செய்யப்பட்டார். இருப்பினும், ஐக்கிய அரபு அமீரகத்துக்கு எதிரான டி20 தொடரில் விளையாடுவதற்காக முஸ்தஃபிசூர் ரஹ்மான் புறப்பட்டதால், அவர் தில்லி கேபிடல்ஸுக்காக விளையாடுவாரா? மாட்டாரா? என்ற குழப்பம் ஏற்பட்டது.

விளையாடுவது உறுதி

தில்லி கேபிடல்ஸ் அணிக்காக மே 18 முதல் மே 24 வரையிலான போட்டிகளில் விளையாட முஸ்தஃபிசூர் ரஹ்மானுக்கு வங்கதேச கிரிக்கெட் வாரியம் அனுமதி வழங்கியுள்ளது.

ஐக்கிய அரபு அமீரகத்துக்கு எதிராக நாளை (மே 17) நடைபெறும் முதல் டி20 போட்டியில் விளையாடிய பிறகு, தில்லி கேபிடல்ஸ் அணியுடன் முஸ்தஃபிசூர் இணையவுள்ளார்.

இது தொடர்பாக வங்கதேச கிரிக்கெட் வாரியம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: வங்கதேச அணியின் வேகப் பந்துவீச்சாளர் முஸ்தஃபிசூர் ரஹ்மானுக்கு இந்தியாவில் நடைபெற்று வரும் ஐபிஎல் போட்டிகளில் விளையாட வங்கதேச கிரிக்கெட் வாரியம் அனுமதியளித்துள்ளது. மே 18 ஆம் தேதி முதல் மே 24 ஆம் தேதி வரையிலான போட்டிகளில் விளையாட அவருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வங்கதேச அணி பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடவுள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான இந்த டி20 தொடர் வருகிற மே 25 ஆம் தேதி முதல் தொடங்குகிறது. அதன் காரணமாகவே, முஸ்தஃபிசூர் ரஹ்மானுக்கு மே 24 ஆம் தேதி வரை மட்டுமே தில்லி கேபிடல்ஸ் அணிக்காக விளையாட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதனால், தில்லி கேபிடல்ஸ் அணிக்காக கடைசி மூன்று லீக் போட்டிகளில் மட்டுமே அவரால் விளையாட முடியும். தில்லி கேபிடல்ஸ் அணி பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும் பட்சத்தில், அவரால் அந்த போட்டிகளில் விளையாட முடியாது.

இதையும் படிக்க: நான் பயிற்சியாளராக இருந்திருந்தால், ரோஹித் சிட்னி டெஸ்ட்டில் விளையாடியிருப்பார்: ரவி சாஸ்திரி

நடப்பு ஐபிஎல் தொடரில் இதுவரை 11 போட்டிகளில் விளையாடியுள்ள தில்லி கேபிடல்ஸ் அணி, 6 போட்டிகளில் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் 5-வது இடத்தில் உள்ளது. பிளே ஆஃப் சுற்றுக்கான போட்டியில் நீடிக்கும் தில்லி அணிக்கு அடுத்து வரும் போட்டிகளில் வெற்றி பெறுவது மிகவும் முக்கியம்.

தில்லி கேபிடல்ஸ் அணி நாளை மறுநாள் (மே 18) தில்லியில் நடைபெறும் அதன் அடுத்தப் போட்டியில் குஜராத் டைட்டன்ஸை எதிர்த்து விளையாடவுள்ளது குறிப்பிடத்தக்கது.

மீதமுள்ள போட்டிகளுக்கான பயிற்சியை நாங்கள் ஒருபோதும் நிறுத்தவில்லை: கேகேஆர் வீரர்

ஐபிஎல் மீண்டும் தொடங்கும் எனத் தெரிந்ததால் நாங்கள் பயிற்சியை ஒருபோதும் நிறுத்தவில்லை என கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வீரர் மணீஷ் பாண்டே தெரிவித்துள்ளார்.இந்தியா - பாகிஸ்தான் இடையிலான பதற்றம் காரணமாக ஐபி... மேலும் பார்க்க

திருப்பதியில் ஐபிஎல் அணியின் உரிமையாளர் வழிபாடு!

இந்தியா - பாகிஸ்தான் இடையிலான பதற்றமான சூழல் முடிவுக்கு வந்ததையடுத்து, மீதமுள்ள ஐபிஎல் போட்டிகள் நாளை (மே 17) முதல் நடத்தப்பட உள்ளன.இந்த நிலையில், லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் உரிமையாளர் சஞ்ஜீவ் கோ... மேலும் பார்க்க

மீதமுள்ள ஐபிஎல் போட்டிகளில் வெளிநாட்டு வீரர்கள் விளையாடாதீர்கள்: முன்னாள் ஆஸி. வீரர்

மீதமுள்ள ஐபிஎல் போட்டிகளில் வெளிநாட்டு வீரர்கள் விளையாட வேண்டாம் என ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் மிட்செல் ஜான்சன் வலியுறுத்தியுள்ளார்.இந்தியா - பாகிஸ்தான் இடையிலான பதற்றம் காரணமாக ஐபிஎல் போட்டிகள... மேலும் பார்க்க

மீதமிருக்கும் ஐபிஎல் போட்டிகளில் ஸ்டார்க் பங்கேற்கமாட்டார்..! தில்லிக்கு பின்னடைவா?

தில்லி கேபிடல்ஸ் அணியின் நட்சத்திர பந்துவீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் மீதமிருக்கும் ஐபிஎல் போட்டிகளில் பங்கேற்கமாட்டார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த மிட்செல்ஸ் ஸ்டார்க் ஐபிஎல் போட... மேலும் பார்க்க

ஐபிஎல் தொடரின் மீதமுள்ள போட்டிகளை தவறவிடும் கேகேஆர் அணியின் ஆல்ரவுண்டர்கள்!

ஐபிஎல் தொடரின் மீதமுள்ள போட்டிகளில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் ஆல்ரவுண்டர்கள் விளையாட முடியாத சூழல் உருவாகியுள்ளது.இந்தியா - பாகிஸ்தான் இடையிலான பதற்றம் காரணமாக ஐபிஎல் தொடர் தற்காலிகமாக நிறுத்தி வ... மேலும் பார்க்க

ஆர்சிபி அணியுடன் மீண்டும் இணைந்த வெளிநாட்டு வீரர்கள்!

ஐபிஎல் தொடரின் மீதமுள்ள போட்டிகளில் விளையாடுவதற்காக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் வெளிநாட்டு வீரர்கள் அந்த அணியுடன் மீண்டும் இணைந்துள்ளனர்.இந்தியா - பாகிஸ்தான் இடையிலான பதற்றம் காரணமாக ஐபிஎல் தொட... மேலும் பார்க்க