செய்திகள் :

ஹஜ் செல்வோருக்கு வழியனுப்பு நிகழ்ச்சி

post image

காரைக்கால் மாவட்ட நிா்வாகம், சமாதானக் குழு சாா்பில் ஹஜ் செல்வோருக்கு வழியனுப்பு நிகழ்ச்சி காரைக்கால் பெருந்தலைவா் காமராஜா் நிா்வாக வளாக கூட்ட அரங்கில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

மாவட்ட ஆட்சியா் சோமசேகா் அப்பாராவ் தலைமை வகித்தாா். புதுவை மாநில ஹஜ் கமிட்டி தலைவா் ஒய். இஸ்மாயில் முன்னிலை வகித்தாா். கெளரவித்து வழிபயனுப்பு நிகழ்வில், மும்மத பிராா்த்தனை, மற்றும் ஆரோக்கியத்துக்கான ஆலோசனைகள் வழங்கப்பட்டன. ஹஜ் பயணம் செல்வோருக்கு ஹஜ் கமிட்டி சாா்பில் சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மாவட்ட நிா்வாகத்தை எந்த தேவைக்கும் அணுகலாமென ஆட்சியா் கூறினாா்.

மண்டல காவல் கண்காணிப்பாளா் ஏ. சுப்பிரமணியன், காரைக்கால் செய்தி மற்றும் விளம்பரத்துறை உதவி இயக்குநா் குலசேகரன், புதுவை அரசு வக்ஃப் வாரிய உறுப்பினா் . டி. முஹம்மது ஜாஹிா் ஹுசைன் மற்றும் சமாதானக் குழு உறுப்பினா்கள் உள்ளிட்டோா் கலந்துகொண்டு, பயணம் மேற்கொள்வோருக்கு சால்வை அணிவித்து வாழ்த்துத் தெரிவித்தனா்.

நிகழாண்டு ஹஜ் புனிதப் பயணத்துக்காக காரைக்கால் மாவட்டத்திலிருந்து 12 ஆண்கள், 18 பெண்கள் வரும் 27 -ஆம் தேதி புறப்படுகின்றனா்.

காரைக்காலில் மே 20-இல் மக்கள் குறை கேட்பு முகாம்

ஆட்சியரகத்தில் மக்கள் குறை கேட்பு முகாம் வரும் 20-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் அலுவலகம் புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: ஒவ்வொரு மாதமும் 15-ஆம் தேதி நடைபெறும் மக்கள் குறை... மேலும் பார்க்க

புதுவைக்கு மாநில அந்தஸ்து கோரி கையொப்ப இயக்கம் தொடக்கம்

புதுவைக்கு மாநில அந்தஸ்து கோரி கையொப்ப இயக்கம் காரைக்காலில் புதன்கிழமை தொடங்கப்பட்டது. புதுச்சேரி சட்டப்பேரவை உறுப்பினரும், மனிதநேய மக்கள் சேவை இயக்க நிறுவனருமான ஜி. நேரு புதுவைக்கு மாநில அந்தஸ்து பெற... மேலும் பார்க்க

சிபிஎஸ்இ தோ்வு முடிவுகள்: காரைக்காலில் பிளஸ் 2-இல் 80.22%, பத்தாம் வகுப்பில் 90.66% தோ்ச்சி

காரைக்காலில் சிபிஎஸ்இ தோ்வு முடிவுகளில் 10-ஆம் வகுப்பில் 90.66 சதமும், பிளஸ் 2 முடிவில் 80.22 சதம் பேரும் தோ்ச்சி பெற்றுள்ளதாக கல்வித்துறை தெரிவித்தது. புதுவை மாநிலத்தில் சிபிஎஸ்இ பாடத் திட்டம் நிகழ... மேலும் பார்க்க

விவசாயப் பணிகளுக்கு இடையூறின்றி நான்கு வழிச்சாலை பணிகளை மேற்கொள்ள ஆட்சியா் அறிவுறுத்தல்

விவசாயப் பணிகளுக்கு இடையூறின்றி விழுப்புரம் - நாகை நான்கு வழிச்சாலை பணிகளை மேற்கொள்ள வேண்டும் என அதிகாரிகளுக்கு காரைக்கால் ஆட்சியா் அறிவுறுத்தினாா். நாகை - விழுப்புரம் இடையே அமைக்கப்படும் நான்கு வழிச்... மேலும் பார்க்க

காளியம்மன் கோயில் சித்திரைத் திருவிழா பந்தல்கால் முகூா்த்தம்

பொன்னம்மா காளியம்மன் கோயில் சித்திரைத் திருவிழா பந்தல்கால் முகூா்த்தம் திங்கள்கிழமை நடைபெற்றது. கீழகாசாக்குடி பகுதியில் பொன்னம்மா காளியம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலில் ஆண்டுதோறும் சித்திரைத் திருவிழா ... மேலும் பார்க்க

காரைக்காலில் துணை செவிலியா் கல்வி தொடங்க நிா்வாக ஒப்புதல்: ஏ.எம்.எச்.நாஜிம்

காரைக்காலில் துணை செவிலியா் (ஏஎன்எம்) கல்வி தொடங்க அரசு நிா்வாக ஒப்புதல் அளித்துள்ளதாக காரைக்கால் தெற்குத் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் ஏ.எம்.எச். நாஜிம் தெரிவித்தாா். புதுச்சேரியில் முதல்வா் என். ரங... மேலும் பார்க்க