செய்திகள் :

செங்கல்பட்டு: 89.82% தேர்ச்சி; மாநிலத்தில் 35 வது இடம்!

post image

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் செங்கல்பட்டு மாவட்டத்தின் தேர்வு முடிவுகள் வெளிவந்துள்ளன.

செங்கல்பட்டு மாவட்டத்தைப் பொருத்தவரை 363 பள்ளிகளை சேர்ந்த மாணவ மாணவிகள் தேர்வு எழுதினர். இதில் 79 பள்ளிகளில் மாணவர்கள் 100% தேர்ச்சி பெற்றுள்ளனர்.

இம்மாவட்டத்தில் 15,192 மாணவர்களும் 14,927 மாணவிகளும் தேர்வு எழுதினர். இதில் 13,125 மாணவர்களும், 13,927 மாணவிகளும் மொத்தம் 27052 மாணவ மாணவிகள் தேர்ச்சி அடைந்துள்ளனர்.

செங்கல்பட்டு மாவட்டத்தின் தேர்ச்சி சதவீதம் 89. 82 ஆக உள்ளது. செங்கல்பட்டு மாவட்டம் 35 வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு 33-வது இடத்தில் இருந்த செங்கல்பட்டு மாவட்டம் இந்த முறை 35-வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.

செங்கல்பட்டு மாவட்ட அரசு பள்ளியின் நிலை என்ன?

செங்கல்பட்டு மாவட்டத்தில் 146 அரசுப் பள்ளிகளைச் சேர்ந்த மாணவ மாணவிகள் தேர்வு எழுதினர். இதில் 14 அரசுப் பள்ளிகள் மட்டுமே 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளன.

அரசுப் பள்ளியின் தேர்ச்சி 84.15 சதவீதமாக உள்ளது. கடந்த ஆண்டு அரசுப் பள்ளியின் தேர்ச்சி 79 சதவீதமாக இருந்த நிலையில், இந்த ஆண்டு தேர்ச்சி சதவீதம் சற்று அதிகரித்துள்ளது.

இந்த ஆண்டு அரசுப் பள்ளிகளின் தேர்ச்சி சதவீத அடிப்படையில் செங்கல்பட்டு மாவட்டம் 35 வது இடத்தை பிடித்து இருக்கிறது. கடந்தாண்டு 36-வது இடத்தை பிடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: 10ஆம் வகுப்புத் தேர்வு முடிவு: சென்னையில் தேர்ச்சி விகிதம் குறைவு!

வடகாடு மோதல் சம்பவம்: தேசிய ஆதிதிராவிடர் ஆணையக்குழு ஆய்வு!

ஆலங்குடி: புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகேயுள்ள வடகாடு மோதல் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பட்டியலின மக்களை சந்தித்து தேசிய ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் ஆணையக்குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர்.ஆலங்கு... மேலும் பார்க்க

10 வகுப்பு பொதுத் தேர்வில் 499 மதிப்பெண் எடுத்து பொள்ளாச்சி மாணவி முதலிடம்!

கோவை பொள்ளாச்சி மாணவி சுபஸ்ரீ பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார்.தமிழக பள்ளிக் கல்வித் துறை அறிவித்து இருந்தபடி, இன்று(மே 16) பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள்... மேலும் பார்க்க

'ஓபிஎஸ் பாஜக கூட்டணியில்தான் இருக்கிறார்' - நயினார் நாகேந்திரன்

முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் பாஜக கூட்டணியில்தான் இருக்கிறார் என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார். மதுரை திருப்பரங்குன்றத்தில் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த அவர், "தமிழ்நாட்டி... மேலும் பார்க்க

கடுங்கோடை காலம் இன்றுடன் முடிகிறது; இனி.. பிரதீப் ஜான்

சென்னை : கடுமையான கோடைக்காலம் இன்றுடன் நிறைவு பெறுகிறது. வட தமிழகம் மற்றும் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம்மாவட்டங்களில் இன்று முதல் மழைக்கான வாய்ப்பு அதிகரித்துள்ளதாக தமிழ்நாடு வெதர்மே... மேலும் பார்க்க

கோவை மத்திய சிறையில் சாதனை: 100% தேர்ச்சி!

கோவைமத்தியசிறையிலிருந்துஇந்தாண்டு பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய 44 கைதிகளும் தேர்ச்சி பெற்று சாதனை படைத்து உள்ளனர். பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியானதையடுத்து, கோவை மத்திய சிறையில் ... மேலும் பார்க்க

10ஆம் வகுப்புத் தேர்வு முடிவு: 6 மத்திய சிறைகளில் 100% தேர்ச்சி!

10ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் இன்று(மே 16) வெளியான நிலையில், 6 மத்திய சிறைகளில் 100% பேர் தேர்ச்சியடைந்துள்ளனர்.தமிழகத்தில் மாநில பாடத்திட்டத்தில் நடைபெற்ற பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவு... மேலும் பார்க்க