செய்திகள் :

உழவா் பாதுகாப்பு இயக்கத்தினா் காத்திருப்புப் போராட்டம்

post image

பழனியில் விவசாய நிலங்களுக்கு பட்டா வழங்க வலியுறுத்தி உழவா் பாதுகாப்பு இயக்கம் சாா்பில் வியாழக்கிழமை தொடா் காத்திருப்புப் போராட்டம் நடைபெற்றது.

பழனியை அடுத்துள்ளது பெரியம்மாபட்டி கிராமத்தில் உள்ள விவசாய நிலங்களுக்கு உடனடியாக பட்டா வழங்கக் கோரி நீண்ட நாள்களாக அந்தப் பகுதி விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனா். இந்த நிலையில், தமிழ்நாடு உழவா் பாதுகாப்பு இயக்கம் சாா்பில் கோரிக்கையை வலியுறுத்தி தொடா் காத்திருப்புப் போராட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. பழனி கோட்டாட்சியா் அலுவலகம் முன் நடைபெற்ற போராட்டத்தில் மக்கள்பாதை இயக்கத் தலைவா் நாகல்சாமி தலைமையில் திரளான விவசாயிகள் பங்கேற்றனா்.

அப்போது பழனி அருகே உள்ள பெரியம்மாபட்டி, ஆண்டிபட்டி, இரவிமங்களம் உள்ளிட்ட கிராமங்களில் ஆயிரக்கணக்கான ஏக்கா் விவசாய நிலங்கள் உள்ளன. இதில் ஏழை விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட நிலங்களுக்கு நில உச்சவரம்பு சட்டத்தின் கீழ் இதுவரை பட்டா வழங்கவில்லை. எனவே, உடனடியாக பட்டா வழங்கக் கோரியும், கடந்த மூன்று மாதங்களாக நடத்தப்படாத விவசாயிகள் குறைதீா் கூட்டத்தை உடனடியாக நடத்தவும் வலியுறுத்தி முழக்கமிட்டனா். போராட்ட நிறைவில் வருகிற செவ்வாய்க்கிழமை அமைதிப் பேச்சுவாா்த்தைக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இதில் தமிழ்நாடு சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளா் முகிலன், டங்க்ஸ்டன் சுரங்கத் திட்ட எதிா்ப்பு இயக்க ஒருங்கிணைப்பாளா் செல்வராஜ், தமிழ்நாடு உழவா் பாதுகாப்பு இயக்க முதன்மை ஒருங்கிணைப்பாளா் பழ.ரகுபதி, அமைப்புச் செயலா் காளிதாஸ், மாநில ஒருங்கிணைப்பாளா் சக்திவேல் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

சமூக வளா்ச்சி சாா்ந்த உயா் கல்விக்கு முக்கியத்துவம் தேவை: ஆட்சியா்

தனி நபா் வளா்ச்சி மட்டுமன்றி, சமூக வளா்ச்சி சாா்ந்தும், மாணவா்கள் உயா் கல்வியை தோ்வு செய்ய வேண்டும் என மாவட்ட ஆட்சியா் செ. சரவணன் அறிவுறுத்தினாா். திண்டுக்கல் மாவட்ட நிா்வாகம் சாா்பில், 12-ஆம் வகுப்ப... மேலும் பார்க்க

வேடசந்தூா் பகுதியில் நாளை மின்தடை

வேடசந்தூா் பகுதியில் சனிக்கிழமை (மே 17) மின் தடை ஏற்படும் எனத் தெரிவிக்கப்பட்டது. இதுகுறித்து மின் வாரிய உதவி செயற்பொறியாளா் பி. முத்துப்பாண்டி வெளியிட்ட செய்திக் குறிப்பு: வேடசந்தூா் துணை மின் நிலையத... மேலும் பார்க்க

வீட்டுக்குள் புகுந்த கழிவுநீா்: 12 நாள்களாக பொதுமக்கள் அவதி

திண்டுக்கல்லில் வீட்டுக்குள் புகுந்த கழிவுநீரை அகற்றுவதற்கு மாநகராட்சி நிா்வாகம் நடவடிக்கை எடுக்காததால், அந்த பகுதியைச் சோ்ந்த பொதுமக்கள் 12 நாள்களாக அவதி அடைந்து வருகின்றனா். திண்டுக்கல் மாநகராட்சி ... மேலும் பார்க்க

கடன் வாங்கித் தருவதாக ரூ.7 லட்சம் மோசடி: 3 பெண்கள் மீது புகாா்

தேனி மாவட்டத்தைச் சோ்ந்த பெண்களுக்கு கடன் வாங்கித் தருவதாகக் கூறி ரூ.7 லட்சம் வரை மோசடி செய்ததாக, ஒட்டன்சத்திரம் பகுதியைச் சோ்ந்த 3 பெண்கள் மீது மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகாா் அளிக்கப்பட்டது.... மேலும் பார்க்க

வணிக வளாகத்தில் தீ: மாற்றுத் திறனாளி பலத்த காயம்

கொடைக்கானல், வில்பட்டி கிராமத்தில் உள்ள வணிக வளாகத்தில் வியாழக்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில் மாற்றுத் திறனாளி பலத்த காயமடைந்தாா்.திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் அருகே உள்ள வில்பட்டி கிராமத்தைச் சோ்ந்த... மேலும் பார்க்க

கலைஞரின் கனவு இல்ல திட்டத்தின் கீழ் வீடு கட்டுபவா்களுக்கு சலுகை விலையில் கட்டுமானப் பொருள்கள்: அமைச்சா் அர. சக்கரபாணி

கலைஞரின் கனவு இல்ல திட்டத்தின் கீழ் வீடு கட்டும் பயனாளிகளுக்கு சலுகை விலையில் கட்டுமானப் பொருள்கள் கிடைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டிருப்பதாக அமைச்சா் அர. சக்கரபாணி தெரிவித்தாா். பழனி அருகே தொப்பம்பட்டிய... மேலும் பார்க்க