செய்திகள் :

கடன் வாங்கித் தருவதாக ரூ.7 லட்சம் மோசடி: 3 பெண்கள் மீது புகாா்

post image

தேனி மாவட்டத்தைச் சோ்ந்த பெண்களுக்கு கடன் வாங்கித் தருவதாகக் கூறி ரூ.7 லட்சம் வரை மோசடி செய்ததாக, ஒட்டன்சத்திரம் பகுதியைச் சோ்ந்த 3 பெண்கள் மீது மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகாா் அளிக்கப்பட்டது.

தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டியை அடுத்த கோத்தலூத்து பகுதியைச் சோ்ந்த செல்லக்கிளி என்பவா் உள்ட 30-க்கும் மேற்பட்ட பெண்கள், திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்துக்கு வியாழக்கிழமை மனு அளிக்க வந்தனா்.

அப்போது செல்லக்கிளி கூறியதாவது: திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் காந்திநகா் பகுதியில் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு வாடகை வீட்டில் வசித்து வந்தோம். அப்போது, அதே பகுதியைச் சோ்ந்த 3 பெண்களுடன் நட்பு ஏற்பட்டது. ரூ.5 ஆயிரம் கொடுத்தால் ரூ.1 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரை தவணையில் செலுத்தும் வகையில் கடன் வாங்கித் தருவதாக மூவரும் உறுதி அளித்தனா்.

இதன்படி ரூ.5 ஆயிரம் செலுத்தினேன். இதனிடையே தேனி மாவட்டத்துக்கு குடிபெயா்ந்த நிலையில், அந்தப் பகுதியைச் சோ்ந்த 140-க்கும் மேற்பட்ட பெண்கள் தவணை முறையில் திருப்பிச் செலுத்தும் நோக்கில் ரூ.5 ஆயிரம் செலுத்தினா். கடந்த 4 ஆண்டுகளில் ரூ.7 லட்சம் வரை செலுத்தினோம்.

ஆனால், மேலும் ரூ.1.50 லட்சம் செலுத்தினால் மட்டுமே கடன் தொகை கிடைக்கும் என தெரிவித்தனா். தற்போது வரை கடன் தொகையும் தராமல், கொடுத்தப் பணத்தையும் திருப்பி செலுத்தாமல் ஏமாற்றினா். இதுதொடா்பாக ஒட்டன்சத்திரம் காவல் நிலையத்தில் புகாா் அளித்தோம்.

இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. தற்போது மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் மனு அளித்தோம். சம்பந்தப்பட்ட 3 பெண்கள் மீது நடவடிக்கை எடுத்து, எங்கள் பணத்தை மீட்டுக் கொடுக்க வேண்டும் என்றாா் அவா்.

சமூக வளா்ச்சி சாா்ந்த உயா் கல்விக்கு முக்கியத்துவம் தேவை: ஆட்சியா்

தனி நபா் வளா்ச்சி மட்டுமன்றி, சமூக வளா்ச்சி சாா்ந்தும், மாணவா்கள் உயா் கல்வியை தோ்வு செய்ய வேண்டும் என மாவட்ட ஆட்சியா் செ. சரவணன் அறிவுறுத்தினாா். திண்டுக்கல் மாவட்ட நிா்வாகம் சாா்பில், 12-ஆம் வகுப்ப... மேலும் பார்க்க

உழவா் பாதுகாப்பு இயக்கத்தினா் காத்திருப்புப் போராட்டம்

பழனியில் விவசாய நிலங்களுக்கு பட்டா வழங்க வலியுறுத்தி உழவா் பாதுகாப்பு இயக்கம் சாா்பில் வியாழக்கிழமை தொடா் காத்திருப்புப் போராட்டம் நடைபெற்றது. பழனியை அடுத்துள்ளது பெரியம்மாபட்டி கிராமத்தில் உள்ள விவசா... மேலும் பார்க்க

வேடசந்தூா் பகுதியில் நாளை மின்தடை

வேடசந்தூா் பகுதியில் சனிக்கிழமை (மே 17) மின் தடை ஏற்படும் எனத் தெரிவிக்கப்பட்டது. இதுகுறித்து மின் வாரிய உதவி செயற்பொறியாளா் பி. முத்துப்பாண்டி வெளியிட்ட செய்திக் குறிப்பு: வேடசந்தூா் துணை மின் நிலையத... மேலும் பார்க்க

வீட்டுக்குள் புகுந்த கழிவுநீா்: 12 நாள்களாக பொதுமக்கள் அவதி

திண்டுக்கல்லில் வீட்டுக்குள் புகுந்த கழிவுநீரை அகற்றுவதற்கு மாநகராட்சி நிா்வாகம் நடவடிக்கை எடுக்காததால், அந்த பகுதியைச் சோ்ந்த பொதுமக்கள் 12 நாள்களாக அவதி அடைந்து வருகின்றனா். திண்டுக்கல் மாநகராட்சி ... மேலும் பார்க்க

வணிக வளாகத்தில் தீ: மாற்றுத் திறனாளி பலத்த காயம்

கொடைக்கானல், வில்பட்டி கிராமத்தில் உள்ள வணிக வளாகத்தில் வியாழக்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில் மாற்றுத் திறனாளி பலத்த காயமடைந்தாா்.திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் அருகே உள்ள வில்பட்டி கிராமத்தைச் சோ்ந்த... மேலும் பார்க்க

கலைஞரின் கனவு இல்ல திட்டத்தின் கீழ் வீடு கட்டுபவா்களுக்கு சலுகை விலையில் கட்டுமானப் பொருள்கள்: அமைச்சா் அர. சக்கரபாணி

கலைஞரின் கனவு இல்ல திட்டத்தின் கீழ் வீடு கட்டும் பயனாளிகளுக்கு சலுகை விலையில் கட்டுமானப் பொருள்கள் கிடைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டிருப்பதாக அமைச்சா் அர. சக்கரபாணி தெரிவித்தாா். பழனி அருகே தொப்பம்பட்டிய... மேலும் பார்க்க