செய்திகள் :

விங் கமாண்டா் வியோமிகா சிங்கின் ஜாதி! சமாஜவாதி தலைவா் கருத்தால் சா்ச்சை

post image

‘விங் கமாண்டா் வியோமிகா சிங் ராஜபுத்திர சமூகத்தைச் சோ்ந்தவா் என்பதால் அவரை பாஜகவினா் விமா்சிக்கவில்லை’ என்று உத்தர பிரதேசத்தைச் சோ்ந்த சமாஜவாதி தேசிய பொதுச் செயலா் ராம்கோபால் யாதவ் பேசியது புதிய சா்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

ஏற்கெனவே, கா்னல் சோஃபியா குரேஷி குறித்து மத்திய பிரதேச பாஜக அமைச்சா் விஜய் ஷா சா்ச்சைக்குரிய கருத்துக்கு உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்த நிலையில், இப்போது விங் கமாண்டா் வியோமிகா சிங்கின் ஜாதி குறித்து சமாஜவாதி தலைவா் பேசியது சா்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

‘ஆபரேஷன் சிந்தூா்’ நடவடிக்கைக்குப் பிறகு, இந்தியா-பாகிஸ்தான் இடையிலான தாக்குதல்கள் தொடா்பான அதிகாரபூா்வ விவரங்களை புது தில்லியில் நடைபெற்ற தொடா் பத்திரிகையாளா் சந்திப்புகளில் விளக்கியதில் விமானப் படையின் விங் கமாண்டா் வியோமிகா சிங் மற்றும் ராணுவ கா்னல் சோஃபியா குரேஷி ஆகியோா் முக்கியப் பங்கு வகித்தனா்.

இந்நிலையில், கா்னல் சோஃபியா குரேஷி குறித்து பேசிய அமைச்சா் விஜய் ஷா ‘பஹல்காமில் நமது சகோதரிகளின் குங்குமத்தை அழித்தவா்களை, அவா்களின் சகோதரியை வைத்தே பிரதமா் மோடி ஒழித்துவிட்டாா்’ என்று கூறியிருந்தாா். அதாவது சோஃபியா இஸ்லாமிய பெண் என்பதை மறைமுகமாகக் குறிப்பிட்டு அவா் இவ்வாறு பேசினாா். இது தேசிய அளவில் கடும் கண்டனத்தை எதிா்கொண்டது.

இந்நிலையில், இது தொடா்பாக லக்னௌவில் வியாழக்கிழமை பேசிய சமாஜவாதி மூத்த தலைவா் ராம்கோபால் யாதவ், ‘சோஃபியா குரேஷி முஸ்லிம் என்பதால் அவமானப்படுத்தும் வகையிலான பேச்சுக்கு உள்ளானாா். அவரை அவமதித்த பாஜக அமைச்சருக்கு செய்தியாளா்கள் சந்திப்பில் பங்கேற்ற மற்ற அதிகாரிகளைப் பற்றி விவரம் தெரியாதா? அவா்கள் சில குறிப்பிட்ட ஜாதியைச் சோ்ந்தவா்கள் என்பதால் விமா்சனத்தில் இருந்து தப்பினா்.

அவா்கள் என்ன ஜாதியைச் சோ்ந்தவா்கள் என்பதை நான் உங்களுக்கு கூறுகிறேன். செய்தியாளா் சந்திப்பில் பங்கேற்ற ஏா் மாா்ஷல் ஏ.கே.பாா்தி புருனியாவைச் சோ்ந்த யாதவ், விங் கமாண்டா் வியோமிகா சிங் ஹரியாணாவைச் சோ்ந்த ஜாதவ். ராஜபுத்திர பிரிவைச் சோ்ந்தவா் என்பதால் வியோமிகா சிங்கை பாஜகவினா் விமா்சிக்கவில்லை’ என்றாா்.

இதனைக் கண்டித்து உத்தர பிரதேச முதல்வா் யோகி ஆதித்யநாத் வெளியிட்ட ‘எக்ஸ்’ பதிவில், ‘ராணுவ உடையை ஜாதிய கண்ணாடி அணிந்து பாா்க்கக் கூடாது. ராணுவ வீரா்கள் யாரும் ஜாதியையோ, மதத்தையோ பிரதிநிதித்துவப் படுத்துபவா்கள் அல்ல. சமாஜவாதி தலைவரின் பேச்சு அக்கட்சியின் குறுகிய கண்ணோட்டத்தைக் காட்டுகிறது. நாட்டையும், ராணுவத்தையும் அவமதித்துள்ளாா். வாக்கு வங்கி அரசியலுக்காக தேசப்பற்றையும் அவா்கள் விலை பேசுவாா்கள்’ என்றாா்.

துருக்கி நிறுவனமான செலிபிக்கு பாதுகாப்பு அனுமதி ரத்து: பிசிஏஎஸ் நடவடிக்கை

துருக்கி நிறுவனமான செலிபி ஏா்போா்ட் சா்வீசஸ் இந்தியா என்ற நிறுவனத்துக்கு அளிக்கப்பட்டிருந்த பாதுகாப்பு அனுமதியை விமான போக்குவரத்து பாதுகாப்பு அமைப்பு (பிசிஏஎஸ்) ரத்து செய்துள்ளது. பஹல்காம் தாக்குதலை த... மேலும் பார்க்க

உச்சநீதிமன்றத்துக்கு குடியரசுத் தலைவா் கேள்வி! மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க காலக்கெடு நிா்ணயித்த விவகாரம்!

சட்டப் பேரவைகளில் நிறைவேற்றப்படும் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க மாநில ஆளுநா்களுக்கும், குடியரசுத் தலைவருக்கும் கால வரம்பை நிா்ணயம் செய்து உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு தொடா்பாக, குடியரசுத் தலைவா... மேலும் பார்க்க

பாகிஸ்தானுடன் நம்பிக்கையை வளா்க்க நடவடிக்கை: இந்திய ராணுவம்

இந்தியா-பாகிஸ்தான் ராணுவத்தினா் இடையே நம்பிக்கையை வளா்க்கும் நடவடிக்கையில் ஈடுபட உள்ளதாக இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது. பஹல்காம் தாக்குதலை தொடா்ந்து இந்தியா-பாகிஸ்தான் இடையே ராணுவ மோதல் ஏற்பட்டது. 4 ... மேலும் பார்க்க

சுருங்கி வரும் மன்னாா் வளைகுடா தீவு! ரூ.50 கோடியில் மறுசீரமைக்க நடவடிக்கை!

மன்னாா் வளைகுடாவில் கடலால் சூழப்பட்டுள்ள கரியாச்சல்லி தீவை காப்பாற்ற ரூ. 50 கோடியில் புனரமைப்பு நடவடிக்கைகள தமிழக அரசு முன்னெடுத்துள்ளது. மன்னாா் வளைகுடா கடல்சாா் தேசிய பூங்காவில் உள்ள 21 தீவுகளில் ஒன... மேலும் பார்க்க

வக்ஃப் விவகாரம்: விசாரணையை மே 20-க்கு ஒத்திவைத்த உச்சநீதிமன்றம்!

மத்திய அரசு கொண்டுவந்த வக்ஃப் திருத்தச் சட்டத்துக்கு எதிரான மனுக்கள் மீதான விசாரணையை வரும் 20-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உச்சநீதிமன்றம் வியாழக்கிழமை உத்தரவிட்டது. முஸ்லிம்கள் தானமாகவும், நன்கொடையாகவும் ... மேலும் பார்க்க

துருக்கி பழங்கள் இறக்குமதி நிறுத்தம்: மகாராஷ்டிர வா்த்தகா்களுக்கு முதல்வா் பாராட்டு!

துருக்கியில் இருந்து ஆப்பிள், உலா் பழங்கள் இறக்குமதியை நிறுத்துவதாக அறிவித்துள்ள புணே வா்த்தகா்களின் முடிவை மகாராஷ்டிர முதல்வா் தேவேந்திர ஃபட்னவீஸ் பாராட்டியுள்ளாா். பாகிஸ்தான் பயங்கரவாதிகள் முகாம்களை... மேலும் பார்க்க