செய்திகள் :

'ஓபிஎஸ் பாஜக கூட்டணியில்தான் இருக்கிறார்' - நயினார் நாகேந்திரன்

post image

முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் பாஜக கூட்டணியில்தான் இருக்கிறார் என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.

மதுரை திருப்பரங்குன்றத்தில் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த அவர்,

"தமிழ்நாட்டில் தற்போதைய ஆட்சி, மக்களுக்கு எதிரான ஆட்சி. இந்த ஆட்சியை அகற்ற வேண்டும் என்றால் எல்லாரும் ஒன்றிணைய வேண்டும். நாட்டு மக்களின் நலன் கருதி அந்தந்த கட்சித் தலைவர்கள் முடிவு எடுக்க வேண்டும். ஆனால், அவர்களின் முடிவுக்கு நான் எந்த கருத்தும் சொல்ல முடியாது.

தேர்தலுக்கு இன்னும் ஓராண்டு உள்ளது. கூட்டணி தொகுதி விவரங்கள் பின்னர் பேசப்படும்.

ஓ. பன்னீர்செல்வம் ஏற்கெனவே பாஜக கூட்டணியில் இருக்கிறார். எனவேதான் அமித் ஷா வருகையின்போது அவரை அழைக்கவில்லை. அமித் ஷா வந்ததற்கான காரணம் வேறு. ஓபிஎஸ் கூட்டணியில் இருப்பதால் அவரை சந்திக்க வேண்டிய அவசியம் ஏற்படவில்லை. இபிஎஸ், ஓபிஎஸ் ஆகிய இருவருமே பாஜக கூட்டணியில்தான் இருக்கின்றனர்.

அதிமுக உள்கட்சி பிரச்னைகள் நீதிமன்றத்தில் விசாரணையில் இருக்கிறது. இப்போது இபிஎஸ்தான் கட்சியின் தலைவராக இருக்கிறார். பின்னர் நிலைமை மாறும்போது பார்க்கலாம்" என்று கூறினார்.

மேலும் தமிழ்நாட்டில் தினசரி நடைபெறும் கொலை, போதைப்பொருள் புழக்கம் போன்ற குற்றச் சம்பவங்கள் வழக்கமானதாக மாறிவிட்டதாகவும், காவல்துறையை முதல்வர் முழுமையாக கையாள முடியவில்லை என்றும் தெரிவித்தார்.

இதையும் படிக்க | 'ஆபரேஷன் சிந்தூர் ட்ரைலர்தான்; பயங்கரவாதிகளுக்கு நிதி அளித்த பாகிஸ்தான்' - ராஜ்நாத் சிங்

மே 29, 30-ல் அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்!

சென்னையில் மே 29, 30-ல் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கட்சியின் வளர்ச்சிப் பணிகள் தொடர்பாக ஆலோசனை நடைபெறவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இ... மேலும் பார்க்க

மதுரையில் மழை! தமிழகத்தில் எங்கெல்லாம் மழை பெய்கிறது?

கோடை வெய்யில் கொளுத்திவந்த நிலையில், இன்று பிற்பகலில் மதுரையில் பரவலாக மழை பெய்துள்ளது. மேலும் பார்க்க

ஊட்டத்தூர் கோயிலில் முதலாம் பராந்தக சோழனின் கல்வெட்டு கண்டெடுப்பு!

ஊட்டத்தூர் சுத்தரத்தனேசுவர் கோயிலில் முதலாம் பராந்தக சோழனின் கல்வெட்டு கண்டெடுக்கப்பட்டுள்ளது. திருச்சி மாவட்டம் ஊட்டத்தூர் சுத்தரத்தனேசுவர் கோயிலில் நடைபெற்று வரும் திருப்பணிகளை சுற்றுலா, பண்பாடு மற்... மேலும் பார்க்க

தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்துக்கு மழை!

தமிழ்நாட்டில் பெரும்பாலான மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்துக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. திருச்சிராப்பள்ளி, அரியலூர், பெரம்பலூர், மயிலாடுதுறை, தஞ்சாவூ... மேலும் பார்க்க

10ஆம் வகுப்பில் ஒரே மதிப்பெண் எடுத்த இரட்டைச் சகோதரிகள்!

கோவை : கூலித் தொழிலாளியின் இரட்டை மகள்கள் ஒரே மதிப்பெண் பெற்று சாதனை படைத்துள்ளனர். அருமையான வெற்றி என கொண்டாடி மகிழ்கிறார்கள் பெற்றோரும் உறவினர்களும்.கோவை மாவட்டம், ராமநாதபுரத்தைச் சேர்ந்த கூலி வேலை ... மேலும் பார்க்க

வடகாடு மோதல் சம்பவம்: தேசிய ஆதிதிராவிடர் ஆணையக்குழு ஆய்வு!

ஆலங்குடி: புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகேயுள்ள வடகாடு மோதல் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பட்டியலின மக்களை சந்தித்து தேசிய ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் ஆணையக்குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர்.ஆலங்கு... மேலும் பார்க்க