செய்திகள் :

முக்கியத்துவம் வாய்ந்த செயற்கைக்கோள்! - இஸ்ரோ தலைவா் வி.நாராயணன்

post image

ஸ்ரீஹரி கோட்டாவிலிருந்து மே 18-இல் விண்ணில் ஏவப்படும் செயற்கைக்கோள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது என்று இஸ்ரோ தலைவா் வி.நாராயணன் கூறினாா்.

பெங்களூரிலிருந்து வியாழக்கிழமை காலை சென்னை விமான நிலையம் வந்த இஸ்ரோ தலைவா் வி.நாராயணன் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

இந்திய விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோ கடந்த ஜனவரி மாதம் ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து 100-ஆவது செயற்கைக்கோளை வெற்றிகரமாக விண்ணில் ஏவியது. இதையடுத்து வரும் 18-ஆம் தேதி 101-ஆவது செயற்கைக்கோளை விண்ணில் செலுத்தவுள்ளோம்.

பிஎஸ்எல்வி சி61 எக்ஸ் எல் எனப்படும் இந்த ராக்கெட் மூலம் செலுத்தப்படும் ஆா்ஐஎஸ்ஏடி-1பி செயற்கைகோள் மூலம் பூமியில் உள்ள சிறிய அளவிலான பொருள்களை கூட துல்லியமாக கண்டறிய முடியும். உலகநாடுகளிடம் உள்ள சிறந்த கேமராக்களில் ஒன்று நமது விண்வெளி மையத்தில் உள்ளது.

இந்தியா-பாகிஸ்தான் தாக்குதலிலும் நமது செயற்கைக்கோள்கள் முக்கிய பங்கு வகித்தன. இந்தியா தற்போது அபரிமிதமான வளா்ச்சி அடைந்த நாடாக உள்ளது. நமது செயற்கைக்கோள்கள் அனைத்தும் தனது பணியை திறம்பட செய்து கொண்டிருக்கின்றன என்றாா் அவா்.

பிளஸ் 1 பொதுத்தேர்வு: திருவள்ளூர் 25,547 பேர் தேர்ச்சி!

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டத்தில் பிளஸ்1 பொதுத்தேர்வில் மாணவ, மாணவிகள் 25,547 பேர் தேர்ச்சி பெற்றுள்ளதோடு, 3687 பேர் தோல்வி அடைந்த நிலையில், மாநில அளவில் 36 இடம் பிடித்துள்ளதாக மாவட்ட முதன்மைக் கல... மேலும் பார்க்க

10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு: சிவகங்கை மாவட்டம் மாநில அளவில் முதலிடம்!

சிவகங்கை: பத்தாம் வகுப்பு அரசு பொதுத் தேர்வில் 98.31 சதவீதம் தேர்ச்சி விகிதம் பெற்று சிவகங்கை மாவட்டம் மாநில அளவில் முதலிடம் பிடித்து சாதனை படைத்தது. பத்தாம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு சிவகங்கை மாவட்டத... மேலும் பார்க்க

10-ம் வகுப்பு முடிவுகள்: தூத்துக்குடி 3-வது இடம்! 96.76% தேர்ச்சி!

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டத்தில், 10 ஆம் வகுப்பு தேர்வில் 96.76 சதவீத மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளதையடுத்து இந்த மாவட்டம் 3 ஆவது இடம் பெற்றுள்ளது.தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 308 நடுநிலை... மேலும் பார்க்க

திருவள்ளூர் மாவட்டத்துக்கு 36வது இடம்! பத்தாம் வகுப்பில் 89.60% தேர்ச்சி!

திருவள்ளூர்: தமிழகத்தில் பத்தாம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் இன்று வெளியாகின. திருவள்ளூர் மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் 89.60 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ள நிலையில் கடந்தாண்டை வி... மேலும் பார்க்க

10-ம் வகுப்பு முடிவுகள்: தஞ்சாவூர் மாவட்டம் 12-வது இடம்! 95.57% தேர்ச்சி!

தஞ்சாவூர்: எஸ்.எஸ்.எல்.சி. பொதுத் தேர்வில் தஞ்சாவூர் மாவட்டம் 95.57 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்று, மாநில அளவில் 12-வது இடத்தைப் பெற்றுள்ளது.மாவட்டத்தில் 408 பள்ளிகளைச் சேர்ந்த 29 ஆயிரத்து 275 மாணவ, மாண... மேலும் பார்க்க

செங்கல்பட்டு: 89.82% தேர்ச்சி; மாநிலத்தில் 35 வது இடம்!

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் செங்கல்பட்டு மாவட்டத்தின் தேர்வு முடிவுகள் வெளிவந்துள்ளன. செங்கல்பட்டு மாவட்டத்தைப் பொருத்தவரை 363 பள்ளிகளை சேர்ந்த மாணவ மாணவிகள் தேர்வு எழுதினர். இதில் 79 பள்ளிகளில் மா... மேலும் பார்க்க