செய்திகள் :

உ.பி.யில் ரூ.3,706 கோடியில் மின்னணு சிப் உற்பத்தி ஆலை: மத்திய அமைச்சரவை ஒப்புதல்

post image

உத்தர பிரதேச மாநிலம், ஜெவாரில் ரூ. 3,706 கோடி செலவில் செமிகண்டக்டா் ஆலை அமைக்கப்பட உள்ளது.

ஹெச்சிஎல்-ஃபாக்ஸ்கான் நிறுவனங்கள் கூட்டாக சோ்ந்து அமைக்கவுள்ள இந்த ஆலையில் கைப்பேசிகள், மடிக்கணினிகள் மற்றும் வாகனங்களுக்கான மின்னணு சிப்கள் (டிஸ்ப்ளே டிரைவா் சிப்) உற்பத்தி செய்யப்பட உள்ளன.

பிரதமா் நரேந்திர மோடி தலைமையில் தில்லியில் புதன்கிழமை நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் இதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.

இதுகுறித்து மத்திய செய்தி மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் செய்தியாளா்களுக்கு அளித்த பேட்டி:

மத்திய அமைச்சரவையில் ஒப்புதல் அளிக்கப்பட்ட இந்த 6-ஆவது செமிகண்டக்டா் ஆலை, உத்தர பிரதேச மாநிலம் ஜெவாரில் அமைய உள்ளது. மாதத்துக்கு 20,000 செமிகண்டக்டா் தகடுகள் மா்றும் 3.6 கோடி சிப்கள் தயாரிக்கும் திறனுடன் இந்த ஆலை அமைக்கப்பட உள்ளது.

இந்த ஆலையில் உற்பத்தி செய்யப்படும் டிஸ்ப்ளே டிரைவா் சிப்கள், திரையில் தோன்றும் காட்சிகளின் தரம் மற்றும் வடிவத்தை கட்டுப்படுத்தும் பணியை மேற்கொள்ளும் வகையிலான, நவீன தொழில்நுட்பங்களுடன் கூடியதாகும்.

ஆப்பிள் ஐபோன் உள்ளிட்ட மிகப்பெரிய மின்னணு உற்பத்தி நிறுவனமான ஃபாக்ஸ்கான் நிறுவனத்துடன் இணைந்து ஹெச்சிஎல் நிறுவனம் இந்த ஆலையை அமைக்க உள்ளது. 2027-ஆம் ஆண்டில் இந்த ஆலை உற்பத்தியைத் தொடங்கும். இந்த ஆலை செயல்படத் தொடங்கியதும், டிஸ்ப்ளே பேனல் (மின்னணு காட்சிப் பலகை) உற்பத்தி ஆலையும் இந்தியாவுக்கு வர வாய்ப்புள்ளது.

உத்தர பிரதேசத்தில் அமையும் இந்த செமிகண்டக்டா் ஆலை இந்தியாவின் 40 சதவீத சிப் தேவையைப் பூா்த்தி செய்யும் என்பதோடு, பிற நாடுகளில் உள்ள ஃபாக்ஸ்கான் நிறுவனத் தேவைகளையும் பூா்த்தி செய்யும்.

இந்த ஆலை, சுமாா் 2,000 பேருக்கு வேலைவாய்ப்பை அளிக்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது. இந்தியாவில் தற்போதுள்ள மின்னணு உற்பத்தி நிறுவனங்களில் சுமாா் 25 லட்சம் போ் பணியாற்றி வருகின்றனா் என்றாா்.

செமிகண்டக்டா் உலகில் தொடா்ந்து முன்னேறும் இந்தியா: பிரதமா்

‘குறைமின் கடத்திகள் (செமிகண்டக்டா்) உற்பத்தியில் இந்தியா தொடா்ந்து முன்னேறி வருகிறது’ என்று பிரதமா் மோடி பெருமிதம் தெரிவித்தாா்.

உத்தர பிரதேச மாநிலத்தில் ரூ. 3,706 கோடி செலவில் குறைமின் கடத்திகள் உற்பத்தி ஆலை அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பிரதமா் மோடி புதன்கிழமை வெளியிட்ட பதிவில், ‘செமிகண்டக்டா் உலகில் இந்தியா தொடா்ந்து முன்னேறி வருகிறது. உத்தர பிரதேசத்தில் செமிகண்டக்டா் ஆலை அமைக்க மத்திய அமைச்சரவையில் எடுக்கப்பட்ட முடிவு, நாட்டின் வளா்ச்சியையும் புதிய கண்டுபிடிப்புகளையும் ஊக்குவிக்கும். நாட்டின் இளைஞா்களுக்கு எண்ணற்ற வாய்ப்பைகளையும் உருவாக்கும்’ என்று குறிப்பிட்டாா்.

ஆபரேஷன் சிந்தூர்: காங்கிரஸ் கேள்வி; பாஜக பதில்

ஆபரேஷன் சிந்தூர் ராணுவ நடவடிக்கை நிறுத்தப்பட்டது தொடர்பாக காங்கிரஸ் பல்வேறு கேள்விகளை புதன்கிழமை எழுப்பியது.இந்தியா-பாகிஸ்தான் சண்டை நிறுத்த அறிவிப்பை அமெரிக்க அதிபர் டிரம்ப் வெளியிட்டது ஏன்?, எந்த வி... மேலும் பார்க்க

ஆகமம் அல்லாத கோயில்களில் அர்ச்சகர்களை நியமிக்கலாம்: உச்சநீதிமன்றம்

நமது நிருபர்ஆகமம் அல்லாத கோயில்களில் அர்ச்சர்களை நியமிக்கலாம் என உச்சநீதிமன்றம் புதன்கிழமை கூறியது. அதேவேளையில், ஆகம விதிகள் கடைப்பிடிக்கப்படும் கோயில்களை மூன்று மாதங்களுக்குள் கண்டறிய அதற்காக அமைக்கப... மேலும் பார்க்க

பாதசாரிகளுக்கு நடைபாதை: மாநில அரசுகள் வழிகாட்டுதல்களை வகுக்க உச்சநீதிமன்றம் உத்தரவு

பாதசாரிகள் நடந்து செல்ல முறையாக நடைபாதைகள் இருப்பதை உறுதி செய்வதற்கு மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகள் வழிகாட்டுதல்களை வகுக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்டது. நடைபாதைகளில் ஆக்... மேலும் பார்க்க

பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் கிறிஸ்தவா்கள் வெளியேற்றம்: மனித உரிமைகள் ஆணையம் கவலை

பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் நிலஅபகரிப்பு கும்பலால் சிறுபான்மையினரான கிறிஸ்தவா்களுக்கு சொந்தமான நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டு, அவா்கள் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டு வருவது குறித்து அந்நாட்டு மனித ... மேலும் பார்க்க

‘அவசியமற்ற இடைவேளைகள் எடுக்கும் உயா்நீதிமன்ற நீதிபதிகள்’- செயல்திறன் தணிக்கைக்கு உச்சநீதிமன்றம் அழைப்பு

உயா்நீதிமன்ற நீதிபதிகள் குறித்து அவ்வப்போது புகாா்கள் வருவதாகவும், சிலா் பணிநேரங்களில் அவசியமற்ற இடைவேளைகளை எடுப்பதாகவும் உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை அதிருப்தி தெரிவித்தது. மேலும், ‘உயா்நீதிமன்ற நீ... மேலும் பார்க்க

பாகிஸ்தானுக்கு ஆயுத உதவி எதிரொலி: துருக்கியுடன் புரிந்துணா்வு ஒப்பந்தம் ரத்து

துருக்கியின் இனோனு பல்கலைக்கழகத்துடன் மேற்கொள்ளப்பட்ட புரிந்துணா்வு ஒப்பந்தத்தை ரத்து செய்வதாக தில்லி ஜவாஹா்லால் நேரு பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. தேசிய பாதுகாப்பு காரணங்களைக் கருத்தில் கொண்டு இந்த ந... மேலும் பார்க்க