`யார் இந்த தியாகி... திமுக-வின் புதிய பவர் சென்டர் ரத்தீஷா?"- கேள்விகள் எழுப்பும...
கடுங்கோடை காலம் இன்றுடன் முடிகிறது; இனி.. பிரதீப் ஜான்
சென்னை : கடுமையான கோடைக்காலம் இன்றுடன் நிறைவு பெறுகிறது. வட தமிழகம் மற்றும் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம்மாவட்டங்களில் இன்று முதல் மழைக்கான வாய்ப்பு அதிகரித்துள்ளதாக தமிழ்நாடு வெதர்மேன் என அறியப்படும் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.
வானிலை நிலவரங்களை கணித்து சமூக வலைத்தளப் பக்கத்தில் பகிர்ந்து வருகிறார் பிரதீப் ஜான்.
இன்று அவர் கூறியிருப்பதாவது, தமிழகத்தின் மிகத் தனித்துவமான ஆண்டாக இது மாறியிருக்கிறது. இந்த ஆண்டு இதுவரை தமிழகத்தில் வெப்ப அலை ஏற்படவில்லை. சென்னையில் வெப்பம் 40 டிகிரி செல்சியஸை எட்டவில்லை. அதுவும் ஒரு மே மாதத்தில் சென்னையில் வெப்பநிலை ஒரு நாள் கூட 40 டிகிரி செல்சியஸை தொடவில்லை. இது கடந்த 2022, 2018, 2004 என கடந்த 25 ஆண்டுகளில் மூன்று முறை நடந்தது போல தற்போது 2025ல் நிகழ்ந்துள்ளது.