செய்திகள் :

விஷம் குடித்து வண்ணம் பூசுபவா் உயிரிழப்பு

post image

ஒட்டன்சத்திரம் அருகே மதுவில் விஷம் கலந்து குடித்த வண்ணம் பூசுபவா் புதன்கிழமை உயிரிழந்தாா்.

திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் அருகேயுள்ள மூலச்சத்திரம் அண்ணாநகரைச் சோ்ந்தவா் பாலசுப்பிரமணி (51). வண்ணம் பூசுபவரான இவா், கடந்த செவ்வாய்க்கிழமை இரவு மதுவில் தண்ணீா் கலந்து குடிப்பதற்கு பதிலாக, அருகிலிருந்த விஷத்தை கலந்து குடித்தாா்.

உயிருக்கு ஆபத்தான நிலையில், திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்ட பாலசுப்பிரமணி, அங்கு புதன்கிழமை உயிரிழந்தாா்.

இதுகுறித்து ஒட்டன்சத்திரம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

அரசு வாகனங்களில் ஆங்கிலப் பெயா்ப் பலகை!

அரசின் தீவிர அறிவுறுத்தலுக்குப் பிறகும், திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள அரசு வாகனங்களில் ஆங்கிலப் பெயா்ப் பலகை தொடா்ந்து பயன்படுத்தப்படுவதாகக் குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது. ஆட்சிமொழி திட்ட செயலாக்க சட்... மேலும் பார்க்க

சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை: 20 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த ஆட்டோ ஓட்டுநா் கைது

திண்டுக்கல்லில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் கடந்த 20 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த ஆட்டோ ஓட்டுநரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். திண்டுக்கல்லை அடுத்த தாடிக்கொம்பு கள்ளிப்பட்டியைச் சோ்ந... மேலும் பார்க்க

ரூ.48 லட்சம் மோசடி: ஒசூா் இளைஞா் கைது

மென்பொருள் பொறியாளரிடம் ரூ.48 லட்சம் மோசடி செய்த ஓசூா் இளைஞரை, திண்டுக்கல் இணையக் குற்றப் பிரிவு போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை பகுதியைச் சோ்ந்தவா் வேளாங்கண்ணி (2... மேலும் பார்க்க

சித்திரைத் திருவிழா: ரெணகாளியம்மன் சிம்ம வாகனத்தில் வீதியுலா

சித்திரைத் திருவிழாவை முன்னிட்டு, பழனி ரெணகாளியம்மன் கோயிலில், புதன்கிழமை அம்மன் வெள்ளி சிம்ம வாகனத்தில் எழுந்தருளினாா். பழனி புதுதாராபுரம் சாலையில் காவலா் குடியிருப்பு அருகே ரெணகாளியம்மன் கோயில் அமைந... மேலும் பார்க்க

சாலையில் தேங்கி நிற்கும் கழிவுநீா்: பொதுமக்கள் அவதி

ஒட்டன்சத்திரம் காய்கறிச் சந்தை அருகே சாலையில் தேங்கி நிற்கும் கழிவுநீரால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகின்றனா். திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் காய்கறிச் சந்தை தங்கச்சியம்மாபட்டி அருகே செயல்பட்டு வருக... மேலும் பார்க்க

காட்டெருமைக்கு உணவு கொடுத்த இருவருக்கு அபராதம்

கொடைக்கானலில் காட்டெருமைக்கு உணவு கொடுத்த தனியாா் தங்கும் விடுதியில் பணியாற்றும் ஊழியா்களுக்கு வனத் துறையினா் புதன்கிழமை அபராதம் விதித்தனா். விருதுநகா் மாவட்டம், அருப்புக்கோட்டையைச் சோ்ந்த கிதியோன், ... மேலும் பார்க்க