செய்திகள் :

புதுச்சேரி: `கவர்னர் கைலாஷ்நாதனை மாற்றச் சொன்னார் முதல்வர் ரங்கசாமி' – நாராயணசாமி சொல்வதென்ன ?

post image

புதுச்சேரியில் இன்று செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் முதல்வர் நாராயணசாமி, ``பஹல்காம் தாக்குதல், ராணுவ தாக்குதல் தொடர்பாக விவாதிக்க வேண்டும் என்று காங்கிரஸ் சார்பில் கேட்டதற்கு பிரதமர் மோடி மௌனம் காக்கிறார். பஹல்காம் தாக்குதல் தொடர்பாக காங்கிரஸ் எழுப்பிய கேள்விகளுக்கு பிரதமர் மோடி பதில் தரவேண்டும். புதுச்சேரி பா.ஜ.க பிரமுகர் உமாசங்கர் கொலை வழக்கை சி.பி.ஐ-க்கு மாற்ற வேண்டும் என்று காங்கிரஸ் கோரிக்கை வைத்திருக்கிறது.

ரங்கசாமி

அதேபோல பா.ஜ.க எம்.எல்.ஏ-க்களும், பா.ஜ.க ஆதரவு சுயேச்சை எம்.எல்.ஏ-க்களும் கோரிக்கை வைத்திருப்பதுடன், மத்திய உள்துறை அமைச்சகத்திடமும் மனு அளித்திருக்கின்றனர்.  இதன்மூலம் ஆளும் கட்சியினருக்கே புதுச்சேரி அரசின் மீதும், காவல்துறை மீதும் நம்பிக்கை இல்லை என்பது தெரிகிறது. சி.பி.ஐ விசாரணை கேட்டிருக்கும் பா.ஜ.க எம்.எல்.ஏ-க்களுக்கு முதல்வர் ரங்கசாமி பதிலளிக்க வேண்டும்.

புதுச்சேரி உளவாய்க்கால் பகுதியில் செயல்பட்டு வந்த போலி மதுபான தொழிற்சாலையை, தமிழகப் போலீஸார் கண்டுபிடித்து வழக்குப் பதிவு செய்திருக்கின்றனர். புதுச்சேரியில் செயல்பட்ட போலி மதுபான ஆலை விவகாரத்தில் தமிழக போலீஸாரும், கலால்துறையினரும் நடவடிக்கை எடுத்திருக்கின்றனர். ஆனால் புதுச்சேரி கலால்துறையும், காவல்துறையும் ஆழ்ந்த உறக்கத்தில் உள்ளது. பா.ஜ.க மற்றும் என்.ஆர்.காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் நடக்கும் ஊழல்களை வைத்து மகாபாரதமே எழுதலாம்.

ஆளுநர் கைலாஷ்நாதன், முதல்வர் ரங்கசாமி

தேர்தல் நேரத்தில் மட்டும்தான் முதல்வர் ரங்கசாமி மாநில அந்தஸ்து விவகாரத்தை கையில் எடுப்பார். அந்த வகையில் தற்போது மாநில அந்தஸ்து கேட்பது முதல்வர் ரங்கசாமியின் கபடநாடகம்.  புதுச்சேரிக்கு வந்த மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியாவிடம், கவர்னர் கைலாஷ்நாதனை மாற்றுங்கள் என்று கேட்டிருக்கிறார் முதல்வர் ரங்கசாமி. ஆனால், முடியாது என்று தெரிவித்திருக்கிறார் அமைச்சர் மன்சுக் மாண்டவியா. முதல்வருக்கும், கவர்னருக்கும் இடையே பனிப்போர் வெடித்திருக்கிறது." என்றார்.

Supreme Court -க்கு Droupadi Murmu -ன் 14 கேள்விகள்- Stalin கண்டனம் | BJP |Imperfect Show 15.5.2025

இன்றைய இம்பர்ஃபெக்ட் ஷோ ஃவில்,* AIR FORCE விமானத்தில் பறந்தபடி மீண்டும் ட்ரம்ப் பேச்சு!* பகல்காம் தாக்குதல்: ஐ.நாவிடம் ஆதாரத்தைக் கொடுத்து இந்தியா!* The Resistance Front - ஐ.நா-வில் இந்தியா முறையீடு?*... மேலும் பார்க்க

Turkey: 'நோ பர்மிஷன்' - பாகிஸ்தானுக்கு உதவிய துருக்கி; இந்தியாவின் நடவடிக்கை!

கடந்த மே 7 டு மே 10-ம் தேதி இந்தியா - பாகிஸ்தானுக்கு இடையே இருந்த பதற்ற நிலையில், பாகிஸ்தானுக்கு மிகுந்த ஆதரவை வழங்கியிருந்தது துருக்கி. இதற்கு பதிலடி தருவது போல, இந்தியாவில் உள்ள துருக்கி நிறுவனத்தின... மேலும் பார்க்க

`பிரதமர் மோடியின் போர் ராஜ தந்திரத்தை உலக நாடுகள் பாராட்டுகின்றன!’ – புகழும் புதுச்சேரி அதிமுக

புதுச்சேரி அ.தி.மு.க-வின் மாநில செயலாளர் அன்பழகன் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், ``புதுச்சேரி கவர்னர் கைலாஷ்நாதன் பதவியேற்றதில் இருந்து, அரசு அனுப்பும் அனைத்து மக்கள் நலத்திட்டங... மேலும் பார்க்க

Trump: "இந்தியா - பாக். பிரச்னையை நான்தான் சரிசெய்தேன் என்று கூறவில்லை, ஆனால்..." - ட்ரம்ப்

பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியான இந்தியாவின் 'ஆபரேஷன் சிந்தூருக்கு' பின், பாகிஸ்தான் இந்தியா மீது தாக்குதல் நடத்தியது. பதிலுக்கு, இந்தியாவும் தாக்குதல் நடத்த... இந்தியா - பாகிஸ்தான் எல்லையில் மிகுந்த ... மேலும் பார்க்க

`ஜம்மு & காஷ்மீர் மக்களுக்கு என்னுடைய சல்யூட்; பாகிஸ்தானால் இதை மறக்க முடியாது!' - ராஜ்நாத் சிங்

மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று ஶ்ரீநகரில் ராணுவ வீரர்கள் முன்னிலையில் உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது..."உங்களை (ராணுவ வீரர்கள்) காண்பதில் நான் பெருமை கொள்கிறேன். பிரதமர்... மேலும் பார்க்க

தூத்துக்குடி: அரசு மருத்துவமனையில் மது போதையில் நோயாளிகளுக்கு சிகிச்சை; வெளியேற்றப்பட்ட மருத்துவர்!

தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நாள்தோறும் நூற்றுக்கணக்கான நோயாளிகள், உள் மற்றும் புற நோயாளிகளாக சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் இன்று புற நோயாளிகள் பிரிவில் சிகிச்சை பெற... மேலும் பார்க்க