செய்திகள் :

IPL 2025 : 'புதிதாக வீரர்களை எடுக்க அனுமதி... ஆனால்!' - புதிய Temporary Replacement விதி என்ன?

post image

'மீண்டும் தொடங்கும் ஐ.பி.எல்'

இந்தியா - பாகிஸ்தான் இடையேயான பதற்றத்தால் ஐ.பி.எல் போட்டிகள் ஒரு வார காலத்துக்கு தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டிருந்தது. வருகிற மே 17 ஆம் தேதி முதல் மீண்டும் போட்டிகள் தொடங்கவிருக்கிறது. இந்நிலையில், மாற்று வீரர்கள் சம்பந்தமாக புதிய விதிமுறை ஒன்றை ஐ.பி.எல் நிர்வாகம் அறிமுகப்படுத்தியிருக்கிறது.

IPL
IPL

வழக்கமாக ஒரு சீசனில் ஒரு அணியின் 12 லீக் போட்டி வரைக்கும் ஒரு அணியால் மாற்று வீரர்களை ஒப்பந்தம் செய்துகொள்ள முடியும். அந்த வீரர்களை அடுத்தடுத்த சீசன்களுக்கு ரீட்டெய்னும் செய்து கொள்ள முடியும். அந்த வகையில் பெரும்பாலான அணிகள் இந்த சீசனில் 12 போட்டிகளில் ஆடிவிட்டதால் மாற்று வீரர்களை ஒப்பந்தம் செய்வதற்கான காலக்கெடு முடிந்துவிட்டது.

'அணிகளின் பிரச்னை!'

ஆனால், எஞ்சியிருக்கும் போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டு தாமதமாக தொடங்குவதால் பல வெளிநாட்டு வீரர்களாலும் பங்கேற்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. பட்லர், ஸ்டார்க், ஹேசல்வுட், ரூதர்போர்டு போன்ற முக்கியமான வீரர்களே போட்டிகளை தவறவிடுகின்றனர். இதனால் பெரும்பாலான அணிகள் பாதிப்படைகின்றன.

IPL Captains
IPL Captains

இதற்கு தீர்வு காணும் வகையில் 'Temporary Replacement' என்ற பெயரில் தற்காலிகமாக மாற்று வீரர்களை ஒப்பந்தம் செய்ய அணிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டிருக்கிறது. ஆனால், இப்படி தற்காலிகமாக ஒப்பந்தம் செய்யும் வீரர்களை அடுத்த சீசனுக்காக ரீட்டெய்ன் செய்ய முடியாது.

IPL 2025: 'குஜராத்துக்கு பட்லர்; ஆர்சிபிக்கு ஹேசல்வுட்!'- ஐ.பி.எல் யை தவறவிடும் வீரர்களின் பட்டியல்

இந்தியா - பாகிஸ்தான் பதற்ற நிலை காரணமாக இடையிலேயே நிறுத்தப்பட்டிருந்த ஐ.பி.எல் தொடர் வருகிற 17 ஆம் தேதி முதல் மீண்டும் தொடங்கவிருக்கிறது. IPL 2025இந்நிலையில், தங்களது சொந்த ஊர்களுக்கு திரும்பிய வெளிநா... மேலும் பார்க்க

`உங்க அடுத்த அத்தியாயத்திலும் வெற்றிபெற..!’ - ரோஹித் சர்மாவை வீட்டிற்கு அழைத்து வாழ்த்திய பட்னாவிஸ்

கிரிக்கெட் வீரர் ரோஹித் சர்மா சமீபத்தில் டெஸ்ட் போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். அவர் 67 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி இருக்கிறார். 2013-ம் ஆண்டு மேற்கு இந்திய தீவுகள் அணிக்கு எதிரான போட்ட... மேலும் பார்க்க

IPL Schedule : 'சென்னையில் போட்டி கிடையாது!' - ஐ.பி.எல் இன் புதிய அட்டவணை; முழுவிவரம்!

'புதிய அட்டவணை!'இந்தியா - பாகிஸ்தான் இடையே நிலவிவந்த பதற்றமான சூழல் ஐ.பி.எல் போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டிருந்தன. இப்போது மீண்டும் எஞ்சியிருக்கும் போட்டிகளுக்கான புதிய அட்டவணையை பிசிசிஐ வெளியிட்டுள்ளது.... மேலும் பார்க்க

Kohli : '12 ஆண்டுகளுக்கு முன் நீ கொடுத்த அந்த கயிறு..!' - கோலியின் ஓய்வு குறித்து நெகிழும் சச்சின்

'கோலி ஓய்வு!'இந்திய அணியின் சீனியர் வீரரான விராட் கோலி டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வை அறிவித்திருக்கிறார். விராட் கோலியின் ஓய்வு முடிவுக்கு சச்சின் ஒரு நெகிழ்ச்சியான வாழ்த்துச் செய்தியை பதிவிட்டிருக்க... மேலும் பார்க்க