செய்திகள் :

Mumbai Indians : 'ப்ளே ஆப்ஸூக்காக ஜானி பேர்ஸ்டோவை அழைத்து வருகிறதா மும்பை?' - லேட்டஸ்ட் அப்டேட்

post image

இந்தியா - பாகிஸ்தான் பதற்றநிலை காரணமாக ஒத்திவைக்கப்பட்டிருந்த ஐ.பி.எல் போட்டிகள் நாளை முதல் தொடங்கவிருக்கிறது. இந்நிலையில், போட்டிகள் தள்ளிப்போய் தேதி மாறியதால் சில வெளிநாட்டு வீரர்கள் எஞ்சிய போட்டிகளில் பங்கேற்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. மும்பைக்கும் அதே சிக்கல் இருக்கிறது. இதை தவிர்க்க மும்பை அணி சில வீரர்களை மாற்று வீரர்களாக ஒப்பந்தம் செய்ய முடிவெடுத்திருப்பதாக தெரிகிறது.

MI vs LSG - Will Jacks
MI vs LSG - Will Jacks

மும்பை இந்தியன்ஸ் அணியில் ஆடி வரும் ரையான் ரிக்கல்டன், வில் ஜாக்ஸ், கார்பின் போஸ்ச் ஆகியோர் ப்ளே ஆப்ஸ் நடைபெறும் போது இங்கே இருக்கமாட்டார்கள். வில் ஜாக்ஸ் வெஸ்ட் இண்டீஸூக்கு எதிரான ஓடிஐ தொடரில் இங்கிலாந்து சென்றுவிடுவார். மற்ற இருவரும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் இறுதிப்போட்டியில் ஆட பயிற்சி முகாமுக்கு சென்றுவிடுவார்கள். இந்த மூவரில் வில் ஜாக்ஸூம் ரையான் ரிக்கல்டனும் மும்பை அணிக்கு ரொம்பவே முக்கியமானவர்கள்.

ஓப்பனிங் இறங்கும் ரையான் ரிக்கல்டன் இந்த சீசனில் 336 ரன்களை எடுத்திருக்கிறார். மும்பை அணிக்காக அதிக ரன்கள் அடித்தவர்களின் பட்டியலில் இரண்டாவது இடத்தில் இருக்கிறார். அதேமாதிரி வில் ஜாக்ஸ் 195 ரன்களை எடுத்திருக்கிறார். 5 விக்கெட்டுகளையும் வீழ்த்திக் கொடுத்திருக்கிறார். ஆனால், மும்பை அணி ப்ளே ஆப்ஸூக்கு தகுதிப்பெறும்பட்சத்தில் இவர்கள் இருவராலுமே ஆட முடியாது.

Bairstow
Bairstow

அதனால் இவர்களுக்குப் பதிலாக ஜானி பேர்ஸ்டோவையும் ரிச்சர்ட் க்ளீஸனையும் ஒப்பந்தம் செய்யவிருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. அதேமாதிரி, நியூசிலாந்து வீரர் பெவான் ஜேக்கப்ஸூடனும் மும்பை இந்தியன்ஸ் அணி பேசி வருவதாகவும் தகவல் வெளியாகியிருக்கிறது.

IPL Playoffs : 'மும்பைக்குதான் பெரிய பிரச்னை' - எந்தெந்த அணிகள் ப்ளே ஆப்ஸூக்கு செல்லும்?

தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டிருந்த ஐ.பி.எல் போட்டிகள் மீண்டும் தொடங்கவிருக்கிறது. நடப்பு சீசனின் க்ளைமாக்ஸை எட்டிவிட்டோம். இன்னும் 13 லீக் போட்டிகள்தான் எஞ்சியிருக்கிறது. ஆனால், இன்னமும் எந்த அணியும் ... மேலும் பார்க்க

IPL 2025 : 'வேகவேகமாக மாற்று வீரர்களை ஒப்பந்தம் செய்யும் அணிகள்!' - பட்லருக்கு பதில் யார் தெரியுமா?

இந்தியா - பாகிஸ்தான் பதற்ற நிலை காரணமாக ஒத்திவைக்கப்பட்டிருந்த ஐ.பி.எல் தொடர் நாளை மறுநாள் முதல் தொடங்கவிருக்கிறது. இந்நிலையில், வரவிருக்கும் போட்டிகளில் ஆட முடியாத சூழலில் இருக்கும் வீரர்களுக்கு பதில... மேலும் பார்க்க

IPL 2025 : 'புதிதாக வீரர்களை எடுக்க அனுமதி... ஆனால்!' - புதிய Temporary Replacement விதி என்ன?

'மீண்டும் தொடங்கும் ஐ.பி.எல்'இந்தியா - பாகிஸ்தான் இடையேயான பதற்றத்தால் ஐ.பி.எல் போட்டிகள் ஒரு வார காலத்துக்கு தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டிருந்தது. வருகிற மே 17 ஆம் தேதி முதல் மீண்டும் போட்டிகள் தொடங்... மேலும் பார்க்க

IPL 2025: 'குஜராத்துக்கு பட்லர்; ஆர்சிபிக்கு ஹேசல்வுட்!'- ஐ.பி.எல் யை தவறவிடும் வீரர்களின் பட்டியல்

இந்தியா - பாகிஸ்தான் பதற்ற நிலை காரணமாக இடையிலேயே நிறுத்தப்பட்டிருந்த ஐ.பி.எல் தொடர் வருகிற 17 ஆம் தேதி முதல் மீண்டும் தொடங்கவிருக்கிறது. IPL 2025இந்நிலையில், தங்களது சொந்த ஊர்களுக்கு திரும்பிய வெளிநா... மேலும் பார்க்க

`உங்க அடுத்த அத்தியாயத்திலும் வெற்றிபெற..!’ - ரோஹித் சர்மாவை வீட்டிற்கு அழைத்து வாழ்த்திய பட்னாவிஸ்

கிரிக்கெட் வீரர் ரோஹித் சர்மா சமீபத்தில் டெஸ்ட் போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். அவர் 67 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி இருக்கிறார். 2013-ம் ஆண்டு மேற்கு இந்திய தீவுகள் அணிக்கு எதிரான போட்ட... மேலும் பார்க்க