செய்திகள் :

10-ம் வகுப்பு பொதுத்தேர்வு: மாணவிகள் முன்னணி; டாப் 5 மாவட்டங்கள்; ரிசல்ட் விவரங்கள்..

post image

தமிழக பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில் 10-ம் வகுப்பு தேர்வை மாநிலம் முழுவதும் அமைக்கப்பட்டுள்ள 4,113 மையங்களில் சுமார் 9 லட்சம் மாணவ, மாணவிகள் எழுதினார்கள். இதேபோல் 11-ம் வகுப்பு தேர்வு கடந்த மார்ச் 3 முதல் 27-ம் தேதி வரை நடத்தப்பட்டது.

10-ம் வகுப்பு தேர்வு முடிகள் மற்றும் 11-ம் வகுப்பு தேர்வுகள் இன்று வெளியாகி உள்ளது. தமிழ்நாட்டில் மொத்தம் 8,71,239 மாணவர்கள் தேர்வு எழுதினர். இதில் மாணவர்கள் 4,35,119 பேர், மாணவிகள் 4,36,120 பேர்.

10 ம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு!

இந்தத் தேர்வில் 8,17,261 (93.80 %) பேர் தேர்ச்சிப் பெற்றிருக்கின்றனர். இதில்,

  • மாணவிகள் 4,17,183 (95.88 %),

  • மாணவர்கள் 4,00,078 (91.74 %).

கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு தேர்ச்சி விகிதம் 2.25% சதவிகிதம் அதிகரித்திருக்கிறது.

  • அரசுப் பள்ளிகளின் தேர்ச்சி விகிதம் 91.26%.

  • அரசு உதவிப் பெரும் பள்ளிகளின் தேர்ச்சி விகிதம் 93.63%.

  • தனியார் சுயநிதிப் பள்ளிகளின் தேர்ச்சி விகிதம் 97.99%.

அதிக தேர்ச்சிப் பெற்ற மாவட்டகள் பட்டியலில்,

  1. சிவகங்கை 98.31%,

  2. விருதுநகர் 97.45%,

  3. தூத்துக்குடி 96.76%,

  4. கன்னியாகுமரி 96.66%,

  5. திருச்சி 96.61%

ஆகிய மாவட்டங்கள் முதல் ஐந்து இடங்களில் இருக்கிறது.

தேர்வு முடிகள்

இந்த ஆண்டு தேர்வு எழுதிய 12,290 மாற்றுத் திறனாளி மாணவர்களில் 11,409 (92.83%)பேர் தேர்ச்சிப் பெற்றிருக்கின்றனர். தேர்வு எழுதிய 237 சிறை வாசிகளில் 230 பேர் தேர்ச்சி பெற்றிருக்கின்றனர். தேர்வெழுதிய தனித் தேர்வர்கள் 23,769 பேரில் 9,616 பேர் மட்டுமே தேர்ச்சிப் பெற்றிருக்கின்றனர்.

10th Result: இணை பிரியாத இரட்டை சகோதரிகள்; இருவருக்கும் 474 மதிப்பெண்கள்.. அசத்தல் ஒற்றுமை..!

கோவையில், திருச்சி சாலை ஒலம்பஸ் பகுதியில் சுந்தரராஜன் – செல்வி தம்பதியினர் உள்ளனர். இவர்களின் இரட்டை குழந்தைகளான கவிதா, கனிஹா ஆகிய இருவரும் ராமநாதபுரம் மாநகராட்சி மேல் நிலைப்பள்ளியில் 10-ம் வகுப்புபடி... மேலும் பார்க்க

+2 மாணவர்களுக்கு Key Answers புத்தகம் வழங்கிய எம்எல்ஏ - பாராட்டிய ஆசிரியர்கள்

தமிழ்நாட்டில் 12-ம் வகுப்பு மாணவர்களுக்குப் பொதுத்தேர்வு கடந்த மார்ச் 3-ம் தேதி முதல் தொடங்கி மார்ச் 25-ம் தேதி வரை நடைபெற்றது. இந்நிலையில், நேற்று (மே 8) தேர்வு முடிவுகள் வெளியானது.தேர்வு முடிவில் மா... மேலும் பார்க்க

வெளியாகும் +2 தேர்வு முடிவுகள்: 'என்ன படிக்கலாம் என்பதில் குழப்பமா?'- இதோ உங்களுக்கான தகவல் மைய எண்!

பன்னிரெண்டாம் வகுப்பு பொது தேர்வு எழுதி முடித்துவிட்டு காத்திருப்பவர்களுக்கு இன்று காலை 9 மணிக்கு தேர்வு முடிவுகள் தெரிந்துவிடும். தேர்வு முடிவு தெரிந்த பின்பும், 'என்ன படிக்கலாம்?', 'எந்தக் கல்லூரியி... மேலும் பார்க்க

வழக்கறிஞராகும் கனவு; 76 வயதில் 12-வது வகுப்பு தேர்வு எழுதி தேர்ச்சி பெற்ற முன்னாள் கடற்படை அதிகாரி!

மகாராஷ்டிராவில் 12வது வகுப்பு அரசு தேர்வு முடிவுகள் நேற்று வெளியானது. இத்தேர்வை மும்பை நைகாவ் பகுதியை சேர்ந்த 76 வயதான ஓய்வு பெற்ற கடற்படை அதிகாரி கோரக்நாத் மோரே என்பவரும் எழுதி இருந்தார். கோரக்நாத் 3... மேலும் பார்க்க

NCERT: 'முகலாயர்கள் வேண்டாம்; இந்தி வேண்டும்!' - மத்திய அரசே கல்வியிலும் அரசியலா? | In Depth

மும்மொழி கொள்கை, பி.எம் ஶ்ரீ திட்டம்... வரிசையில் தற்போது என்.சி.இ.ஆர்.டி (NCERT) பாடப்புத்தகங்களில் முகலாய மன்னர்களின் குறிப்புகளை நீக்கியுள்ளதும் விவாதப் பொருளாகி வருகிறது. முன்னெப்போதும் இல்லாத வகை... மேலும் பார்க்க