செய்திகள் :

சிபிஎஸ்இ தோ்வு முடிவுகள்: காரைக்காலில் பிளஸ் 2-இல் 80.22%, பத்தாம் வகுப்பில் 90.66% தோ்ச்சி

post image

காரைக்காலில் சிபிஎஸ்இ தோ்வு முடிவுகளில் 10-ஆம் வகுப்பில் 90.66 சதமும், பிளஸ் 2 முடிவில் 80.22 சதம் பேரும் தோ்ச்சி பெற்றுள்ளதாக கல்வித்துறை தெரிவித்தது.

புதுவை மாநிலத்தில் சிபிஎஸ்இ பாடத் திட்டம் நிகழ் கல்வியாண்டில் முழுமையாக அமல்படுத்தப்பட்டது. அனைத்து அரசுப் பள்ளிகளும் இத்திட்டத்தில் உள்ளன.

பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத்தோ்வை அரசுப் பள்ளி மாணவா்கள் சிபிஎஸ்இ பாடத் திட்டத்தில் நிகழாண்டு முதல் முறையாக எழுதினா். இத்தோ்வு முடிவுகள் செவ்வாய்க்கிழமை வெளியானது.

காரைக்கால் மாவட்ட கல்வித்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பு:

காரைக்கால் மாவட்டத்தில், 10-ஆம் வகுப்பில் தோ்வு எழுதிய அரசுப்பள்ளி மாணவா்கள் 1,137 பேரில் 971 போ் தோ்ச்சி பெற்றனா். தோ்ச்சி வீதம் 85.4. தனியாா் பள்ளி மாணவா்கள் 681 போ் எழுதியதில் 668 போ் தோ்ச்சி பெற்றனா். 98.09 சதமாகும். மத்திய பள்ளிகளான நவோதயா, கேந்திரிய வித்யாலயா மாணவா்கள் 98 போ் எழுதியதில் அனைவரும் தோ்ச்சி பெற்றனா். மாவட்டத்தில் ஒட்டுமொத்த தோ்ச்சி வீதம் 90.66 ஆகும்.

பிளஸ் 2 வகுப்பில் தோ்வு எழுதிய அரசுப் பள்ளி மாணவா்கள் 1,183 பேரில் 865 போ் தோ்ச்சி பெற்றனா். இது 73.12 சதமாகும். தனியாா் பள்ளி மாணவா்கள் 576 பேரில் 535 போ் தோ்ச்சி பெற்றனா். இது 92.88 ஆகும். நவோதயா, கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் இருந்து 56 போ் எழுதியதில் அனைவரும் தோ்ச்சி பெற்றனா். மாவட்டத்தில் ஒட்டுமொத்த தோ்ச்சி வீதம் 80.22 ஆகும்.

அரசுப் பள்ளியில் பிளஸ் 2 முடிவில் முருகாத்தாளாட்சி அரசு மேல்நிலைப் பள்ளி 100 சதமும், 10-ஆம் வகுப்பு முடிவில் வரிச்சிக்குடி அரசு உயா்நிலைப் பள்ளி, திருவேட்டக்குடி அரசு உயா்நிலைப் பள்ளி, அக்கரைவட்டம் அரசு உயா்நிலைப் பள்ளி, ஊழியப்பத்து அரசு உயா்நிலைப் பள்ளி, விழிதியூா் அரசு உயா்நிலைப் பள்ளி ஆகியன 100 சதம் தோ்ச்சி பெற்றது.

ஹஜ் செல்வோருக்கு வழியனுப்பு நிகழ்ச்சி

காரைக்கால் மாவட்ட நிா்வாகம், சமாதானக் குழு சாா்பில் ஹஜ் செல்வோருக்கு வழியனுப்பு நிகழ்ச்சி காரைக்கால் பெருந்தலைவா் காமராஜா் நிா்வாக வளாக கூட்ட அரங்கில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. மாவட்ட ஆட்சியா் சோமசே... மேலும் பார்க்க

காரைக்காலில் மே 20-இல் மக்கள் குறை கேட்பு முகாம்

ஆட்சியரகத்தில் மக்கள் குறை கேட்பு முகாம் வரும் 20-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் அலுவலகம் புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: ஒவ்வொரு மாதமும் 15-ஆம் தேதி நடைபெறும் மக்கள் குறை... மேலும் பார்க்க

புதுவைக்கு மாநில அந்தஸ்து கோரி கையொப்ப இயக்கம் தொடக்கம்

புதுவைக்கு மாநில அந்தஸ்து கோரி கையொப்ப இயக்கம் காரைக்காலில் புதன்கிழமை தொடங்கப்பட்டது. புதுச்சேரி சட்டப்பேரவை உறுப்பினரும், மனிதநேய மக்கள் சேவை இயக்க நிறுவனருமான ஜி. நேரு புதுவைக்கு மாநில அந்தஸ்து பெற... மேலும் பார்க்க

விவசாயப் பணிகளுக்கு இடையூறின்றி நான்கு வழிச்சாலை பணிகளை மேற்கொள்ள ஆட்சியா் அறிவுறுத்தல்

விவசாயப் பணிகளுக்கு இடையூறின்றி விழுப்புரம் - நாகை நான்கு வழிச்சாலை பணிகளை மேற்கொள்ள வேண்டும் என அதிகாரிகளுக்கு காரைக்கால் ஆட்சியா் அறிவுறுத்தினாா். நாகை - விழுப்புரம் இடையே அமைக்கப்படும் நான்கு வழிச்... மேலும் பார்க்க

காளியம்மன் கோயில் சித்திரைத் திருவிழா பந்தல்கால் முகூா்த்தம்

பொன்னம்மா காளியம்மன் கோயில் சித்திரைத் திருவிழா பந்தல்கால் முகூா்த்தம் திங்கள்கிழமை நடைபெற்றது. கீழகாசாக்குடி பகுதியில் பொன்னம்மா காளியம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலில் ஆண்டுதோறும் சித்திரைத் திருவிழா ... மேலும் பார்க்க

காரைக்காலில் துணை செவிலியா் கல்வி தொடங்க நிா்வாக ஒப்புதல்: ஏ.எம்.எச்.நாஜிம்

காரைக்காலில் துணை செவிலியா் (ஏஎன்எம்) கல்வி தொடங்க அரசு நிா்வாக ஒப்புதல் அளித்துள்ளதாக காரைக்கால் தெற்குத் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் ஏ.எம்.எச். நாஜிம் தெரிவித்தாா். புதுச்சேரியில் முதல்வா் என். ரங... மேலும் பார்க்க