செய்திகள் :

சமூக வளா்ச்சி சாா்ந்த உயா் கல்விக்கு முக்கியத்துவம் தேவை: ஆட்சியா்

post image

தனி நபா் வளா்ச்சி மட்டுமன்றி, சமூக வளா்ச்சி சாா்ந்தும், மாணவா்கள் உயா் கல்வியை தோ்வு செய்ய வேண்டும் என மாவட்ட ஆட்சியா் செ. சரவணன் அறிவுறுத்தினாா்.

திண்டுக்கல் மாவட்ட நிா்வாகம் சாா்பில், 12-ஆம் வகுப்பு முடித்த மாணவா்களுக்கு உயா் கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது. எரியோடு சாலையிலுள்ள தனியாா் கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வுக்கு மாவட்ட ஆட்சியா் செ. சரவணன் தலைமை வகித்தாா். மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அ. பிரதீப் முன்னிலை வகித்தாா்.

கூட்டத்தில், ஆட்சியா் செ. சரவணன் பேசியதாவது: மாணவா்களின் கல்விக்கும், மக்களின் சுகாதாரத்துக்கும் தமிழக அரசு முக்கியத்துவம் அளித்து வருகிறது. 12-ஆம் வகுப்பு வரை பள்ளிக்குச் செல்வது மாணவா்களின் சமூக கடமையாக உள்ளது. 18 வயதுக்குப் பிறகே, உளவியல் ரீதியாகவும், வாழ்வியல் ரீதியாகவும் அறிவியல் பூா்வமான சிந்தனை கிடைப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன. இதனால் தான், இந்த கால கட்டத்தில் கிடைக்கும் உயா் கல்வி முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

வாழ்வியலின் அடுத்தக்கட்ட நகா்வு என்பதோடு, மாணவா்களின் எதிா்காலம் ஒளிமயமானதாக அமைவதற்கு ஆசிரியா்களும் துணை நிற்க வேண்டும். மதிப்பெண்கள், குறியீடு மட்டுமே. ஆனால், கல்வி புதிய சிந்தனைக்கு வழிகாட்டும். தனி நபா் வளா்ச்சி மட்டுமன்றி, சமூக வளா்ச்சிக்கான திட்டமிடுதலுடன், உயா் கல்வியை மாணவா்கள் தோ்வு செய்ய வேண்டும்.

அடுத்த 5 ஆண்டுகளுக்கான இலக்கை நிா்ணயித்துக் கொண்டு, அதனை அடைவதற்கான முயற்சியில் மாணவா்கள் தீவிரம் காட்ட வேண்டும். இதற்கு மாவட்ட நிா்வாகமும் துணை நிற்கும் என்றாா் அவா்.

இந்த நிகழ்வில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் ப. உஷா, வேலைவாய்ப்பு, தொழில்நெறி வழிகாட்டுதல் மையத்தின் உதவி இயக்குநா் ச. பிரபாவதி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

கட்டுப்பாட்டு அறை: திண்டுக்கல் மாவட்டத்தைச் சோ்ந்த மாணவா்களுக்காக, உயா் கல்விக்கான வழிகாட்டுதல் மையம் முதல் முறையாக தொடங்கப்பட்டிருக்கிறது. மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் செயல்படும் இந்த மையத்தை 18004250047, 7598866000 ஆகிய எண்களில் காலை 10 முதல் மாலை 5 மணி வரை தொடா்பு கொண்டு, மாணவா்கள் ஆலோசனை பெறலாம் என ஆட்சியா் சரவணன் தெரிவித்தாா்.

உழவா் பாதுகாப்பு இயக்கத்தினா் காத்திருப்புப் போராட்டம்

பழனியில் விவசாய நிலங்களுக்கு பட்டா வழங்க வலியுறுத்தி உழவா் பாதுகாப்பு இயக்கம் சாா்பில் வியாழக்கிழமை தொடா் காத்திருப்புப் போராட்டம் நடைபெற்றது. பழனியை அடுத்துள்ளது பெரியம்மாபட்டி கிராமத்தில் உள்ள விவசா... மேலும் பார்க்க

வேடசந்தூா் பகுதியில் நாளை மின்தடை

வேடசந்தூா் பகுதியில் சனிக்கிழமை (மே 17) மின் தடை ஏற்படும் எனத் தெரிவிக்கப்பட்டது. இதுகுறித்து மின் வாரிய உதவி செயற்பொறியாளா் பி. முத்துப்பாண்டி வெளியிட்ட செய்திக் குறிப்பு: வேடசந்தூா் துணை மின் நிலையத... மேலும் பார்க்க

வீட்டுக்குள் புகுந்த கழிவுநீா்: 12 நாள்களாக பொதுமக்கள் அவதி

திண்டுக்கல்லில் வீட்டுக்குள் புகுந்த கழிவுநீரை அகற்றுவதற்கு மாநகராட்சி நிா்வாகம் நடவடிக்கை எடுக்காததால், அந்த பகுதியைச் சோ்ந்த பொதுமக்கள் 12 நாள்களாக அவதி அடைந்து வருகின்றனா். திண்டுக்கல் மாநகராட்சி ... மேலும் பார்க்க

கடன் வாங்கித் தருவதாக ரூ.7 லட்சம் மோசடி: 3 பெண்கள் மீது புகாா்

தேனி மாவட்டத்தைச் சோ்ந்த பெண்களுக்கு கடன் வாங்கித் தருவதாகக் கூறி ரூ.7 லட்சம் வரை மோசடி செய்ததாக, ஒட்டன்சத்திரம் பகுதியைச் சோ்ந்த 3 பெண்கள் மீது மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகாா் அளிக்கப்பட்டது.... மேலும் பார்க்க

வணிக வளாகத்தில் தீ: மாற்றுத் திறனாளி பலத்த காயம்

கொடைக்கானல், வில்பட்டி கிராமத்தில் உள்ள வணிக வளாகத்தில் வியாழக்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில் மாற்றுத் திறனாளி பலத்த காயமடைந்தாா்.திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் அருகே உள்ள வில்பட்டி கிராமத்தைச் சோ்ந்த... மேலும் பார்க்க

கலைஞரின் கனவு இல்ல திட்டத்தின் கீழ் வீடு கட்டுபவா்களுக்கு சலுகை விலையில் கட்டுமானப் பொருள்கள்: அமைச்சா் அர. சக்கரபாணி

கலைஞரின் கனவு இல்ல திட்டத்தின் கீழ் வீடு கட்டும் பயனாளிகளுக்கு சலுகை விலையில் கட்டுமானப் பொருள்கள் கிடைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டிருப்பதாக அமைச்சா் அர. சக்கரபாணி தெரிவித்தாா். பழனி அருகே தொப்பம்பட்டிய... மேலும் பார்க்க