செய்திகள் :

ஐபிஎல் தொடரின் மீதமுள்ள போட்டிகளை தவறவிடும் கேகேஆர் அணியின் ஆல்ரவுண்டர்கள்!

post image

ஐபிஎல் தொடரின் மீதமுள்ள போட்டிகளில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் ஆல்ரவுண்டர்கள் விளையாட முடியாத சூழல் உருவாகியுள்ளது.

இந்தியா - பாகிஸ்தான் இடையிலான பதற்றம் காரணமாக ஐபிஎல் தொடர் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இதனால், வெளிநாட்டு வீரர்கள் அவர்களது நாடுகளுக்குத் திரும்பினர். இதற்கிடையில், இந்தியா - பாகிஸ்தான் இடையேயான பதற்றம் முடிவுக்கு வர, ஐபிஎல் தொடரின் மீதமுள்ள போட்டிகள் மே 17 முதல் நடைபெறும் என ஐபிஎல் நிர்வாகம் அறிவித்தது.

இதையும் படிக்க: ஆர்சிபி அணியுடன் மீண்டும் இணைந்த வெளிநாட்டு வீரர்கள்!

ஆல்ரவுண்டர்கள் விளையாடவில்லை

ஐபிஎல் தொடரின் மீதமுள்ள போட்டிகள் நாளை மறுநாள் (மே 17) முதல் தொடங்கவுள்ளதால், வெளிநாட்டு வீரர்கள் பலரும் தங்களது அணியுடன் மீண்டும் இணைந்து வருகிறார்கள். 

இருப்பினும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் ஆல்ரவுண்டர்களான மொயின் அலி மற்றும் ரோவ்மன் பௌவல் இருவரும் மருத்துவக் காரணங்களினால் ஐபிஎல் தொடரின் மீதமுள்ள போட்டிகளில் விளையாட முடியாத சூழல் உருவாகியுள்ளது.

இது தொடர்பாக கொல்கத்தா அணி நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: மருத்துவக் காரணங்களினால் ரோவ்மன் பௌவல் மற்றும் மொயின் அலி ஐபிஎல் தொடரின் மீதமுள்ள போட்டிகளில் விளையாட முடியாத சூழல் உருவாகியுள்ளது. மொயின் அலியின் குடும்ப உறுப்பினர்கள் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் குணமடைந்து விரைவில் மீண்டும் நலம்பெற விரும்புகிறோம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நடப்பு ஐபிஎல் தொடரில் இதுவரை 12 போட்டிகளில் விளையாடியுள்ள கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 5 வெற்றிகளுடன் புள்ளிப்பட்டியலில் 6-வது இடத்தில் உள்ளது. பிளே ஆஃப் சுற்றுக்கான போட்டியில் நீடிக்க கடைசி இரண்டு லீக் போட்டிகளிலும் வெற்றி பெற்றாக வேண்டும் என்ற கட்டாயத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி உள்ளது.

இதையும் படிக்க: ரோஹித் சர்மா, விராட் கோலி ஓய்வு பெற்றதால் அச்சமடையத் தேவையில்லை: முன்னாள் இந்திய வீரர்

நாளை மறுநாள் (மே 17) பெங்களூருவில் நடைபெறும் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதவுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஆர்சிபி அணியுடன் மீண்டும் இணைந்த வெளிநாட்டு வீரர்கள்!

ஐபிஎல் தொடரின் மீதமுள்ள போட்டிகளில் விளையாடுவதற்காக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் வெளிநாட்டு வீரர்கள் அந்த அணியுடன் மீண்டும் இணைந்துள்ளனர்.இந்தியா - பாகிஸ்தான் இடையிலான பதற்றம் காரணமாக ஐபிஎல் தொட... மேலும் பார்க்க

பயிற்சிக்கு வந்த ஆர்சிபி கேப்டன்..! வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி!

காயம் காரணமாக ஆர்சிபி கேப்டன் ரஜத் படிதார் விலகுவதாகக் கூறப்பட்டு வந்த நிலையில் தற்போது பயிற்சிக்காக அணியில் இணைந்துள்ளார். புதிய கேப்டன் ரஜத் படிதார் தலைமையில் இந்த சீசனில் ஆர்சிபி அணி மிகவும் சிறப்ப... மேலும் பார்க்க

ஜாஸ் பட்லருக்குப் பதிலாக இலங்கை வீரர்? குஜராத்தின் வெற்றிக் கூட்டணி மாற்றம்!

குஜராத் டைட்டன்ஸ் அணியில் பட்லருக்கு மாற்றாக குசால் மெண்டிஸ் தேர்வாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.ஐபிஎல் போட்டிகள் இந்தியா -பாகிஸ்தான் மோதலால் ஒத்திவைக்கப்பட்டன. அதனால் வெளிநாட்டு வீரர்கள் தங்களது சொ... மேலும் பார்க்க

ஐபிஎல் விளையாட ஒப்பந்தமான வங்கதேச வீரர் அமீரகம் பயணம்..! குழப்பத்தில் ரசிகர்கள்!

தில்லி கேபிடல்ஸ் அணி வீரர் ஜேக் பிரேசர் மெக்கருக்குப் பதிலாக முஸ்தபிசூர் ரஹ்மான் தேர்வு செய்யப்பட்டதாக நேற்று (மே.14) அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், அவர் தனது எக்ஸ் பக்கத்தில் ஐக்கிய அரபு அமீரகத்துக்க... மேலும் பார்க்க

தற்காலிக மாற்று வீரர்களை தேர்வு செய்யலாம்..! புதிய விதிமுறைகள் அறிவிப்பு!

இந்தியாவுக்கு வரமுடியாத வெளிநாட்டு வீரர்களுக்காக தற்காலிக மாற்று வீரர்களை தேர்வு செய்ய ஐபிஎல் நிர்வாகம் புதிய விதியை அறிவித்துள்ளது. பாகிஸ்தானுடன் ஏற்பட்ட மோதல் காரணமாக ஐபிஎல் போட்டிகள் ஒத்திவைக்கப்பட... மேலும் பார்க்க

சிஎஸ்கே அணிக்கு திரும்பும் டெவால்டு பிரீவிஸ்..! ரசிகர்கள் உற்சாகம்!

இளம் சிஎஸ்கே வீரர் டெவால்டு பிரீவிஸ் இந்தியாவுக்கு மீண்டும் திரும்புவதாகக் கூறியுள்ளார்.தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த 22 வயதான டெவால்டு ப்ரீவிஸ் மாற்று வீரராக சிஎஸ்கே அணியில் இணைந்தார்.சிறப்பாக விளையாட... மேலும் பார்க்க